பச்சிளம் குழந்தைகளின் பராமரிப்பு தொடர்பான விழிப்புணர்வு காரைக்குடி அப்போலோ ரீச் மருத்துவமனையில் புதிதாய் பிறந்த குழந்தைகள் வாரக் கொண்டாட்டம்
ஒவ்வோர் ஆண்டும் நவ.15 - 21 வரையிலான ஏழு நாட்கள் புதிதாய்ப் பிறந்த குழந்தைகள் வாரமாக இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் புதிதாகப் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்வதை முக்கிய முன்னுரிமை தேவைகளில் ஒன்றாக முன்னிறுத்தவும், இதுதொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாகவும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் இந்த வாரத்தை அனுசரிக்கிறது. நடப்பாண்டில் இந்த வாரத்திற்கான கருப்பொருள் "பாதுகாப்பான, தரமான, கவனமான பராமரிப்பு - குழந்தைகளின் பிறப்புரிமை" என்பதாகும். இந்த நிலையில், பச்சிளம் குழந்தைகளின் பராமரிப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக காரைக்குடி அப்போலோ ரீச் மருத்துவமனை புதிதாய்ப் பிறந்த குழந்தைகள் வாரத்தை கொண்டாடுகிறது. இந்த மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு நலம் பெற்ற குழந்தைகள் இது தொடர்பான விழாவில் பங்கேற்றனர். அப்போலோ ரீச் மருத்துவமனையில், அண்மையில்...
