தமிழகம்

தமிழகம்

அழகப்பா பல்கலை., கல்லூரி இடையே செஸ் போட்டி

அழகப்பா பல்கலையில் இணைப்பு பெற்ற கல்லூரிகளுக்கு இடையேயான செஸ் போட்டி, ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே குஞ்சார்வலசை ராஜா கலை, அறிவியல் கல்லூரி வளாக உள்ளரங்கில் நடந்தது. ஆடவர், மகளிர் பிரிவுகளில் 10க்கும் மேற்பட்ட கல்லூரிகள் கலந்து கொண்டன. போட்டியை கல்லூரி செயலாளர் டாக்டர் தில்லை ராஜ்குமார் தொடங்கி வைத்தார்.  ஆடவர் பிரிவில் பரமக்குடி அரசு கலை, அறிவியல் கல்லூரி, அழகப்பா கலை, அறிவியல் கல்லூரி முதல், இரண்டு இடம் பிடித்தன. மகளிர் பிரிவில் அழகப்பா கலை, அறிவியல் கல்லூரி, இளையான்குடி டாக்டர் ஜாகிர் ஹுசேன் கலை, அறிவியல் கல்லூரி முதல், இரண்டு இடம் பிடித்தன. வெற்றி பெற்ற அணிகளுக்கு ராஜா குழும நிறுவனரும், மண்டபம் பேரூராட்சி சேர்மனுமாகிய சேவா ரத்னா டி.ராஜா, டிரஸ்டி ஜெயந்தி ராஜா ஆகியோர் பரிசு கோப்பை வழங்கினர். போட்டி ஏற்பாடுகளை உடற்கல்வி...
தமிழகம்

பக்கவாதத்திற்கு சிகிச்சை அடுத்த நொடியிலேயே தேவை : அப்போலோ மருத்துவமனை விழிப்புணர்வு கருத்தரங்கில் டாக்டர்கள் வலியுறுத்தல்

பக்கவாதம் ஏற்பட்ட உடனேயே சிகிச்சை அளிக்க வேண்டிய தேவை உள்ளதாக பிரபல மருத்துவர்கள் வலியுறுத்தினர். பக்கவாதம் ஏற்பட்ட பிறகு ஒவ்வொரு நிமிடத்திலும் சுமார் 19 லட்சம் நரம்புகளும், 10 நிமிடத்திற்குள் சுமார் 2 கோடி நரம்புகளும் செயலிழக்கும் அபாயம் உள்ளதால் பக்கவாதத்திற்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தைப் பொதுமக்கள் உணர வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். மதுரை அப்போலோ மருத்துவமனையில் "பக்கவாதம் & முடக்குவாதம் : கண்டறிதல், சிகிச்சை மற்றும் தடுப்புக்கான விழிப்புணர்வு" என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. இந்தக் கருத்தரங்கில் டாக்டர்கள் மீனாட்சி சுந்தரம் - மூத்த நரம்பியல் நிபுணர், எஸ்.என்.கார்த்திக், சுரேஷ், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் ஷ்யாம், டாக்டர் கெவின் ஜோசப், நரம்பியல் நிபுணர் சுந்தர் ராஜன், கதிரியக்க நிபுணர் ஜான் ராபர்ட், எமர்ஜென்சி பிரிவு மருத்துவர் ஜூடு வினோத் அப்போலோ...
தமிழகம்

ராமநாதபுரத்தில் மருதுபாண்டியர் சிலைக்கு நகராட்சி தலைவர் மரியாதை

ராமநாதபுரம், அக்.27- மருதுபாண்டியர் குருபூஜையை யொட்டி ராமநாதபுரத்தில் மருதுபாண்டியர் சிலைக்கு நகராட்சி தலைவர் கார்மேகம் மரியாதை செலுத்தினார். ராமநாதபுரம் வண்டிகார தெரு அகமுடையார் இளைஞர் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாமன்னர் மருதுபாண்டியர் உருவ படத்திற்கு நகர்மன்ற தலைவர் ஆர்.கே.கார்மேகம் மலர்தூவி மரியாதை செலுத்தினார். நகர்மன்ற உறுப்பினர் காளிதாஸ், திமுக வார்டு செயலாளர்கள் வசந்தகுமார், இன்ஜினியர் மருதுபாண்டியன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர். நிருபர் : காமேஷ் பாரதி, ராமநாதபுரம்...
தமிழகம்

