தமிழகம்

தமிழகம்

மாமல்லபுரம் பட்டம் விடும் விழா நிறைவு: 30 ஆயிரம் பேர் கண்டு ரசித்தனர்

மாமல்லபுரத்தில் நடந்த சர்வதேச பட்டம் விடும் விழா நேற்றுடன் நிறைவுபெற்றது. கடந்த 3 நாட்களில் 30 ஆயிரம் பேர் கண்டு ரசித்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரம் கடற்கரையில் சுற்றுலாத் துறை மற்றும் க்ளோபல் மீடியா பாக்ஸ் என்ற நிறுவனம் இணைந்து பட்டம் விடும் விழாவை நடத்தின. இதில் இந்தியா தவிர அமெரிக்கா, தாய்லாந்தில் இருந்து பங்கேற்ற கலைஞர்கள் பல்வேறு வண்ண வடிவங்களிலான பட்டங்களை பறக்கவிட்டனர். கடந்த13-ம் தேதி தொடங்கிய இந்த விழா நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் 80-க்கும் மேற்பட்ட பட்டம் விடும் கலைஞர்கள் பங்கேற்று பட்டங்களை பறக்கவிட்டனர். நிகழ்ச்சியின் நிறைவு நாளான நேற்று ஏராளமான வண்ணங்களில் பட்டங்கள் வானில் பறக்கவிடப்பட்டன. நாட்டின் 75-ம் ஆண்டு சுதந்திர விழா மற்றும் விடுமுறை நாளான நேற்று பட்டங்களையும் பாரம்பரிய இசை நிகழ்ச்சிகளையும் கண்டு ரசிப்பதற்காக சென்னை, மற்றும் அதன் புறநகர்...
தமிழகம்

தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற 75-வது சுதந்திர தின விழா

பாரத திருநாடாம் நம் இந்தியாவின் 75வது சுதந்திர தினநலவிழா தேசியவாத காங்கிரஸ் கட்சி தமிழ்நாடு மாநில அலுவலகம்-196 J.N. சாலையில் தமிழ்நாடு தேசியவாத காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர் திருமிகு.p.k.நரேஸ்குமார் அவர்கள் தலைமையேற்று தேசியகொடியை ஏற்றிவைத்து விழா உரையாற்றினார்கள். 75வது சுதந்திர விழா வில் தேசியவாத காங்கிரஸ் கட்சி தமிழ்நாடு மாநிஸ துணைத்தலைவர்கள் திரு.முல்லை எத்திராஜ்,திரு.கோல்டன் அபுபக்கர்- மாநிலப் பொருளாளர்திரு.K.T.K. அரவிந்தன்- மாநிலச் செயலாளர் திருமதி. அனிதா'-வடக்கு மண்டல தலைவர் திரு.வில்சன்-கிருஷ்ணகிரி மாவட்டத் தலைவர் திரு.Dr.K.M.சந்திர மோகன்-திரு.படையப்பா'அலிபாய்-மாநில மகளிரணி தலைவி.Lr..ஜெயராணி. மாநிலத் தலைவி.திருமதி.லாவண்யா,மாநிலச் செயலாளர் திருமதி.A.இராணி- திருமதி.கஸ்தூரி மற்றும் திரளான மாநில-மாவட்ட நிர்வாகிகளும்,பொதுமக்களும்,மாணவர்களும் கலந்துகொண்டு தேசியக்கொடிக்கு வணக்கம் செய்து மரியாதை செய்தனர். தேசியவாத காங்கிரஸ் கட்சி மாநிலத்தலைவர் திரு.P.K.நரேஸ்குமார் அவர்கள் இனிப்புகள் வழங்கினார்கள். தேசியகீதத்துடன் விழா இனிதே நிறைவுற்றது....
தமிழகம்

இலங்கை துறைமுகத்தில் சீன உளவுக்கப்பலை நிறுத்த அனுமதி: டாக்டர் ராமதாஸ், வைகோ கண்டனம்

