தமிழகம்

தமிழகம்

நுங்கம்பாக்கத்தில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கான ஆரம்பகட்ட பணிகள் தொடக்கம்

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், நுங்கம்பாக்கம் பகுதியில் சுரங்க கட்டுமானத்துக்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கியுள்ளன. சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்3 வழித்தடங்களில் 118.9 கி.மீ.தொலைவுக்கு செயல்படுத்தப்படுகிறது. இந்த வழித்தடங்களில் சுரங்கம், உயர்மட்டப் பாதைக்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. தற்போது சுமார் 42 இடங்களில் பணிகள் நடக்கின்றன. இந்த 3 வழித்தடங்களில், மாதவரம் - சிறுசேரி சிப்காட் (45.8 கி.மீ.) முக்கிய வழித்தடமாக உள்ளது. இந்த வழித்தடத்தில் 19.1 கி.மீ. தொலைவுக்கு உயர்மட்டத்திலும், 26.7 கி.மீ. தொலைவுக்கும் சுரங்கத்திலும் பாதைகள் அமைக்கப்பட உள்ளன. இந்நிலையில், நுங்கம்பாக்கம் பகுதியில் சுரங்க கட்டுமானத்துக்கான ஆரம்பகட்ட பணிகள்தொடங்கியுள்ளன. ஸ்டெர்லிங் சாலை - கல்லூரி சாலையில் மெட்ரோ ரயில் சுரங்கப் பணிக்காக, தடுப்புகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நுங்கம்பாக்கம், ஸ்டெர்லிங் சாலை ஆகிய 2 இடங்களில் சுரங்க...
தமிழகம்

அதிமுக பொதுக்குழு : ஈபிஎஸ் மேல்முறையீட்டு மனு இன்று விசாரணை

அதிமுக பொதுக்குழு செல்லாது என்கிற தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து , ஈபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு இன்று விசாரணைக்கு வருகிறது. ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்கில் கடந்த வாரம் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது எனவும், ஜூன் 23 க்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும் என்று தெரிவித்தது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட வேண்டும் என்றும், அத்துடன் பொதுக்குழு கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும் என்றும் தனி நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்திருந்தார். இதன் மூலம் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்வு செய்தது செல்லாத நிலை ஏற்பட்டது. அதிமுக பொதுக்குழு வழக்கில்...
தமிழகம்

தமிழகத்தில் குரங்கும்மை, தக்காளி காய்ச்சல் பாதிப்பில்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் குரங்கு அம்மை, தக்காளி காய்ச்சல் பாதிப்பில்லை என தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். வேலுார், சத்துவாச்சாரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: தமிழகத்தில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 96.99 சதவீதம் பேர் முதல் டோஸ் தடுப்பூசியும், 89.5 சதவீதம் பேர் இரண்டாம் டோஸ் தடுப்பூசியும் செலுத்தி உள்ளனர். மேலும், 3 கோடியே 50 லட்சம் பேருக்கு, பூஸ்டர் தடுப்பூசி செலுத்த வேண்டியுள்ளது. தமிழகத்தில், 27 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளன. தொடர்ந்து பேசிய அவர், அரசு மருத்துவமனைகளில் காப்பீடு திட்டம் அதிகம் பயன்படுத்த துவங்கி உள்ளனர். சுகாதார துறையில் காலியாக உள்ள மருத்துவர், நர்ஸ், டெக்னீசியன்கள் உட்பட, 4,308 காலி...
தமிழகம்

பழனிசாமி அப்பீல் வழக்கு: ஆக.,22ல் விசாரணை?

கடந்த மாதம் 11ம் தேதி கூட்டிய பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீடு மனு, வரும் 22ல் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை 11ல், பழனிசாமி தரப்பு கூட்டிய பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரி, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தாக்கல் செய்த மனுக்களை, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்தார். அவரது உத்தரவில், 'பழனிசாமி தரப்பு ஜூலை 11ல் கூட்டிய பொதுக்குழு செல்லாது; ஜூன் 23க்கு முந்தைய நிலை தொடரும்.'ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமியின் ஒப்புதல் இன்றி, நிர்வாக குழு அல்லது பொதுக்குழு கூட்டத்தை கூட்ட முடியாது' என கூறியிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து, இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, மேல்முறையீடு செய்தார்.தனி நீதிபதி உத்தரவின் சான்றளிக்கப்பட்ட...
தமிழகம்

அதிமுக ஆட்சியில் நடந்த ஸ்மார்ட் சிட்டி ஊழல் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை தாக்கல் செய்தது ஒரு நபர் விசாரணை ஆணையம்.

