தமிழகம்

தமிழகம்

தனித்துப் போட்டியால் பாஜகவுக்கு எழுச்சி: பொன். ராதாகிருஷ்ணன் கருத்து

குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இந்நிலையில் நேற்று நாகர்கோவில் டதி பள்ளியில் வாக்களித்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: உள்ளாட்சி தேர்தலில் மக்களை நம்பி பாஜக தனித்து போட்டியிடுகிறது. தமிழகம் முழுவதும் நான் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது அனைத்து இடங்களிலும் பாஜகவுக்கு மிகப்பெரிய ஆதரவு உள்ளது. இந்த தேர்தலில் பாஜக மிகப்பெரிய முத்திரை பதிக்கும். தேர்தலில் பணப்பட்டுவாடா செய்வது மிகவும் வேதனையான ஒன்று. நேர்மையானவர்கள், ஏழைகள் வருங்காலத்தில் தேர்தலை சந்திக்க முடியுமா? என்பது கேள்விக் குறியாகியுள்ளது. இந்த தேர்தலில் பாஜக தனித்து நிற்பதால் இதுவரை இல்லாத அளவுக்கு எழுச்சி ஏற்பட்டுள்ளது என்றார்.  ...
தமிழகம்

சென்னையில் 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் குறைந்த வாக்கு பதிவு

தமிழ்நாடு முழுவதும் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுகளுக்காக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நேற்று நடந்து முடிந்தது. இதில், உத்தேசமாக 60.70 சதவீத வாக்குகள் பதிவாகியதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதில் கவனிக்கத்தக்கது என்னவென்றால் சென்னையில் தான் மிகக்குறைந்த அளவாக வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. சென்னை மாவட்டத்தில் 16 சட்டப் பேரவைத் தொகுதிகளும், மூன்று மக்களவைத் தொகுதிகளும் உள்ளன. இதுவரை நடந்த முடிந்த தேர்தல்களில் 50 சதவீதத்தை தாண்டியே வாக்குப்பதிவாகியுள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் 52.67 சதவீத வாக்குகளும், அதே ஆண்டில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மேயருக்கான வாக்குப் பதிவில் 52.67 சதவீத வாக்குகளும் பதிவாகின. கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 59.06 சதவீதமும் வாக்குகள் பதிவாகியது. ஆனால், நேற்று நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில்...
தமிழகம்

கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கும் முடிவை கைவிடுக- பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாட்டில், திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில், பயன்பாடு முடிந்த அணு எரிபொருள் கழிவுகளைச் சேகரிக்கும் மையத்தினை அமைத்திடும் நடவடிக்கைகளைக் கைவிடக் கோரி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று (18-2-2022) கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், கூடங்குளம் அணுமின் நிலைய திட்டத்தின்கீழ், அணு உலைகளிலிருந்து வெளியேறும் பயன்பாடு முடிந்த அணு எரிபொருள் கழிவுகளை அகற்றுவது தொடர்பாக பொது மக்களிடையே உள்ள கவலையை இந்தியப் பிரதமரின் கவனத்திற்குக் கொண்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், இந்தத் திட்டத்தில் 1000 மெகாவாட் திறன் கொண்ட ஆறு அணுமின் உலைகள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அந்த ஆறு அலகுகளில், அலகுகள் 1...
தமிழகம்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது: மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் உள்ளிட்ட 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. பொதுமக்களும், அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, நடிகர் விஜய் உள்ளிட்டோர் காலையில் வாக்குப்பதிவு தொடங்கியவுடனேயே வாக்களித்தனர். உள்ளாட்சித் தேர்தல் அறிக 10 தகவல்கள்: > நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. > மாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. >1369 மாநகராட்சி, 3824 நகராட்சி மற்றும் 7409 கவுன்சிலர் பதவிகள் என மொத்தம் 12,602 இடங்களுக்கு...
தமிழகம்

அதிமுக ஆட்சியில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு பொருட்கள் வாங்கியதில் ரூ.12 ஆயிரம் கோடி ஊழல்: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

'அதிமுக ஆட்சியில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு பொருட்கள் வாங்கியதில் ரூ.12 ஆயிரம் கோடிஊழல் நடந்துள்ளது' என்று தேர்தல்பிரச்சாரத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார். திருநெல்வேலி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து காணொலி மூலம் நேற்றுஅவர் பேசியதாவது: கடந்த 9 மாதகால திமுக ஆட்சியில் எதையும் செய்யவில்லை என்று, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி பொய் சொல்கிறார். திமுக ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு குறித்து கேள்வி எழுப்புகிறார். அதிமுக ஆட்சிக் காலத்தில் சட்டம் ஒழுங்கு எப்படி இருந்தது என்பதை மக்கள் மறக்க மாட்டார்கள். தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில்13 பேர், பரமக்குடி துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொலை, சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை,மகன் கொலை குறித்து பழனிசாமிக்கு நினைவுபடுத்துகிறேன். பொள்ளாச்சியில் பாலியல் வழக்கில் குற்றவாளிகளைக் காப்பாற்ற முயற்சித்தது யார்? கோடநாடு கொலை,...
தமிழகம்

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2022: நாளை வாக்குப்பதிவு: 1 லட்சம் போலீஸ் பாதுகாப்பு