இந்தியாவின் அழுத்தத்தைத் தொடர்ந்து சீன உளவுக்கப்பலுக்கு அனுமதி மறுத்த இலங்கை அரசு, இப்போது அதன் நிலையை மாற்றிக்கொண்டு அந்தக் கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வர அனுமதித்திருக்கிறது. இலங்கை அரசின் செயல் மிகப்பெரிய நம்பிக்கைத் துரோகம். இலங்கையின் துரோகத்தை இந்தியா புரிந்துகொண்டு அதற்கேற்ற வகையில் வெளியுறவு கொள்கையை வகுக்க வேண்டும். இந்தியாவின் பாதுகாப்பு கருதி, இலங்கைக்கு இலவசமாக வழங்கப்பட்ட கச்சத்தீவை திரும்பப்பெறுவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ:- தற்போது இலங்கை வெளியுறவு அமைச்சகம், யுவான் வாங் 5 உளவுக்கப்பலை அம்பாந்தோட்டை துறைமுகத்தில் வருகிற 16-ந் தேதி (நாளை) முதல் 22-ந் தேதி வரை நங்கூரமிட்டு நிறுத்திக்கொள்ள அனுமதி வழங்கி இருக்கிறது. இது கடும் கண்டனத்துக்குரியது. இந்திய அரசு, இலங்கை அரசின் இத்தகைய செயல்களை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. உடனடியாக இந்தியா இவ்விஷயத்தில் தீவிர கவனம்...
தமிழகம்

சென்னை வங்கி கொள்ளை; முக்கிய குற்றவாளி முருகன் சரண்

அரும்பாக்கம் வங்கி கொள்ளையில் முக்கிய குற்றவாளியாக செயல்பட்ட முருகன் என்பவர் கொரட்டூர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பெடரல் வங்கியில் நேற்று முன்தினம் 32 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. பட்டபகலில் நடந்த இந்த கொள்ளை குறித்து அரும்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பின்னர் அங்கு சென்று விசாரணை நடத்திய போது, வங்கி கிளை காவலாளி மற்றும் மேலாளர், அங்கு பணியாற்றும் பெண் ஊழியர் ஆகியோருக்கு குளிர்பானத்தில் மயக்கமருந்து கலந்து கொடுத்து இந்த கொள்ளை அரங்கேறியது தெரியவந்தது. பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் வங்கியின் முன்னாள் ஊழியரான முருகன் என்பவர் இந்த கொள்ளை சம்பவத்தில் முக்கிய குற்றவாளி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 4 பேரை குற்றவாளிகள் என நிர்ணயித்து தலைமறைவாக உள்ளவர்களை...
தமிழகம்

சென்னை உணவுத் திருவிழாவில் இன்று முதல் பீப் பிரியாணிக்கு அனுமதி

சென்னை உணவுத் திருவிழாவில் இன்று முதல் பீப் பிரியாணிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பு துறை சார்பில் சென்னை தீவுத்திடலில் இன்றும் நேற்று முதல் மூன்று நாட்களுக்கு பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உணவு திருவிழா நடத்தப்படுகிறது. 'சிங்கார சென்னையில் உணவுத் திருவிழா 2022' உஎன்ற பெயரில் நடத்தப்படும் . இந்த திருவிழாவில் திரை கலைஞர்கள் , முக்கிய கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர். 15 0அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இவ்விழாவினை அமைச்சர்கள் சேகர் பாபு மற்றும் மா.சுப்பிரமணியன் இருவரும் நேற்று தொடங்கி வைத்தனர்.இந்த சூழலில் சென்னையில் தமிழ்நாடு அரசின் சார்பில் நடத்தப்படும் உணவு திருவிழாவில் பீஃப் பிரியாணி இடம்பெறவில்லை. இது சர்ச்சையான நிலையில் பீஃப்பிரியாணி அரங்குகள் அமைக்க விற்பனையாளர்கள் யாரும் விருப்பம் தெரிவிக்காததால் பீஃப் பிரியாணி இடம்பெறவில்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேற்று...
தமிழகம்

சர்வதேச காற்றாடி திருவிழா.. களைகட்டிய மாமல்லபுரம்

மாமல்லபுரத்தில் சர்வதேச காற்றாடி திருவிழா இன்று தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. நாட்டின் 76-வது சுதந்திர தினம், வரும் 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதைமுன்னிட்டு முதல்...
தமிழகம்

முற்றும் துறந்த மனிதனாகும் முயற்சியாக ஆன்மிக பாதையில் வாழ்க்கை நடத்துகிறேன்: அண்ணாமலை

