ஆசிரியர்களுக்கு பணி ஓதுக்கீடு உத்தரவு: மேயர்:
மதுரை மாநகராட்சி ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு பணி ஒதுக்கீடு ஆணைகளை, மேயர் இந்திராணி பொன்வசந்த் வழங்கினார். மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நியமிக்கப்பட்ட மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு பணி ஒதுக்கீடு ஆணைகளை மேயர் இந்திராணி பொன்வசந்த், வழங்கினார். மதுரை மாநகராட்சி கட்டுப்பாட்டில் 64 தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையின் மூலம் வழங்கப்படும் அனைத்து கல்வி உபகரணங்கள் மாநகராட்சியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் கல்வித் தரத்தை உயர்த்துவதற்காக பல்வேறு நிலைகளில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். அதன்படி, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக மாநகராட்சி ஈ.வெ.ரா.பெண்கள் மேல்நிலைப்பள்ளி (கணக்கு), திரு.வி.க....