அதிமுக ஆட்சியில் நடந்த ஸ்மார்ட் சிட்டி ஊழல் தொடர்பாக முதலமைச்சரிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஒரு நபர் ஆணைய தலைவர் டேவிதார் அறிக்கை தாக்கல் செய்து ஆலோசனையில் ஈடுபட்டார். கடந்த 2015ம் ஆண்டு ஒன்றிய அரசு சார்பாக ஸ்மார்ட் சிட்டி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. அந்தத் திட்டத்தின் அடிப்படையில் அதிமுக ஆட்சியில், நாடு முழுவதும் 100 நகரங்களை தேர்வு செய்து ஸ்மார்ட் சிட்டிகளாக மாற்ற திட்டமிடப்பட்டது. முதற்கட்டமாக தமிழகத்தில் சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, தஞ்சை, சேலம், வேலூர், தூத்துக்குடி உள்ளிட்ட 11 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டன. அதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ஒன்றிய அமைச்சகம் ரூ.5,390 கோடி ஒதுக்கியுள்ளது. இதில் தற்போது அளிக்கப்பட்ட தொகை ரூ.3,969 கோடி ஆகும். ஒன்றிய அமைச்சகத்தில் இருந்து ரூ.1,421 கோடி வர வேண்டி உள்ளது....
தமிழகம்

வடபழனி நிதி நிறுவன கொள்ளை – மேலும் 2 பேர் கைது

வடபழனி நிதி நிறுவன கொள்ளை விவகாரத்தில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை வடபழனி மன்னார் முதலிதெருவில் சரவணன் என்பவருக்கு சொந்தமான ஓசோன் கேப்பிட்டல் என்ற தனியார் நிதி நிறுவனத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 7 பேர் கொண்ட மர்ம கும்பல் முகமூடி அணிந்து , ஊழியர்களை கட்டிப்போட்டுவிட்டு ரூ.30 லட்சத்தை கொள்ளையடித்தனர். இது தொடர்பாக வடபழனி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அங்குள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் விருகம்பாக்கத்தை சேர்ந்த ரியாஸ் இக்பால் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட தலைமறைவாகிய குற்றவாளிகளை பிடிக்க 5 தனி படைகள் அமைக்கப்பட்ட நிலையில் கிஷோர் என்பவரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். இந்நிலையில் சென்னை வடபழனி நிதி நிறுவன கொள்ளை வழக்கில் தலைமுறைவாக இருந்த தினேஷ் , சந்தோஷ் கைது செய்யப்பட்டுள்ளனர்....
தமிழகம்

திமுக ஆட்சியில் ஊழலுக்குக் குறைவில்லை-பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு

திமுக ஆட்சியில் ஊழலுக்குக் குறைவில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டினார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவுகளில் கூறப்பட்டுள்ளதாவது: சர்வாதிகாரத்தினாலே புது கோட்டையை கட்டலாம் என்ற தமிழக முதல்வரின் மனக் கோட்டையைத் தகர்க்கக் கூடிய மக்கள் கூட்டம் புதுக்கோட்டையில் நேற்று. கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. திமுக ஆட்சியில் ஊழலுக்குக் குறைவில்லை. சர்வாதிகாரத்திற்கு எல்லை இல்லை. முன்னேற்றத்திற்கு வழி இல்லை என்ற தமிழகத்தின் நிலையை உணர்ந்து, ஊழலற்ற உன்னத ஆட்சி தரும் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையை ஏற்கக் கூடிய மக்களின் எழுச்சி கூட்டம். புதுக்கோட்டை மாவட்ட & மாநில நிர்வாகிகளோடு, மக்களின் பேராதரவுடன் நடைபெற்ற கூட்டம், ஆளும் கட்சியின் மேல் இருக்கும் அதிருப்தியை வெளிச்சப்படுத்தியது என்று அந்தப் பதிவுகளில் குறிப்பிட்டுள்ளார் அண்ணாமலை. முன்னதாக, கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, தமிழக மக்களுக்கு பாஜக தலைவர்...
தமிழகம்

