தமிழகம்

தமிழகம்

காவல் துறையில் அனைவருக்கும் பதக்கம்: குடியரசுத் தலைவர் கொடி பெறும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

குடியரசுத் தலைவர் கொடியை பெறும் நிகழ்வை முன்னிட்டு, டிஜிபி முதல் காவலர் வரை அனைவருக்கும் தமிழக அரசு காவல் பதக்கம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்....
தமிழகம்

புதுக்கோட்டை கோயில் தேர் கவிழ்ந்த விபத்து தொடர்பாக 2 பேர் மீது வழக்குப்பதிவு

புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோயில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இந்த திருவிழாவில் ஏராளாமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அப்போது, தேர் நிலையத்தில் இருந்து இழுக்க தொடங்கிய...
தமிழகம்

ஆக.1ல் அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை

தமிழகத்தில் ஆகஸ்ட் 1-ம் தேதி அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை. ஆகஸ்ட் 1-ம் தேதி தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். வாக்காளர் பட்டியலுடன் ஆதார் அட்டையை இணைக்கும் பணி தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் வரும் ஆக.1-ம் தேதி ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது. இதனிடையே, நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணி ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்குகிறது. இந்த பணிகளை 2023 மார்ச் 31-ம் தேதிக்குள் முடிக்கும் வகையில், மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு, இந்திய தேர்தல் ஆணையம் உரிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இதற்கென '6 பி' என்ற படிவமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது....
தமிழகம்

அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: 3.68 லட்சம் பேர் பட்டம் பெற்றனர்

அண்ணா பல்கலைக் கழக 42வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. 3.68 லட்சம் பேர் பட்டம் பெற்றனர். அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கில் நடந்த விழாவில் 1813 பேர் நேரடியாக பட்டங்களை பெற்றனர். இடப்பிரச்னை காரணமாக பதக்கத்துடன் கூடிய பட்டம் பெறும் 69 பேர் மட்டுமே அரங்கில் உட்கார வைக்கப்பட்டனர். மற்ற மாணவர்கள் அனைவரும் அரங்கின் அருகில் உள்ள கிண்டி பொறியியல் கல்லூரியின் வகுப்பறைகளில் உட்கார வைக்கப்பட்டனர். அவர்கள் விழாவை காண பெரிய டிஜிட்டல் திரைகள் வைக்கப்பட்டு இருந்தன. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, 69 மாணவ மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார். பின்னர் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பட்டமளிப்பு விழாவின் உறுதி மொழியை படிக்க மற்ற மாணவ மாணவியர் உறுதி மொழியை படித்து தாங்கள் அமர்ந்திருந்த...
தமிழகம்

செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் பிரதமர், ஜனாதிபதி படம் இடம்பெற வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு

44ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் இன்று (ஜூலை 29) முதல் தொடங்குகிறது. 187 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் போட்டியில் பங்கேற்கின்றனர். செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரபலப்படுத்த தமிழக அரசு சார்பில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டது. இதில் முதலமைச்சர் ஸ்டாலின் படம் மட்டும் இடம்பெற்றுள்ளது, பிரதமர் மோடி படம் இடம்பெறவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இந்தநிலையில், சிவகங்கையைச் சேர்ந்த ராஜேஷ்குமார் செஸ் ஒலிம்பியாட் தொடர்பான விளம்பரங்களில் பிரதமர் மோடி பெயர் மற்றும் புகைப்படத்தைச் சேர்க்க கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்தார். அதில், “தமிழகத்தில் சென்னை மாமல்லபுரத்தில் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. பிரதமர் மோடி இந்த போட்டிகளை தொடங்கி வைக்கிறார். ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெற உள்ள இந்த போட்டியின் விளம்பரத்திற்காக பெருமளவிலான பொதுமக்களின் வரிப்பணம்...
தமிழகம்

ஆடி அமாவாசை | ராமேசுவரத்தில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடல்

ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். ஆடி அமாவாசை தினத்தில் புனித தலமான ராமேசுவரத்தில் ஆயிரக்கணக்கானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய திரள்வார்கள் என்பதால் அக்னி தீர்த்தக் கடற்கரையில் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டிருந்தன. நேற்று முன்தினம் இரவிலிருந்தே தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்து மட்டுமின்றி, கர்நாடகா, கேரளா, தெலங்கானா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் ராமேசுவரம் வரத் தொடங்கினர். ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமநாதசுவாமி கோயிலில் நேற்று அதிகாலை 4 மணியளவில் நடை திறக்கப்பட்டு ஸ்படிக லிங்க பூஜை நடைபெற்றது. காலை 9 மணியளவில் அம்பாள் தங்கப் பல்லக்கில் வீதி உலா வந்தார். பின்னர் ராமநாதபுரம் சமஸ்தான மண்டகப்படியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதன் பின் காலை 11 மணியளவில் அக்னி தீர்த்தக்...
தமிழகம்

