தமிழகம்

தமிழகம்

துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் மூடல்! தமிழக அரசு அதிரடி

புதுக்கோட்டை நார்த்தாமலை துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தை மூட உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தபோது , துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் மூடப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது . புதுக்கோட்டை அறந்தாங்கி பகுதியை சேர்ந்த சுரேஷ் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார் . அதில் , புதுக்கோட்டை நார்த்தாமலை துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்திலிருந்து கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி சுடப்பட்ட துப்பாக்கி குண்டு 11 வயது சிறுவர் மீது தவறுதலாக பாய்ந்தது . நான்கு நாட்களுக்கு பிறகு அச்சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் . துப்பாக்கிச்சூடு தளத்தில் இருந்து இரண்டரை கிலோ மீட்டர் தொலைவில் இருந்த சிறுவன் மீது தவறுதலாக குண்டு பாய்ந்து , அவர் உயிரிழந்தார் . இதற்கு முன்பு இது போன்ற சம்பவம் கடந்த சில...
தமிழகம்

ரூ.150 கோடியில் காசிமேடு மீன்பிடி துறைமுகம்…புதிய வசதிகளுடன், கூடுதல் படகுகள் நிறுத்த ஏற்பாடு

சென்னை, காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை, 150 கோடி ரூபாய் செலவில் நவீனப்படுத்தும் பணி துவங்கியுள்ளது. இதில், நாகூரார் தோட்டத்தில், 500 படகுகளை நிறுத்தும் வகையில் படகு அணையும் தளங்கள் அமைக்கப்பட உள்ளன. மீனவர்களின் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண்பதுடன், பாதாள சாக்கடை திட்டமும் அமல்படுத்தப்படுவதால் மீனவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம், 1984 முதல் செயல்பட்டு வருகிறது. இது, 23 மீனவ கிராமங்களைச் சேர்ந்த, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரமாக திகழ்கிறது. இங்கு, 200க்கும் மேற்பட்ட கட்டுமரங்கள், 1,200 விசைப்படகுகள், 2,000க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் வாயிலாக, மீன்பிடி தொழில் நடக்கிறது. இதன் மூலம், தினமும், 1,000 டன் மீன் வகைகள் கையாளப்படுகின்றன. இங்கிருந்து கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும்; துபாய், சிங்கப்பூர், ஜப்பான், கனடா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் மீன்...
தமிழகம்

கோவளம் – நீலாங்கரை இடையே கடலில் நீந்தி 8 வயது சிறுமி சாதனை

கோவளம் முதல் நீலாங்கரை வரை, கடலில் 6 மணி 14 நிமிடத்தில், 19 கி.மீ., கடல் துாரம் நீச்சல் அடித்து 8 வயது சிறுமி சாதனை படைத்துள்ளார்.சென்னை, நீலாங்கரையை சேர்ந்தவர் ஆழ்கடல் பயிற்சியாளர் அரவிந்த், 40. இவர், கடல் வளம் பாதுகாக்க, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி வருகிறார்.ஆழ்கடலில் திருமணம் நடத்தியது, சைக்கிள் ஓட்டியது, உடற்பயிற்சி, யோகா, கிரிக்கெட் விளையாட்டு, தேசிய கொடி பறக்கவிட்டது என, கடலுக்குள் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திஉள்ளார். கடந்த 16 ஆண்டுகளாக கடல் நீச்சல் பயிற்சியும் அளித்து வருகிறார். இவரது மகள் தாரகை ஆராதனா, 8. இவர், பிறந்த ஒன்பது மாதத்திலே, கடலில் மிதக்கும் அளவுக்கு, தந்தை அரவிந்த் பயிற்சி அளித்தார். தந்தையிடம் தொடர்ந்து நீச்சல் பயிற்சி பெற்ற தாரகை ஆராதனா, நேற்று, கோவளத்தில் இருந்து நீலாங்கரை வரை, 19 கி.மீ., துாரத்தை,...
தமிழகம்

