பெண்களுக்கு எதிரான, வன்முறை ஒழிப்பு தினக் கருத்தரங்கு
சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, மாவட்ட அளவிலான கருத்தரங்கு நிகழ்வினை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தொடங்கி வைத்தார். சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகக் கூட்டரங்கில், சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, மாவட்ட அளவிலான கருத்தரங்கு நிகழ்வினை, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தொடங்கி வைத்து தெரிவிக்கையில், உலகளவிலும், நமது நாட்டிலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழித்திடும் பொருட்டு, சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் அனுசரிக்கப்பட்டு, அதற்கான விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாலின அடிப்படையில் அனைவரும் சமம் என்ற உணர்வுடன், பெண்களை பாதுகாக்க வேண்டிய சமூகப் பொறுப்பும் நாம் அனைவரிடத்திலும் இருத்தல் வேண்டும். குறிப்பாக, பெண்கள், பெண்களுக்கான அனைத்து உரிமைகள் குறித்தும் அறிந்து கொண்டு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அரசியலமைப்பு சட்டம்...
