தமிழகம்

தமிழகம்

பசும்பொன்னில் டிஜிபி ஆய்வு போலீசாரிடம் குறை கேட்பு

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115வது ஜெயந்தி, 60 வது குருபூஜை விழா பாதுகாப்பு பணிக்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், பசும்பொன் கிராமத்தில் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து டிஜிபி சைலேந்திர பாபு ஆய்வு செய்தார். கமுதி ரஹ்மானியா கார்டன் உயர்நிலைப்பள்ளியில் தங்கியுள்ள ஆண் போலீசார், சத்திரிய நாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தங்கியுள்ள பெண் போலீசாரிடம் வசதிகள் குறித்து கேட்டறிந்தார். அங்கு போலீசாருக்கு சமைத்து வைத்திருந்த உணவை சாப்பிட்டு பரிசோதித்தார். தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க், ராமநாதபுரம் சரக டிஐஜி மயில்வாகனம், ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை ஆகியோர் உடன் இருந்தனர். நிருபர் : காமேஷ் பாரதி, ராமநாதபுரம்...
தமிழகம்

சிவகாசி மாநகராட்சி கூட்டத்தில், திமுக உறுப்பினர்கள் கடும் வாக்குவாதம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியின் சாதாரண கூட்டம், மேயர் சங்கீதா இன்பம் தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, துணை மேயர் விக்னேஷ்பிரியா, மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டம் துவங்கியவுடன், மாமன்றத்தில் அதிக எண்ணிக்கையில் உள்ள திமுக உறுப்பினர்கள், மாநகராட்சியில் சுகாதாரப் பணிகள் முற்றிலும் நடைபெறாத நிலை உள்ளது என்று கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வார்டு பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை அகற்றுவதற்கு போதிய வாகன வசதிகள் இல்லாமல் இருக்கிறது. இந்த நிலையில் ஆணையாளர், மேயர், துணை மேயருக்கு புது கார்கள் வாங்கியது அவசியமா என்று கூறி கடும் வாக்குவாதம் செய்தனர். இதற்கு பதிலளித்து பேசிய ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, மாநகராட்சி பொது நிதியிலிருந்து கார்கள் வாங்கப்படவில்லை. அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள தனி நிதியில் இருந்து தான் கார்கள் வாங்கப்பட்டுள்ளது என்று கூறினார். பெரும்பாலான உறுப்பினர்கள்...
தமிழகம்

காதலித்த பெண்ணை கர்ப்பிணியாக்கி மற்றொரு பெண்ணை திருமணம் செய்ய முயன்ற மணமகனை கையும், களவுமாக பிடித்த காதலி , காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம்.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள எஸ் எம் பி கல்யாண மஹாலில், இன்று காலை 7.30 மணி முதல் 9 மணி வரை திருமணம் செய்வது தொடர்பாக, திருமங்கலம் பாண்டியன் நகரைச் சேர்ந்த வேலுச்சாமி மகன் சின்னசாமிக்கும் , மற்றொரு பெண்ணுக்கும் திருமணம் நடைபெறுவதை அறிந்த, சின்னசாமியின் முன்னால் காதலியான நாகப்பிரியா, திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே ஓட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன் ஆட்டோ தொழிலாளியான இவருடைய மகளாவார். .சின்னச்சாமி பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார், சிவில் இன்ஜினியர் படித்து முடித்தவர் என்று கூறப்படுகிறது. மேலும் நாக பிரியாவிற்கு ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெறாமல் இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது .இதனிடையே தான் சின்னச்சாமி நாக பிரியா - வை காதலித்து கர்ப்பம் ஆக்கியுள்ளார். நாகப்பிரியாவும், சின்னச்சாமியும் உறவினர்கள் என்று கூறப்பட்டுள்ள நிலையில் ,...
தமிழகம்

திருமங்கலம் அருகே நல்லமரம் கிராமத்தில் பொதுப்பாதையை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டியதை, நீதிமன்ற உத்தரவின் பேரில், போலீஸ் பாதுகாப்புடன், வருவாய் துறை அதிகாரிகள் நில அளவை செய்து, ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு உண்டான நடவடிக்கை.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த பேரையூர் தாலுகாவில் உள்ள நல்ல மரம் கிராமத்தில் சிலர் பொதுப் பாதைகளை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டி, கிராம மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதுடன் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து உள்ளதால் , இது குறித்து பலமுறை எச்சரித்தும் ஆக்கிரமிப்பாளர்கள் அலட்சியப்படுத்தியதால் , கிராம மக்களின் நலன் கருதி வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் நில அளவையர்கள் போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்ற உத்தரவின் பேரில், நல்ல மரம் கிராமத்தில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்களை நில அளவை செய்து விரைவில் அகற்றும் பணியில் ஈடுபடுவதற்கு உண்டான நடவடிக்கையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது .  இப்பணியின் போது பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டன. செய்தியாளர் : வி காளமேகம் மதுரை மாவட்டம்...
தமிழகம்

வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் 108 உற்பத்தியாளர் குழுக்களுக்கு ஆதார நிதியாக ரூபாய் 81 இலட்சம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தகவல்