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்கரை கடல்பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த புஷ்பவனம் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.நாட்டுப்படகில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது புஷ்பவனம் பகுதி மீனவர்களான பன்னீர்செல்வம் , நாகமுத்து,ராஜேந்திரன் ஆகியோர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. ரப்பர் கட்டை,இரும்பு பைப்,அரிவாள் போன்ற ஆயுதங்களால் இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியதாகவும்,மேலும்,படகில் இருந்த 300 கிலோ மீன்பிடி வலைகள் உள்பட ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருட்களையும் எடுத்து சென்றதாகவும் மீனவர்கள் புகார் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து,காயமடைந்த 3 பெரும் சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது....
தமிழகம்

மருத்துவப் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியீடு – முதல்முறையாக ஆன்லைனில் கலந்தாய்வு!

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியாகிறது. தமிழகத்தில் இளநிலை எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கு,அரசு மருத்துவ கல்லூரிகளின் மாநில ஒதுக்கீட்டில் 4349 இடங்கள் உள்ளன.மேலும்,சுயநிதி கல்லூரிகளின் மூலம் கிடைக்கும் இடங்கள் 2650 என மொத்தம் 6999 மருத்துவப் படிப்புக்கான இடங்கள் உள்ளன. இந்நிலையில்,தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியாகிறது.அதன்படி,மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று மாலை வெளியிடுகிறார். இதனைத் தொடர்ந்து,இந்த இடங்களை நிரப்புவதற்கான மருத்துவ கலந்தாய்வு நடைபெற உள்ளது.அந்த வகையில்,வருகின்ற ஜன.27 ஆம் தேதி மாற்று திறனாளிகள்,விளையாட்டு வீரர்கள் மற்றும் ராணுவ வீரர்களின் வாரிசுகளை உள்ளடக்கிய சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. அதன்பின்னர்,ஜன.28 மற்றும் ஜன.29 ஆகிய இரண்டு நாட்களில்,அரசுப் பள்ளி...
தமிழகம்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் பொதுமக்கள் இடையே ஆர்வம் குறைந்துள்ளது: தலா ஒரு லட்சம் பேர் தட்டிக்கழிப்பதாக தகவல்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட் டத்தில் இரண்டாவது டோஸ் கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்வதில் பலரும் ஆர்வம் காட்டாமல் இருப்பதாகவும், ஒவ்வொரு மாவட்டத்திலும் சராசரியாக ஒரு லட்சம் பேர் குறிப்பிட்ட இடைவெளியில் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் தட்டிக் கழிப்பதாக சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர். நாடு முழுவதும் கரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. பல்வேறு கட்டங்களாக தடுப்பூசி திட்டம் தொடங்கினாலும் முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொள்வதில் 100% சதவீதம் எட்ட முடியாத நிலை உள்ளது. இதில், இரண்டாவது டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்துவதில் பலரும் ஆர்வம் இல்லாமல் இருப்பது தெரியவந்துள்ளது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தும் திட்டம் ஓரளவுக்கு திருப்தியாக இருந்தாலும், இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி சவால் நிறைந்ததாக...
தமிழகம்

திருப்போரூர் கோயில் சொத்துகளை மீட்டது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

திருப்போரூர் கந்தசாமி மற்றும் ஆளவந்தான் கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள் மற்றும் சொத்துகளை மீட்டு, அறிக்கை தாக்கல் செய்யுமாறு அறநிலையத் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் உள்ள கந்தசாமி கோயில் மற்றும் ஆளவந்தான் கோயிலுக்குச் சொந்தமான, ரூ.60 ஆயிரம் கோடி மதிப்பிலான 2 ஆயிரம் ஏக்கர் நிலம் மற்றும் சொத்துகளை அபகரிக்க 20-க்கும்மேற்பட்ட குழுக்கள் முயற்சித்து வருவதாகவும், அதை தடுத்து, கோயில் சொத்துகளைப் பாதுகாக்க வேண்டுமென வழக்கறிஞர் ஜெகந்நாத் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குத் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகளை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்றம், திருப்போரூர் கந்தசாமி கோயில் மற்றும் ஆளவந்தான் கோயில் சொத்துகளை மறுஉத்தரவு வரும்வரை யாருக்கும் பத்திரப் பதிவு செய்யக் கூடாது என உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி (பொறுப்பு) முனீஷ்வர் நாத் பண்டாரி,...
தமிழகம்