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் அரசு சார்பாக வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது

உத்தமபாளையம் தனியார் மண்டபத்தில், தமிழக முதல்வர் மாண்புமிகு ஸ்டாலின் அவர்களின் உத்தரவுப்படி. சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர் அவர்கள் தலைமையில், வட்டார திட்ட அலுவலர் திருமதி விஜயா அவர்கள் முன்னிலையில் 200 கர்ப்பிணிப் பெண்களுக்கு தாய் வீட்டு சீதனம் போல் சீர்வரிசைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கம்பம் சட்டமன்ற உறுப்பினர், உத்தமபாளையம் சேர்மன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தேவாரம் சுகாதாரத் துறை மருத்துவர் அனுசியா அவர்களும், சத்துணவு, ஊட்டச்சத்து பணியாளர்கள் மேற்பார்வையாளர்கள், திருமதி, சுப்புலட்சுமி திருமதி, ஈ.ஸ்வரி, ஒருங்கிணைப்பாளர் அருள் பிரேம், ஆகியோர்கள் கலந்து கொண்டனர். செய்தியாளர் : A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்  ...
தமிழகம்

திருவில்லிபுத்தூர் அருகே, வரும் சனி கிழமை மின்தடை அறிவிப்பு

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் மின் கோட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு துணை மின் நிலையத்தில், நாளை மறு நாள் 29ம் தேதி (சனி கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இந்த மின் நிலையத்தில் இருந்து பயன்பெறும் வத்திராயிருப்பு, பிளவக்கல் அணைப்பகுதி, கான்சாபுரம், மகாராஜபுரம், கூமாப்பட்டி, கோட்டையூர், புதுப்பட்டி, துலுக்கப்பட்டி, தம்பிப்பட்டி, அக்கனாபுரம், புதூர், தைலாபுரம், சுந்தரபாண்டியபுரம், அத்திக்கோவில், கிழவன்கோவில், சீலநாயக்கன்பட்டி, கொடிக்குளம், தாமரைக்குளம், ராமசாமியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில், சனி கிழமை காலை 9 மணி முதல், மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என்று மின்வாரிய செயற்பொறியாளர் சின்னத்துரை அறிவிப்பு வெளியிட்டுள்ளார். செய்தியாளர்:  வி காளமேகம்...
தமிழகம்

சிவகாசியில், தீக்குளிக்க முயன்ற பெண் காவலர் பணியிடை நீக்கம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி நகர் காவல்நிலைய ஆய்வளராக சுபகுமார் பணியாற்றி வருகிறார். இந்த காவல் நிலையத்தில், செல்லம்மாள் என்பவர் காவலராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த வாரம், கைதி ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சிவகாசி நகர் காவல் நிலையத்திலிருந்து, கைதியின் பாதுகாப்பு பணிக்காக ஆய்வாளர் சுபக்குமார், காவலர்களை நியமித்தார். இதில் மருத்துவமனை பாதுகாப்பு பணிக்கு செல்லுமாறு காவலர் செல்லம்மாளுக்கு உத்தரவிடப்பட்டது. கொரோனா பாதிப்பு உள்ள கைதியின் பாதுகாப்பு பணிக்கு செல்ல முடியாது என அவர் கூறியதையடுத்து, ஆய்வாளர் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்துள்ளார். தன் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று கூறிய காவலர் செல்லம்மாள், காவல் நிலையத்திற்கு வந்து ஆய்வாளர் சுபக்குமாரிடம் பேசியுள்ளார். அப்போது திடீரென்று செல்லம்மாள் தனது உடலில் மண்ணெண்ணெய்...
தமிழகம்

திருப்பரங்குன்றம் மதுரை மாநகராட்சி மண்டலம் 5ல் துணை மேயர்,மண்டல தலைவர் தலைமையில் மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.

