சின்னமனூர் வட்டார அளவில் கலை பண்பாட்டுத் திருவிழா
தேனி மாவட்டம், சின்னமனூர் ஒன்றியத்தில் 2022-23ம் ஆண்டிற்கான கலைப் பண்பாட்டுத் திருவிழா போட்டிகளானது மாணவ மாணவியர்தம் தனித்திறனை மதிப்பிடும் நோக்கில் தனிநபர் போட்டியாக நேரடியாக ஸ்ரீ கிருஷ்ணய்யர் மேல்நிலைப்பள்ளியில் அக்.27,28 மற்றும் 31 ஆகிய மூன்று தினங்களில் திட்டமிடப்பட்டு போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இப்போட்டிக்கு 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும், மாணவியர்களுக்கும் எனதாக தனித்தனியாக நடைபெற்று வருகிறது. கலை பண்பாட்டு திருவிழா போட்டியை பள்ளியின் தலைமை ஆசிரியர் முனிராஜா, வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) சகாயராஜ் தொடங்கி வைத்தார்கள். போட்டிகளுக்கு பொறுப்பாசிரியர்களாக கன்னிகா, நாகலெட்சுமி, சுப்புரமணி ஆகியோர் செயல்பட்டனர். மேலும்,ஆசிரியர் பயிற்றுநர்கள் பாக்கிய மரியான நான்சி, சாமுண்டீஸ்வரன், லூக்கா, பாக்கிய ஜெயந்தி ஆகியோர் உடனிருந்து சிறப்பாக வழி நடத்தினார்கள். வாய்ப்பாட்டிசை ( CLASSICAL), வாய்ப்பாட்டிசை (FOLK),கருவி இசை (தாள வாத்தியம்),கருவி இசை (மெல்லிசை)...
