காம தகனம்
சிவபெருமானின் தவத்தை கலைத்த காமனை(மன்மதனை) எரித்த நிகழ்வே, காம தகனம் என்று கூறப்படுகிறது. இந்த நிகழ்வு நடந்த இடம் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கொற்கை கிராமத்தில். இந்தக்கிராமத்தில் சிவபெருமான் வீரட்டானேஸ்வரர் என்ற நாமத்தில் மூலவராக லிங்க வடிவில் கோயில் கொண்டுள்ளார். உற்சவர் யோகீஸ்வரர் என்ற நாமத்தில் அருட்பாலிக்கிறார். இந்த கிராமத்தின் புராண பெயர் திருக்குறுக்கை. ஆதியில் பரம்பொருளின் எண்ணப்படி தோற்றுவிக்கப்பட்டவர் காமேஸ்வரன். அவர், தன்னிலிருந்து ஒரு சக்தியை உருவாக்கியதே காமேஸ்வரி. இந்த...