“அன்புச் சகோதரர்; நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும்; கூட்டுத் தலைமை” – எடப்பாடிக்கு பன்னீர் அழைப்பு

கடந்த ஜூலை 11-ம் தேதி அ.தி.மு.க பொதுக்குழு நடத்தப்பட்டு, அதில் கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து ஓ.பி.எஸ் உள்ளிட்ட பலர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து ஓ.பி.எஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் வழங்கிய தீர்ப்பில், ``அதிமுக-வில் ஜூன் 23-ம் தேதிக்கு முன் இருந்த நிலையே பின்பற்ற வேண்டும். அதிமுக-வின் பொதுக்குழுக் கூட்டம், செயற்குழுக் கூட்டம் தனித்தனியே நடத்தப்படக் கூடாது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் நடத்த வேண்டும். பொதுக்குழுவைக் கூட்ட ஒரு சட்ட ஆணையரைக் கட்சி நியமிக்க வேண்டும். அதேபோல, கட்சி சார்ந்து தனிக் கூட்டம் நடத்தக் கூடாது" எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராகத் தேர்வானது செல்லாது என்ற...
தமிழகம்

தருமபுரியில் 3 நாட்கள் அன்புமணி பிரச்சார நடைபயணம்

ஒகேனக்கல் உபரி நீரை தருமபுரி மாவட்ட பாசனத்துக்கு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி பாமக தலைவர் நாளை (19-ம் தேதி) முதல் 3 நாட்களுக்கு தருமபுரி மாவட்டத்தில் பிரச்சார நடைபயணம் மேற்கொள்கிறார். இதுகுறித்து, தருமபுரி மாவட்ட பாமக செயலாளர்கள் வெங்கடேஷ்வரன் எம்எல்ஏ(மேற்கு), செந்தில் (கிழக்கு) ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தருமபுரி மாவட்டத்தின் மேற்கு எல்லையில் காவிரியாறு ஓடுகிறது. வடக்கு எல்லையில் தென்பெண்ணை ஆறு ஓடுகிறது. இருப்பினும், தருமபுரி மாவட்டத்தின் பெரும்பகுதி விவசாய நிலங்கள் வானம் பார்த்த பூமியாகவே உள்ளன. இதற்கு தீர்வு ஏற்படுத்தும் வகையிலும், மாவட்ட விவசாயத்தை மேம்படுத்தவும் ஒகேனக்கல் உபரி நீரை நீரேற்றும் திட்டம் மூலம் தருமபுரி மாவட்ட நீர்நிலைகளில் நிறைத்து பாசனத்துக்கு வழங்க வேண்டும் என பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், இந்த திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி நாளை (19-ம் தேதி) பாமக...
தமிழகம்

அரும்பாக்கம் வங்கி கொள்ளை: முக்கிய குற்றவாளி முருகன் கைது – 18 கிலோ நகைகள் மீட்பு

சென்னை அரும்பாக்கம் வங்கி நகைக்கடன் பிரிவில் இரு நாட்களுக்கு முன்பு நடந்த கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான முருகன் கைது செய்யப்பட்டார். இவர் இதே வங்கியின் ஊழியர் ஆவார். ஏற்கனவே இவரது நண்பர்கள் 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இவர்களிடம் இருந்து இதுவரை 18 கிலோ நகைகள் மீட்கப்பட்டன. சென்னை, அரும்பாக்கம், ரசாக் கார்டன் பகுதியில், பெடரல் வங்கியின் தங்க நகைக் கடன் பிரிவான, ‛பெட் பாங்க்' என்ற கிளை செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று முன்தினம் (ஆக.,13) பட்டப்பகலில் மர்ம நபர்கள் நுழைந்தனர். அவர்கள், பணியில் இருந்த மூன்று ஊழியர்கள் மற்றும் காவலாளிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, கத்திமுனையில் கட்டி போட்டு, லாக்கரில் இருந்த 20 கோடி ரூபாய் மதிப்பிலான 32 கிலோ தங்க நகைகளை, மர்ம நபர்கள்...
1 481 482 483 484 485 563
Page 483 of 563

Right Click & View Source is disabled.

error: Content is protected !!