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. பணப் பட்டுவாடாவை தடுக்கும் வகையில் நேற்று மாலை 6 மணி முதல் விடியவிடிய தேர்தல் பறக்கும் படையினருடன் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். தேர்தலுக்கு சம்பந்தம் இல்லாத வெளியாட்களும் வெளியேற்றப்பட்டனர். தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் உள்ள மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. தேர்தல் நடத்தை விதிகளின்படி, அரசியல் கட்சிகளின் தேர்தல் பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் உள்ளிட்ட அனைத்து பிரசார நிகழ்ச்சிகளும், வாக்குப்பதிவு நடைபெறும் 48 மணி நேரத்துக்கு முன்னதாக முடித்துக் கொள்ள வேண்டும் என்பதால், தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் பலமுனைப் போட்டி நிலவுகிறது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்...
தமிழகம்

தமிழக கோயில்களுக்குச் சொந்தமான ரூ.2,043 கோடி மதிப்புள்ள நிலங்கள் மீட்பு: இந்து சமய அறநிலையத் துறை தகவல்

தமிழகத்தில் உள்ள பல்வேறு கோயில்களுக்குச் சொந்தமான ரூ.2,043 கோடி மதிப்புள்ள நிலங் கள் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளன. இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்து சமய அறநிலையத் துறைஅமைச்சர் பி.கே.சேகர்பாபு, பல்வேறு மாவட்டங்களில் உள்ளகோயில்களில் ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை மீட்க நடவடிக்கை எடுப்பதோடு, ஆக்கிரமித்தவர்கள், அதற்கு உடந்தையாக இருந்த வர்கள் மீது வழக்குப்பதிவு செய் யப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி, 540.39 ஏக்கர் நிலம், 496.1748 கிரவுண்டு சதுரஅடி மனைகள், 20.1434 கிரவுண்டு கட்டிடம்,46.2077 கிரவுண்டு திருக்குளக்கரைஆகியவை 991 ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன. இதன் தற்போதைய மதிப்பு ரூ.2,043 கோடி ஆகும். குறிப்பாக, கும்பகோணம் மாவட்டம் ஒப்பிலியப்பன் கோயிலுக்கு அருகில் உள்ள வெங்கடாஜலபதி கோயிலுக்கு சொந்தமான 3.47 ஏக்கர் நிலம் மற்றும் குத்தகைக்கு விடப்பட்டிருந்த 6.9 ஏக்கர்நிலம் மீட்கப்பட்டது. திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில்...
தமிழகம்

விரைவில் பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படும்: சேலம் பிரச்சாரத்தில் உதயநிதி ஸ்டாலின் உறுதி

விரைவில் பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படும் என சேலம் தேர்தல் பிரச்சாரத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். சேலம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ நேற்று ஆத்தூர் ராணிப்பேட்டை, சேலம் தாதகாப்பட்டி, கோட்டை மைதானத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்று பேசியதாவது: நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் சேலம் மாவட்டத்தில் ஒரு தொகுதியை தவிர மற்ற அனைத்து தொகுதிகளிலும் திமுக தோல்வியடைந்தது. ஆனால், தமிழக மக்கள் திமுக-வை கைவிடவில்லை. வாக்களித்த மக்களுக்கும், வாக்களிக்காத மக்களுக்கும் பல நல்ல திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் தந்துள்ளார். அதிமுக ஆட்சியை விட்டு சென்ற போது ரூ.5.75 லட்சம் கோடி கடனில் விட்டு சென்றதுடன், கஜானாவை காலி செய்து சென்றனர். இருப்பினும், மக்களுக்கு...
தமிழகம்

கொடநாட்டில் கொலை, கொள்ளை நடந்ததை கண்டுபிடித்ததே அதிமுக அரசுதான்- எடப்பாடி பழனிசாமி

கொடநாட்டில் கொலை, கொள்ளை நடந்ததை கண்டுபிடித்ததே அதிமுக ஆட்சியில்தான் என அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். திருச்சி மாநகராட்சி மற்றும் நகராட்சி, பேரூராட்சிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி நேற்று பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், "திமுக அரசு நம் தொண்டர்கள் மீது பொய் வழக்குகளை போட்டு வருகிறது. இது உழைப்பால் உயர்ந்த கட்சி. எதையும் சந்திக்க எங்களுக்கு திராணி உள்ளது. திமுகவின் 9 மாத ஆட்சியிலேயே மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்" என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், "திமுகவிற்கு தைரியம் இருந்தால் கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்திக்க வேண்டும். கொடநாட்டில் கொலை, கொள்ளை நடந்ததை கண்டுபிடித்ததே அதிமுக ஆட்சியில்தான். எங்களது ஆட்சியில் காவல்துறையினருக்கு மதிப்பு இருந்தது. நீட் குறித்து விவாதிக்க நீங்கள் தயாரா என ஸ்டாலின் கேட்கிறார். காங்கிரஸ்...
தமிழகம்

தமிழகத்தில் இன்று முதல் மழலையர் பள்ளிகள் திறப்பு ….எதற்கெல்லாம் தளர்வுகள்? முழு விவரம்!

தமிழகத்தில் இன்று முதல் தியேட்டர்கள், உணவகங்களில் 100 சதவீதம் வாடிக்கையாளர்கள் இயங்க இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு நேற்றுடன் முடிவடைந்தது. கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் வழங்குவது குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டம் மருத்துவ வல்லுநர்கள், சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் மார்ச் 2 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் தமிழகத்தில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்துள்ள நிலையில் புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை அன்று மழலையர் பள்ளிகள் சங்கத்தினர் தமிழக முதல்வரை சந்தித்து 2 ஆண்டுகளுக்கு மேல் பள்ளிகளை திறக்காமல் இருப்பதை கருத்தில் கொண்டு இந்த முறை...
1 433 434 435 436 437 499
Page 435 of 499

Right Click & View Source is disabled.

error: Content is protected !!