தமிழகம்

தமிழகம்

மதச்சார்பற்ற இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை சமஸ்கிருத-வேதமயமாக்கும் மோடி அரசு – சு.வெங்கடேசன் எம்.பி., நேர்காணல்

நவம்பர் 26 (இன்று) இந்திய அரசியலமைப்புச் சட்ட தினம் ஆகும். இந்த நாளைக் கொண்டாடுவது என்பது, அரசியலமைப்புச் சட்டத்தையும் அது உறுதிசெய்துள்ள மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசு உள்ளிட்ட விழுமியங்களையும் பாதுகாப்பதற்காக நாட்டு மக்கள் உறுதியேற்றுக் கொள்வதே ஆகும். ஆனால், ஒன்றிய பாஜக அரசு இந்த ஆண்டு நவம்பர் 26 அரசியலமைப்புச் சட்ட தினத்தையொட்டி, இந்தியா என்பது முழுக்க முழுக்க ஒரு வேத நாகரிக நாடு என்பதை நிறுவுவதற்கான குரூர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதற்காக இந்தியாவின் வரலாற்றையே திரித்து எழுதும் நோக்குடன், இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎச்ஆர்) மூலமாக கருத்துரு ஒன்றை உருவாக்கி அதை அனைத்து அரசுத் துறைகள், கல்வி நிலையங்கள் ஆகியவற்றிற்கு அனுப்பி, அந்த கருத்துருவின் அடிப்படையில் உறுதியேற்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்துமாறு வழிகாட்டியுள்ளது. ஐசிஎச்ஆர் உருவாக்கிய ‘‘பாரதம்: ஜனநாயகத்தின் தாய்’’ (பாரத் : லோக்...
தமிழகம்

சிவகாசி அருகே, ஊராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்

சுகாதார வளாகம் அமைக்க வலியுறுத்தி சிவகாசி அருகேயுள்ள ஆனையூர் ஊராட்சி அலுவலகத்தில், பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள ஆனையூர் ஊராட்சியில், கட்டளைபட்டி கிராமம் உள்ளது. இங்கு சுமார் 500க்கும் மேற்பட்ட வீடுகளும், சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களும் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக, ஒரு சுகாதார வளாகம் கட்டப்பட்டிருந்தது. முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால், பல மாதங்களாக சுகாதார வளாகம் சிதைந்து, செயல்படாத நிலையில் உள்ளது. இதனால் இந்தப்பகுதி மக்கள் காலைக்கடனை கழிப்பதற்காக திறந்த வெளியை பயன்படுத்த வேண்டிய அவலம் இருந்து வருகிறது. சேதமடைந்துள்ள சுகாதார வளாகத்தை அகற்றிவிட்டு, புதிய சுகாதார வளாகம் கட்டித்தர வேண்டும் என்று இந்தப்பகுதி மக்கள் பல மாதங்களாக கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால் இது குறித்து எந்த நடவடிக்கையும்...
தமிழகம்

பெண்களுக்கு எதிரான, வன்முறை ஒழிப்பு தினக் கருத்தரங்கு

சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, மாவட்ட அளவிலான கருத்தரங்கு நிகழ்வினை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தொடங்கி வைத்தார். சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகக் கூட்டரங்கில், சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, மாவட்ட அளவிலான கருத்தரங்கு நிகழ்வினை, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தொடங்கி வைத்து தெரிவிக்கையில், உலகளவிலும், நமது நாட்டிலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழித்திடும் பொருட்டு, சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் அனுசரிக்கப்பட்டு, அதற்கான விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாலின அடிப்படையில் அனைவரும் சமம் என்ற உணர்வுடன், பெண்களை பாதுகாக்க வேண்டிய சமூகப் பொறுப்பும் நாம் அனைவரிடத்திலும் இருத்தல் வேண்டும். குறிப்பாக, பெண்கள், பெண்களுக்கான அனைத்து உரிமைகள் குறித்தும் அறிந்து கொண்டு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அரசியலமைப்பு சட்டம்...
தமிழகம்

நிலக்கோட்டை தொகுதியில் வாக்குச்சாவடி(BLA2) முகவர்கள் கூட்டம்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் (BLA2) வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடைபெற்றது. இவ்விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர், கழகத் துணைப் பொதுச் செயலாளர் ஐ .பெரியசாமிBA. BGL., MLA., , திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந்தில் குமார் BABL.,MLA. ஆகியோரின் ஆலோசனையின் பெயரில் திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் பா. வேலுச்சாமி தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். மேலும் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் ஆ. நாகராஜன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பெ.கரிகால பாண்டியன், நிலக்கோட்டை ஒன்றிய செயலாளர்கள் சௌந்தரபாண்டி மற்றும் மணிகண்டன், பேரூர் கழகச் செயலாளர் ஜோசப் கோவில் பிள்ளை பேரூராட்சி தலைவர் சுபாஷினி பிரியா கதிரேசன் மற்றும் கழக முக்கிய பிரமுகர்கள் கிளைச் செயலாளர்கள் வாக்குச்சாவடி முகவர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் புதிய வாக்காளர்கள் சேர்ப்பது மற்றும் பெயர் திருத்தம்...
தமிழகம்

மதுரை சிலைமான் அருகே ராமநாதபுரம் சாலையில் 1600 கிலோ ரேஷன் அரிசி கடத்திய ஒருவர் கைது

மதுரை சிலைமான் அருகே ராமநாதபுரம் சாலையில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர் அப்போது அந்த வழியாக வந்த டாட்டா ஏசி வாகனத்தை சோதனை செய்தபோது சட்ட விரோதமாக ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரிய வந்தது. தொடர்ந்து சோதனை மேற்கொண்டதில் 40 மூடைகளில் 1600 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது தொடர்ந்து வாகனத்தை ஒட்டி வந்த மதுரையைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவரை போலீசார் கைது செய்து குடிமைப் பொருள் வழங்கல் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசிடம் ஒப்படைத்தனர்.  மேலும் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து தலைமறைவாக இருக்கும் உரிமையாளரை தேடி வருகின்றனர். செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்...
தமிழகம்

கிராம மக்கள் ஆவேசத்துடன் அரசு பேருந்தை சிறை பிடித்து போராட்டம்.