பொங்கல் தொகுப்பு குளறுபடி குறித்து முறையாக தகவல் தெரிவிக்கவில்லை: அரசு அதிகாரிகள் மீது முதல்வர் ஸ்டாலின் கடும் அதிருப்தி

பொங்கல் தொகுப்பு கொள்முதலில் ஊழல் புகார் எழுந்துள்ள நிலையில், குளறுபடிகள் குறித்து முறையாக தகவல் தெரிவிக்கவில்லை என்று அரசு அதிகாரிகள் மீது முதல்வர் ஸ்டாலின் கடும் அதிருப்தி அடைந்துள்ளார். தமிழகத்தில் பொங்கலை முன்னிட்டு, 2 கோடியே 15 லட்சத்து67,114 அரிசி குடும்ப அட்டைதாரர்கள், 18,946 இலங்கை தமிழர் குடும்பங்களுக்கு ரூ.1,297 கோடி மதிப்பில் கரும்பு மற்றும் பொங்கல்தொகுப்பு பை உட்பட 21 பொருட்களை வழங்க தமிழக அரசு திட்டமிட்டது. இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டு பொருட்கள் வாங்கப்பட்டன. கரும்பை பொறுத்தவரை விவசாயிகளிடமே நேரடியாக கொள்முதல் செய்யப்பட வேண்டும். ஒரு கரும்பு ரூ.33 என்ற அடிப்படையில், 6 அடி உயரத்தில் சராசரிதடிமன் உள்ளதாக இருக்க வேண்டும். கரும்பை வெட்டிக் கொடுக்கக்கூடாது என்று பல்வேறு அறிவுறுத் தல்கள் வழங்கப்பட்டன. பொங்கல் பையை பொறுத்தவரை ஒப்பந்ததாரர் மூலம், சிவகாசி, திருப்பூர், பவானி பகுதிகளில்...
தமிழகம்

இன்று 50 ஆயிரம் மையங்களில் 19-வது மெகா தடுப்பூசி முகாம்

தமிழகம் முழுவதும் இன்று 50 ஆயிரம் இடங்களில் 19-வது மெகா தடுப்பூசி முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சென்னையில் மட்டும் 1,600 இடங்களில் முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது.எனினும்,கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.அந்த வகையில்,சனிக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வந்த நிலையில்,கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து,பொங்கல் பண்டிகை என்பதால்,கடந்த வாரம் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறவில்லை.இதற்கிடையில்,15 வயது முதல் 18 வரை உள்ள சிறார்களுக்கு பள்ளிகளில் மட்டுமே தடுப்பூசி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில்,இவர்களும் இனி சிறப்பு முகாம்களில் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என்று மருத்துவத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தில் தற்போது வரை...
தமிழகம்

தமிழகத்தில் 600 இடங்களில் இன்று பூஸ்டர் தடுப்பூசி முகாம்

தமிழகம் முழுவதும் இன்று 600 இடங்களில் பூஸ்டர் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. ஜனவரி மாதத்தில் மட்டும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள சுமார் 10 லட்சம் பேர் தகுதியுள்ளவர்களாக உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து வியாழக்கிழமை தோறும் பூஸ்டர் தவணை தடுப்பூசி முகாம் நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், ஒன்றியப் பகுதிகள் உள்பட இன்று மொத்தம் 600 இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில் 60 வயதுக்கும் மேற்பட்டோர் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு முன்னுரிமை தரப்பட உள்ளது....
1 483 484 485 486 487 545
Page 485 of 545

Right Click & View Source is disabled.

error: Content is protected !!