கவிதை

கவிதை

மாதர் போற்றுவோம்

அவள் அஹிம்சையின் ஒரு பெயர் அக்கினிக்கு மறுபெயர் பூ போலும் சிரிப்பாள் பூகம்பமாகவும் வெடிப்பாள்... வீட்டுக்கு மட்டுமின்றி நாட்டுக்கும் அவள் தான் நல்ல நம்பிக்கை ... நமக்கு முன்னிருந்தோ பின்னிருந்தோ நம்மை இயக்கும் ஒரு பெருங்கை... அவள் எடுக்கும் அவதாரங்கள் அநேகம்... அத்தனையும் காட்டுவது பாசம் மிக்க குடும்பத்தின் சினேகம்.... ஒரு முகம் காட்டும் பன்முகம் ... விளக்குத் திரி போல் அனைவருக்கும் நன்முகம்... தனக்கு மட்டுமின்றி கணவனுக்கும் குடும்பத்துக்கும்...
கவிதை

கலைஞர் எனும் விடியல் …

இன்றைய விடியல் அரசுக்கு அவர்தான் ஒளிக்கதிர்... உழைத்து முடித்தவர்க்கும் புதிய உற்சாகம் ... குடிசைகளைக் கோட்டையை நோக்கித் திருப்பிய குதூகலம் ... மிடிமைப்பட்டவர்க்கான மீட்சி அரசியல்... பெயர் தெரியாத ஒரு பழங்கிராமத்தின் ஒற்றைப்புள்ளிதான்... ஆனால் இந்திய அரசியல் வரைபடத்தில் அவர்தான் அதிகக் கோலங்களை வரைந்தார்.. சமக்கிருதம் கலந்த அன்றைய தமிழுக்கு அவர்தான் சத்துணவு தந்தார்...அதை நாடகமாகவும் திரைக்கதை வசனங்களாகவும் ஊட்டியும் தீட்டியும் உயிர்பெற வைத்தார்... பெரியார் அண்ணாவுக்குச் சீடர்தான்...எனினும் இருவரையும்...
கவிதை

“கைக்கூலிகளுக்கு மத்தியில் இவன் ஒரு மேய்வேலி’ : திப்பு சுல்தான்

தேசத்திற்கு தப்பிட்டவர்கள் மத்தியில் சுதந்திர வேட்கை எனும் உப்பிட்டவன் இவன்... துப்பு கெட்டவர்கள் மத்தியில் தேசத்தை உயிருக்கு மேலாக ஒப்பிட்டவன் இவன்... திப்பு - மனிதர்களில் ஒரு புனிதன்.. மன்னர்களில் ஒரு மாமணி.... வீரத்தால் சிறந்தவன் - நெஞ்சின் ஈரத்தால் நிறைந்தவன்... அடுத்தவர்க்கு உதவும் - உப காரத்தால் இனித்தவன் - எதிரிகளை மேல் கொண்ட காரத்தால் தனித்தவன்.... தேசத்தை நேசிப்போர்க்கு திப்புவின் வீரம் பிடிக்கும்... பிடிக்காதவர்க்குத்தான் உள்ளமெல்லாம் அரிக்கும்.......
இலக்கியம்கவிதை

இதயம் பேசுகிறது!

பாழ்வெளியான‌ மனப்படுதாவில்‌ கனவுத் தூரிகையால்‌ வரைந்த ‌கைகளின்‌ வாரிசு‌ யார்‌?! விழிகள்நடத்திய‌ அழகுப்போட்டியில்‌ மிரண்ட முகத்திற்குப்‌ பொட்டு‌ வைத்துக்‌ கனவுகளை எல்லாம்‌ வெற்றி கொள்ள வைத்தவை எந்த‌ இதயத்தின்‌ கீறல்கள்‌?! நான் கொய்த கனிகளின் நறுமணச்‌ சாறுகள்‌ பின்பு முகத்தின்‌ கைகளில்‌ என்கைகளிலோ‌ முள்ளின்‌ கீறல்கள்‌.. குயில்களின் கனவு‌ வானத்தில்‌ கழுகுக் கூட்டங்களின்‌ வட்டங்கள்‌ கழுகுகளை‌ வீழ்த்தும்‌ என்‌ கண்மணியே‌ நீ வாழ்க‌! என் உள்ளத்தில் உன்னை அங்கீகரிக்கின்றன! எஸ் ஆர்...
இலக்கியம்கவிதை

யாழ் ராகவன் – கவிதைகள்

தலையாட்டித்தான் வரவேற்கின்றன ஒவ்வொரு இலைகளும் உன்னை காணாத நாள் இலையுதிர் காலம் கருப்பு குழல்அருவியின் சீரான பரவலில் உற்சாக மடைந்தது மாமரக்குருவி வனமெங்கும் கூவல் தாவர பாஷையும் பறவையின் ஓசையும் எங்கு படித்தாய்.. பூக்களையும் சினுங்கவைக்கும் புன்முறுவல் காண ஓடிவரும் தட்டானிடம் பறக்கும் உல்லாசம் கண்மூடி நிற்கும் போதெல்லாம் ஞானநிலை கண்திறந்து பார்த்தால் மோனநிலை.. காற்றுக்கும் பூவுக்கும் காதல் மூட்டுகிறாய் காலத்தை வெல்லும் ஜாலத்தை பார்வையில் தீட்டுகிறாய்.. உரிமை மீட்பு...
இலக்கியம்கவிதை

தேடுதல்!