குரங்கம்மை பாதிப்பு;பன்னாட்டு விமான நிலையங்களில் தொடர் கண்காணிப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் உள்ள பன்னாட்டு விமான நிலையங்களைத் தொடர்ந்து கண்காணிப்பதும், கேரள, ஆந்திர எல்லைகளிலிருந்து வருபவர்களுக்கு, குரங்கம்மை பாதிப்பு ஏதாவது உள்ளதா என்பதை கண்டறியவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது" என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியின் கூறியுள்ளார். மதுரை விமான நிலையத்தில், மேற்கொள்ளப்பட்டுள்ள குரங்கம்மை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, தமிழக மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "தமிழகத்தில் உள்ள பன்னாட்டு விமான நிலையங்களைத் தொடர்ந்து கண்காணிப்பதும், கேரள, ஆந்திர எல்லைகளிலிருந்து வருபவர்களை, குரங்கம்மை பாதிப்பு ஏதாவது உள்ளதா என்பதை கண்டறியவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநில எல்லைகளில் இருந்து வருபவர்களுக்கு எச்சரிக்கையாக பரிசோதனை செய்வது கண்காணிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகங்கள், உள்ளாட்சி அமைப்புகள், தொடர்ந்து மக்கள் நல்வாழ்வுத்துறையோடு இணைந்து,...
தமிழகம்

2 ஆண்டுகளுக்குப் பின்னர் பெங்களூரு – காரைக்கால் இடையே ரயில் சேவை மீண்டும் தொடக்கம்

காரைக்கால்- பெங்களூரு இடையே இரு மார்க்கத்திலும் இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயில் சேவை, கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்தபோது நிறுத்தப்பட்டது. கரோனா தொற்று குறைந்ததைத் தொடர்ந்து, அந்த ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என்று பயணிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், 2 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த ரயில் சேவை இரு மார்க்கத்திலும் 25-ம் தேதி (நேற்று) முதல் பயணிகள் சிறப்பு விரைவு ரயிலாக இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. இதன்படி, பெங்களூரு- காரைக்கால் ரயிலானது, பெங்களூருவில் காலை 7.30 மணிக்குப் புறப்பட்டு, ஓசூர் காலை 8.46, தருமபுரி காலை 10.24, சேலம் ஜங்ஷன் நண்பகல் 12.55, சேலம் டவுன் மதியம் 1.12, ஆத்தூர் மதியம் 2.14, தலைவாசல் மதியம் 2.31 மணி என விருத்தாசலம், நெய்வேலி, கடலூர் துறைமுகம், சிதம்பரம் வழியாக, காரைக்காலை...
தமிழகம்

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் கூட்டம்

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் இன்று நடைப்பெற்ற பொதுக்கூட்டத்தில் திரு K எத்திராஜ் மாநில இணை தலைவராகவும், திரு.M.அபூபக்கர் துணை தலைவராகவும், திருமதி S.கலைவாணி மகளிர் அணி தலைவியாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பூர், விழுப்புரம், ராமநாதபுரம், ராணிப்பேட்டை, திண்டுக்கல், தேனீ, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், நீலகிரி, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களுக்கும் சிறப்பு பிரதிநிதிகள் மற்றும் தேர்தல் களப்பணியார்களை நியமிப்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநில தலைவர் திரு.நரேஷ்குமார் அவர்கள் தலைமையில் கூட்டம் சென்னை 100 அடி சாலையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது....
தமிழகம்

மின் கட்டண உயர்வு.. மத்திய அரசை குறைகூறுவதை விடுங்கள் – டிடிவி தினகரன் காட்டம்..

மின் கட்டண உயர்வுக்கு மத்திய அரசை குறை சொல்வதை விட்டுவிட்டு, மக்களை பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அமமுக பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர், அதிமுக உட்கட்சி சண்டை பற்றி எதற்கு பேசிக் கொண்டு இருக்க வேண்டும் என்றும், எல்லாம் தானாக முட்டி மோதி ஒரு முடிவுக்கு வரும். அப்போது பேசலாம் என்றார். தொடர்ந்து , அதிமுகவில் இபிஎஸும், ஓபிஎஸும் நிர்வாகிகளை நீக்குவது, மாற்றுவது பற்றி அந்த கட்சி தொண்டர்களிடம் தான் கேட்க வேண்டும் என்றும், சம்பந்தமே இல்லாத என்னிடம் ஏன் கேட்கிறீர்கள் என்றும் தெரிவித்தார். மேலும், கலைஞர் பேனா நினைவுச் சின்னம் குறித்து கேள்விக்கு பதிலளித்த அவர், "அர்ப்பர்களுக்கு வாழ்வு...
1 484 485 486 487 488 563
Page 486 of 563

Right Click & View Source is disabled.

error: Content is protected !!