முற்றும் துறந்த மனிதனாகும் முயற்சி எடுத்ததுடன், அந்த நிலையை நோக்கி செல்வதற்காக ஆன்மிக பாதையில் வாழ்க்கை நடத்திக் கொண்டிருப்பதாக தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். திருக்கழுகுன்றம் அடுத்த தேசுமுகிப்பேட்டையில் உள்ள சிவனடியார் சிவதாமோதரனை, கே.அண்ணாமலை அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார். அப்போது அண்ணாமலை பேசியதாவது: தற்போது ஆன்மிகத்தின் மீதான நாட்டம் இளைய தலைமுறையினரிடம் குறைவாக உள்ளது. தமிழகத்தில் ஆன்மிக ஆட்சி வரவேண்டும். அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க ஆன்மிக ஆட்சி வேண்டும். ஆன்மிகம் என்பது கோயிலில் நித்தியப்பூஜை செய்வது கிடையாது. அது மக்களுக்கான சிந்தனை. சாதி, மதத்தை எல்லாம் தாண்டி மனிதனை மனிதனாகப் பார்ப்பது. அதைவிட மிக முக்கியமானது இருப்பவன், தனக்கு எவ்வளவு தேவையோ அதைத்தாண்டி இருப்பவற்றை இல்லாதவருக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவதுதான் ஆன்மிக ஆட்சி. அப்படிப்பட்ட ஆன்மிக ஆட்சிக்குதான்...
தமிழகம்

இபிஎஸ்..? ஓபிஎஸ்.? யார் கை ஓங்கும்.. பொதுக்குழு தீர்மானம் செல்லுமா.. நீதிமன்றத்தில் இன்று விசாரணை

அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லுமா? செல்லாதா என உயர்நீதிமன்றத்தில் இன்று முதல் விசாரணை நடைபெறவுள்ளது. இதனையடுத்து தான் பொதுக்குழு தீர்மானம் தொடர்பாக முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம் அக்கட்சியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கடந்த மாதம் 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் நடைபெற இருப்பதாகவும் அந்த கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்ந்தெடுக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியானது. இதனையடுத்து அ.தி.மு்க பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும், என ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி அமர்வு, பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு அளித்துள்ளதால் பொதுக்குழுவை நடத்தலாம். விதிகளை மீறினால் நீதிமன்றத்தை நாடலாம் என தீர்ப்பு வழங்கினார். இதையடுத்து கடந்த 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடத்தப்பட்டு, எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்தெடுக்கப்பட்டார்.மேலும் சிறப்பு...
தமிழகம்

கவர்னருடன் ரஜினிகாந்த் அரசியல் பேச்சு – மார்க்சிஸ்ட் கண்டனம்

நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் குறித்து டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பல்வேறு துறை பிரபலங்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில் நடிகர் ரஜினிகாந்தும் கலந்து கொண்டார். இந்த நிலையில் டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய அவர், கிண்டி ராஜ்பவனில் கவர்னர் ஆர்.என்.ரவியை நேற்று காலை 11.30 மணியளவில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடம் நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது அரசியல் குறித்து விவாதித்ததாக ரஜினிகாந்த் பரபரப்பு கருத்தை தெரிவித்தார். இந்நிலையில், கவர்னருடன் அரசியல் குறித்து விவாதித்ததாக நடிகர் ரஜினிகாந்த் கூறிய கருத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:- அரசியல் அலுவலகமா? கவர்னர் மாளிகை? இனியும் பொறுப்போமா? தமிழ்நாடு கவர்னரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சந்தித்து...
தமிழகம்

சிறு, குறு தொழில் துறைக்கு உதவுவதற்கு ஒன்றிய அரசு எடுத்த முயற்சிகள் என்ன? – வைகோ கேள்வி

சிறு, குறு தொழில் துறைக்கு உதவுவதற்கு ஒன்றிய அரசு எடுத்த முயற்சிகள் என்ன? என்று மதிமுக பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ கேள்வி எழுப்பிய நிலையில் அமைச்சர் பானு பிரதாப் சிங் வர்மா பதிலளித்துள்ளார். (அ) தொழில்துறை உற்பத்தி, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆகியவற்றின் அடிப்படையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறையின் குறிப்பிடத்தக்க பங்களிப்பைக் கருத்தில் கொண்டு, தொழில் துறைக்கு, குறிப்பாக கொரோனா தொற்று முடக்கத்தின்போது ஏதேனும் பிணை எடுப்புத் தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளதா? (ஆ) கடந்த மூன்று ஆண்டுகளில் புதிய சவால்களை எதிர்கொள்வதற்கும், உயிர்வாழ்வதற்கும் சிறு, குறு தொழில் துறைக்கு உதவுவதற்கு ஒன்றிய அரசு எடுத்த முயற்சிகள் என்ன? (இ) ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்ட சலுகைகள் மற்றும் நிவாரணங்கள் உரியவர்களுக்கு கிடைக்கிறதா என்பதைக் கண்டறிய ஏதேனும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளதா? (ஈ)...
1 482 483 484 485 486 563
Page 484 of 563

Right Click & View Source is disabled.

error: Content is protected !!