நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்கரை கடல்பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த புஷ்பவனம் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.நாட்டுப்படகில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது புஷ்பவனம் பகுதி மீனவர்களான பன்னீர்செல்வம் , நாகமுத்து,ராஜேந்திரன் ஆகியோர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. ரப்பர் கட்டை,இரும்பு பைப்,அரிவாள் போன்ற ஆயுதங்களால் இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியதாகவும்,மேலும்,படகில் இருந்த 300 கிலோ மீன்பிடி வலைகள் உள்பட ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருட்களையும் எடுத்து சென்றதாகவும் மீனவர்கள் புகார் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து,காயமடைந்த 3 பெரும் சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
931views
You Might Also Like
கிரீன் குளோப் நிறுவனரும் தலைவருமான திருமதி ஜாஸ்மின் அபூபக்கர் அவர்களுக்கு அன்னை தெரசா விருது
அன்பு, கருணை, மனிதநேயம் – வாழ்வின் உண்மையான செல்வம் இவ்வுலகிற்கு நாம் எதையும் கொண்டு வரவில்லை; இவ்வுலகை விட்டு செல்லும் போதும் எதையும் எடுத்துச் செல்லப் போவதில்லை....
வேலூர் மாநகராட்சியில் தூய்மை பணியாளராக 38 – ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வுபெற்ற செல்விக்கு பணிநிறைவு பாராட்டு விழா
வேலூர் மாநகராட்சி 2-வது மண்டலம்சத்துவாச்சாரியில் கடந்த 38 - ஆண்டுகளாக தூய்மை பணியாளராக பணிபுரிந்து இம்மாதத்துடன் ஓய்வுபெற்றவர் விருதம்பட்டு ஜி.செல்வி. பணி நிறைவு பாராட்டு விழா செல்விக்கு,...
குடியாத்தத்தில் இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பழைய பஸ் நிலையத்தில் ஆலய தரிசன கட்டணத்தை ரத்து செய்யக்கோரி இந்து முன்னணிசார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாநில நிர்வாக குழு உறுப்பினர்...
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா
அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் பொதுத் தேர்வில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு மற்றும் அறந்தாங்கி,அரசு...
மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் அறக்கட்டளைச் சொற்பொழிவு
மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி தமிழ் உயராய்வு மையம் நடத்தும் திருமிகு நித்தியானந்த சுவாமிலவாரு அறக்கட்டளைச் சொற்பொழிவு 28/7/2026 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்றது. இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளரான தமிழ்...