திருமங்கலம் அருகே உரிய நேரத்தில் பள்ளி மாணவ, மாணவிகளை தங்களது கிராமத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டிய அரசு நகர்ப் பேருந்து முன்கூட்டியே வந்ததால் , கிராம மக்கள் ஆவேசத்துடன் அரசு பேருந்தை சிறை பிடித்து போராட்டம். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே T. கொக்குளம் கிராமத்தைச் சார்ந்த கிராம மக்கள் , அரசு நகர் பேருந்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 20 நிமிடத்திற்கு பிறகு , அரசு நகர்ப் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் உரிய நேரத்தில் வருவதாக உறுதி அளித்ததன் பேரில், போராட்டத்தை கைவிட்டனர். மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து , திருமங்கலம் அருகே உள்ள திருமால் வழியாக புதுப்பட்டிக்கு வர வேண்டிய அரசு நகர் பேருந்து , மாலை 4 மணிக்கு பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து புதுப்பட்டிக்கு வரக் கூடிய மாணவிகளை ஏற்றுக்...
தமிழகம்

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் எச்சரிக்கை

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மதுரை மாவட்டத்தில் திருட்டு வழிப்பறி போன்ற குற்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். மேலும் திருட்டு வழிப்பறி போன்ற குற்ற செயலில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து நடவடிக்கைகள் மேற்கொள்ள தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 30.09.2022 ஆம் தேதி முதல் தற்போது வரை மதுரை மாவட்டம் திருமங்கலம் உட்கோட்டம் திருமங்கலம் நகர் காவல் நிலையத்தில் இருசக்கர வாகனங்கள் திருடு போனது சம்பந்தமாக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வருகிறது. 24.11.2022 ம் தேதி மேற்படி திருட்டு வழக்குகளில் ஈடுபட்ட இரண்டு நபர்களை காவல் துறையினால் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து _ 12 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, மேற்படி வழக்கின் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேற்படி...
தமிழகம்

அரசு பள்ளி வளாகங்களில் மரக்கன்று நடும் பணி

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், திருப்புல்லாணி வட்டார அரசு மேல்நிலைப்பள்ளி வளாகங்களில் மரக்கன்று நடும் பணி நடந்தது. பசுமை தமிழகம், அறம் விழுதுகள் அறக்கட்டளை சார்பில் புதுமடம், உச்சிப்புளி, ரெகுநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகங்களில் நீண்ட கால பலன் தரும் கொய்யா, மா, சப்போட்டா, மாதுளை பழ மரக்கன்றுகள், நிழல் தரும் வேம்பு, புங்கன் உள்ளிட்ட மரக்கன்றுகள் இன்று நடப்பட்டன. அறக்கட்டளை நிறுவனம் ஏ.முஹமது சலாவுதீன் ஏற்பாடு செய்தார். செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்...
தமிழகம்

உலக மரபு வார விழா தொல்லியல் கருத்தரங்கு

தொல்லியல் பற்றி அடுத்த தலைமுறையினரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19 முதல் 25 வரை உலக மரபு வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு தமிழக அரசு தொல்லியல் துறை, ராமநாதபுரம் சிஎஸ்ஐ. கல்வியியல் கல்லூரி இணைந்து தொல்லியல் கருத்தரங்கு நடத்தியது. கல்லூரி தாளாளர் தேவ.மனோகரன் மார்ட்டின் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் முனைவர் ஆனந்த் வரவேற்றார். ராமநாதபுரம் மாவட்ட தொன்மை பாதுகாப்பு மன்றங்களின் ஒருங்கிணைப்பாளர் வே.ராஜகுரு, ராமநாதபுரம் மாவட்டத்தில் புதியதாக கண்டறியப்பட்ட நாணயங்கள், கல்வெட்டுகள், தொல்லியல் இடங்கள், இயற்கை தாவரங்கள் குறித்தும், ராமநாதபுரம் மாவட்ட தொல்லியல் அலுவலர் ம.சுரேஷ், கீழடி, மயிலாடும்பாறை, கொற்கை, சிவகளை போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட புதிய தொல்லியல் அகழாய்வுகள் பற்றியும், கல்லூரி முதலாமாண்டு மாணவி வே.சிவரஞ்சனி நடுகற்கள், மலைக்குகைகள், முத்திரைகள், மோதிரங்கள், பானை ஓடுகளில் காணப்படும் சங்க...
தமிழகம்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டிஒன்றியத்தில் புதிய நியாய விலை கட்டிடம்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றியம் G. உசிலம்பட்டி. கிராமத்தில் புதிய நியாய விலை கட்டிடம் ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜன் திறந்து வைத்தார். ஜி உசிலம்பட்டி பஞ்சாயத்து தலைவர் சுபேந்திரன் துணைத் தலைவர் பவுண்ம்மாள் கிளைச் செயலாளர் ராமமூர்த்தி ஒன்றிய செயலாளர் ராஜாராம் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நியாய விலை கடை மூலம் சுமார் 1000 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள். செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்...
1 414 415 416 417 418 545
Page 416 of 545

Right Click & View Source is disabled.

error: Content is protected !!