நிதி நிலை சீராகும் வரை சாக்கடை, குடிநீர், சாலை பணிகளுக்கு மாமன்ற உறுப்பினர்களில் கோரிக்கையை செயல்படுத்தி தர- துணை மேயர் நாகராஜன் திருப்பரங்குன்றம் மதுரை மாநகராட்சி மண்டலம் 5ல் மாமன்ற உறுப்பினர்கள் கட்டம் நடைபெற்றது. மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன். மண்டல தலைவர் சுவிதா விமல், மாநகராட்சி உதவி ஆணையர் சையது முஸ்தபா கமால் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மதுரை மாநகராட்சி அனைத்து பிரிவு அதிகாரிகள் கலந்துகொண்டனர். மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்று தங்களது பகுதி மக்களின் குறைகளை அதிகாரிகளுக்கும்., மண்டல குழு தலைவருக்கும்., துணைமேயருக்கும் எடுத்துரைத்தனர். கடந்த ஆறு மாத காலமாக மக்கள் பிரச்சனைகள் எதுவும் அதிகாரிகள் செவிசாய்க்கவில்லை என்றும்., குடிநீர் வசதி., கழிவுநீர் செல்வதற்கு சாக்கடை வசதி., தெருவிளக்கு வசதி என எந்த வித அடிப்படை வசதியும் செய்து தரவில்லை., வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால்...
தமிழகம்

மதுரையில் ரயில்வே கிராசிங் கேட் அடைத்த பின்னர் தண்டாவாளத்தை கடக்க முயன்ற 45 வயது மதிக்க தக்க இளைஞர் ரயில் மோதி பலி

திருச்செந்தூரில் இருந்து பாலக்காட்டு வரையில் செல்ல கூடிய விரைவு ரயில் இன்று மாலை மதுரை ரயில் நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலானது அழகப்பா நகர் ரயில்வே கிராசிங் அருகே வந்து கொண்டிருந்த போது அப்போது ரயில்வே கேட் அடைக்கபட்ட பின்னர் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற 45 வயது மதிக்கதக்க நபர் ரயிலில் மோதி சம்பவ இடத்தில் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார். இதனை அடுத்து ரயில் ஓட்டுநர் சம்பவம் குறித்து ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இளைஞர் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து மதுரை ரயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். செய்தியாளர் : வி காளமேகம் மதுரை மாவட்டம்...
தமிழகம்

சோழவந்தான் தொழிலதிபர் எம் மருது பாண்டியன் ராமேஸ்வரத்தில் உள்ள மருது பாண்டியர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

மதுரை மாவட்டம் சோழவந்தான் நகர அரிமா சங்கத் தலைவரும் எம் வி எம் கலைவாணி பள்ளி தாளாளரும் பேரூராட்சி கவுன்சிலருமான எம் மருதுபாண்டியன் ராமேஸ்வரத்தில் உள்ள மருது சகோதரர்கள் திருஉருவச் சிலைக்கு குரு பூஜையை ஒட்டி மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் இதனைத் தொடர்ந்துராமேஸ்வரம் நகர அகமுடையார் சங்க நிர்வாகிகள் அவருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். செய்தியாளர் : வி காளமேகம் மதுரை மாவட்டம்...
தமிழகம்

லாரி மோதியதில் மின் கம்பம் சேதம் உரிய நேரத்தில் மின் இணைப்பை துண்டித்த மின் ஊழியர்களால் பெரும் அசம்பாவிதம் தவிர்த்து

மதுரை பைபாஸ் சாலை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் நுழைவாயில் மின்கம்பம் ஒன்று உள்ளது இந்த நிலையில் இன்று காலை எதிர்பாராத விதமாக லாரி ஒன்று அந்த மின் கம்பத்தில் பின்பகுதியில் மோதியது மின்கம்பம் முற்றிலும் சேதம் அடைந்து தொங்கியது. உடனடியாக மதுரை அரசர் அடி உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது உடனடியாக மின்விநியோகம் நிறுத்தப்பட்டது.  விரைவாக செயல்பட்ட மின்வாரிய அதிகாரிகளும் மற்றும் ஊழியர்களும் உடனடியாக வேறு மின்கம்பம் நடும் பணியில் ஈடுபட்டனர். இதனால் பைபாஸ் சாலை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் நேரு நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 3 மணி நேரம் மின்சாரம் ஆனது தடைப்பட்டது மின்வாரியர்களின் துரித செயல்பாட்டால் மின் வயர்கள் அறுந்து கீழே விழுவதற்கு முன்னே மின் இணைப்பை உடனடியாக துண்டித்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. செய்தியாளர் :...
1 461 462 463 464 465 556
Page 463 of 556

Right Click & View Source is disabled.

error: Content is protected !!