தேடுதல் வேண்டும் எதைத் தேடுகிறோம்...? எதைத் தேட வேண்டும் ?? கர்ப்பப்பையில் இருக்கும் போது அந்த இருட்டில் இருந்து வெளிச்சத்தில் வர பாதையை தேடுகின்றோம்! பிறந்தாயிற்று! வெளிச்சத்தை பார்த்தாயிற்று! ! தொப்புள் கொடியில் இருந்து பிரிந்தவுடன் பசி என்று நினைவுக்கு வரும்பொழுது தாயின் முந்தானையை தேடுகின்றோம்! அம்மாவின் குரலோ வயிற்றில் இருக்கும் பொழுதே கேட்டாயிற்று. அம்மா சொல்லிக் கொடுத்து அப்பா என்று தெரிந்த பின் அப்பாவின் குரல் எங்கெங்கெல்லாம்ஒலிக்கிறதோ ...அந்த...
இலக்கியம்கவிதை

லதா கவிதைகள்

தையலை உயர்வு செய் பெண்மை போற்றும் பாரதமே பேரின்ப பொருளாய் காணாதே தாய்மை ஒன்றே உலகினில் தலைமை என்று மறவாதே... குடும்பம் ஒன்றே கடவுளாய் குடிலைச் சுற்றித் தவமிருப்பாள் குயிலுக்கும் குரல் கொடுப்பாள் கூகைக்கும் பதில் சொல்வாள்... ஆணுயர தலைகுனிந்து ஆதாரமின்றி அடையாளமானவள் ஆசையின்றி சிகரம் தொட்ட மீசையில்லாப் பாரதியவள்... நிகரென்று யாருமில்லை சமமென்று வாழும் பெண்மணிகள் சிகரமென்று உயர்த்திப் போற்றிடுவோம் வரமென்று வாழ்த்தி வணங்கிடுவோம்... பெண் பெண்ணுக்கும் மீசையுண்டு...
கவிதை

லதா கவிதைகள்

ஆண் சுவாசம் உலகத்தின் முதல் மனிதனே குற்றத்தின் முதல் தண்டனையனே பரிகாரமில்லா முதல் பாவமோ பரிகாசம் தேடாத முதல் யாசகனோ விழியால் நேர்ந்த முதல் உயிர்ப்பில் விழிமூடுவரை கொடுக்கும் முதல் தர்மன் காதல் விளைவின் முதல் கண்ணீர் காற்றோடு பேசாத முதல் சுவாசகன் கலையா ஓவியனின் முதல் கற்பனை காவிய உலகம் இவன் படைப்பன்றோ..‌‌ ஆண் பூ எதிர்மறை வாசமோ எதிரியில்லா சுவாசமோ ஏகாந்த மகரந்தமோ இவன்... எவர் நிலையறிய...
கவிதை

ருத்ர தாண்டவம்

பிரம்மா படைப்புக் கடவுள் மகா விஷ்ணு காக்கும் கடவுள் சிவன் முக்தி கொடுக்கும் கடவுள் தர்மங்கள் சிதையும்போது அவதாரம் எடுப்பேன் என்றான் கண்ணன் கீதையில்! கலியுகத்தில் தர்மம் இல்லை! பாவங்கள் நிரம்பிப் பெருக்கெடுக்கின்றன பொய்,வஞ்சகம்,சூது , திருட்டு என்று எதிலும் குறைவில்லை! தலைவிரித்தாடுகிறது அதர்மம்! கடவுள் நம்பிக்கையும் காலாவதியாகும் இந்தக் காலத்தில்---- கொரானா வடிவில் ஒரு அவதாரம்! இதன் வடிவைக் காணும்போது ருத்திராக்ஷம் நினைவு நிழலாடுகிறது! சிவபெருமானின் ஆபரணம்! இந்த...
கவிதை

பூத்து சிரித்தது மொழிகளின் மலர்

உன் செல்ல சொல்லில் பூத்து சிரித்தது மொழிகளின் மலர் பூமியில் வெண் ஒளியாய் நிறம் பதித்த இளம் மஞ்சள் நிலா நீ கடவுள் எழுதிய குறுங்கவிதையின் உயிர் ஹைக்கூவின் தொடர் செல்லமாய் கன்னம் திருடும் முத்தங்களின் முதல்வி மழலைகளின் அரசி கருவறை தேசத்தின் ஆனந்த சுதந்திரம் நெஞ்சில் சாய்ந்த தேவதையின் பிம்பம் தாய்மை பரிசளித்த வாழ்வியலின் முதன்மை சீதனம் பொம்மைகள் ஆளும் குழந்தைகளின் இளவரசி அம்மாவின் மகாராணி இருள் புதைத்து...
1 2 3 8
Page 1 of 8

Right Click & View Source is disabled.

error: Content is protected !!