மதுரை மாவட்டம் மதுரை கிழக்கு மற்றும் மேலூர் ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட ஊராட்சிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து செய்தியாளர்களிடம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆய்வு மேற்கொண்டார். குறிப்பாக, மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம், கள்ளந்திரி மேலூர் ஊராட்சி ஒன்றியம், கிடாரிப்பட்டி மற்றும் ஏ.வலையப்பட்டி ஆகிய ஊராட்சிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு புதுவாழ்வுத் திட்டத்தின் கீழ் பயன்பெற்றுள்ள உற்பத்தியாளர் குழுக்களைச் சாரந்த உறுப்பினர்களுடன் திட்ட செயல்பாடுகள் குறித்து கலந்துரையாடினார். தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், தெரிவித்தாவது:- தமிழ்நாடு அரசு ஊரகப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் நலனுக்காக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்டம்...
தமிழகம்

மாற்றுத்திறனாளிகள் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள சச்சின் சிவாவுக்கு கேடயம் பரிசு அமைச்சர் முன்னாள் அமைச்சர் உதயகுமார் வழங்கினார்

தேவரின் தங்க கவச விவகாரத்தில் எங்கள் தரப்பிற்கு எதிராக பல சூழ்ச்சிகள் செய்யப்பட்டது, எதிர் வரும் காலங்களில் பசும்பொன்னுக்கு எடப்பாடி பழனிச்சாமி வருவார் என மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி மதுரை காந்தி மியூசியத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்ட கிரிக்கெட் வீரர் சச்சின் சிவாவுக்கு மதுரை பாரதி யுவகேந்திரா அமைப்பு சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. யுவகேந்திரா நிறுவனர் நெல்லை பாலு தலைமை தாங்கினார். தமிழக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சச்சின் சிவாவுக்கு சால்வை மற்றும் மாலை அணிவித்து கேடயம் பரிசு வழங்கி பாராட்டினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.பி.உதயகுமார் கூறுகையில் "வட கிழக்கு பருவ மழை நாளை முதல் தொடங்க உள்ளது, அரசின் மெத்தன போக்கினால் மழை நீர் வடிகாலில் செய்தியாளர் விழுந்து இறந்துள்ளார், வட கிழக்கு...
தமிழகம்

அலங்காநல்லூர் பாலமேடு பகுதிகளில்.42 லட்சம் மதிப்பில் அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகளை வெங்கடேசன் எம் எல் ஏ தொடங்கி வைத்தார்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியத்திற்குட்பட்ட வலையபட்டி ஊராட்சி மற்றும் பாலமேடு பேரூராட்சி பகுதிகளில் அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தில் 42 லட்ச ரூபாய் மதிப்பிலான மக்கள் நலத் திட்ட பணிகளை சோழவந்தான் வெங்கடேசன் எம் எல் ஏ தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு வடக்குமாவட்ட திமுக அவைத் தலைவர் எம் ஆர் எம் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். பாலமேடு பேரூராட்சி தலைவர் சுமதி பாண்டியராஜன். வலையபட்டி ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி இதய சந்திரன். முன்னாள் தலைமை செயற்குழு உறுப்பினர் தன்ராஜ் பொதுக்குழு உறுப்பினர் முத்தையன் அலங்காநல்லூர் பேரூராட்சி மன்ற தலைவர் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ். பாலமேடு பேரூராட்சி துணைத் தலைவர் ராமராஜ் . ஒன்றிய கவுன்சிலர் பவானி தனசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் முதலில் பாலமேடு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பெண்களுக்கான இலவச பொது...
தமிழகம்

ராமேஸ்வரம் – திருப்பதி ரயில் இன்று தாமதமாக புறப்படும்

ராமநாதபுரம், அக்.28-ராமேஸ்வரம் ரயில் பெட்டி பராமரிப்பு நடைமேடைகளில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக இன்று ( அக் 28) ராமேஸ்வரத்தில் இருந்து மாலை 4:20 மணிக்கு புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் - திருப்பதி விரைவு ரயில் (16780) இன்று இரவு 11 மணிக்கு அதாவது 400 நிமிடங்கள் தாமதமாக புறப்படும் என தெற்கு ரயில்வே செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிருபர் : காமேஷ் பாரதி, ராமநாதபுரம்  ...
தமிழகம்

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற “வீட்டிற்கு ஒரு விஞ்ஞானி”

தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் இன்று "வீட்டிற்கு ஒரு விஞ்ஞானி" என்ற நிகழ்ச்சிகல்வி இன்டர்நேஷனல் பப்ளிக் ஸ்கூல் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் முரளிதரன் மாவட்ட கல்வி அலுவலர் செந்தில் வேல்முருகன் மற்றும் கல்வி இன்டர்நேஷனல் பள்ளி நிர்வாகி செந்தில்குமார்மற்றும்கல்லூரி முதல்வர்சாய் லட்சுமி மற்றும் தலைமை ஆசிரியர் குமரேஷ்கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ரோ ஃனாஹாஸ்லின் என்ற மாணவியிடம் வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி என்ற நிகழ்ச்சி சம்பந்தமாக சில கேள்விகள் கேட்டார்அந்த மாணவி பதிலளிக்கும் போது எடுத்தபடம். செய்தியாளர் : A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்...
தமிழகம்

மேடை கலைவானார் என போற்றபட்ட என்.நன்மாறன் அவர்களின் முதலாம் அண்டு நினைவு அஞ்சலி மதுரையில் நடைபெற்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினரும் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த தோழர் என்.நன்மாறன் கடந்த வருடம் வயது முதிர் காரணமாக உயிரிழந்தார். அவரின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி கூட்டம் இன்று மதுரை செயிண்ட் மேரிஸ் சர்சில் நடைபெற்றது இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு அவரது திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். செய்தியாளர் : வி காளமேகம் மதுரை மாவட்டம்....
1 459 460 461 462 463 556
Page 461 of 556

Right Click & View Source is disabled.

error: Content is protected !!