தமிழகம்

தமிழகம்

பச்சிளம் குழந்தைகளின் பராமரிப்பு தொடர்பான விழிப்புணர்வு காரைக்குடி அப்போலோ ரீச் மருத்துவமனையில் புதிதாய் பிறந்த குழந்தைகள் வாரக் கொண்டாட்டம்

ஒவ்வோர் ஆண்டும் நவ.15 - 21 வரையிலான ஏழு நாட்கள் புதிதாய்ப் பிறந்த குழந்தைகள் வாரமாக இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் புதிதாகப் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்வதை முக்கிய முன்னுரிமை தேவைகளில் ஒன்றாக முன்னிறுத்தவும், இதுதொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாகவும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் இந்த வாரத்தை அனுசரிக்கிறது. நடப்பாண்டில் இந்த வாரத்திற்கான கருப்பொருள் "பாதுகாப்பான, தரமான, கவனமான பராமரிப்பு - குழந்தைகளின் பிறப்புரிமை" என்பதாகும். இந்த நிலையில், பச்சிளம் குழந்தைகளின் பராமரிப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக காரைக்குடி அப்போலோ ரீச் மருத்துவமனை புதிதாய்ப் பிறந்த குழந்தைகள் வாரத்தை கொண்டாடுகிறது. இந்த மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு நலம் பெற்ற குழந்தைகள் இது தொடர்பான விழாவில் பங்கேற்றனர். அப்போலோ ரீச் மருத்துவமனையில், அண்மையில்...
தமிழகம்

ஆம்பூர் அருகே மலைபாம்பின் பிடியிலிலிருந்து பஞ்சாயத்து பம்பு ஆப்ரேட்டர் மீட்பு

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கைலாசகிரி மலை அடிவாரத்தில் 10 அடி நீளமுள்ள ஒரு மலைபாம்பை பொதுமக்கள் பிடிக்க முற்பட்டனர்.  அப்போது அப்பகுதியை சேர்ந்த பஞ்சாயத்து பம்ப் ஆபரேட்டர் சங்கர் பிடிக்க முயன்றபோது, அவரின் காலை மலைப்பாம்பு பிடித்து கொண்டது. இதனால் சங்கருக்கு மூச்சுதிணறியது.  பொதுமக்களால்சங்கரை மீட்க முடியவில்லை.  தகவல் அறிந்தவனத்துறையினர் விரைந்து வந்து சங்கர் உடலில் இருந்த பாம்பை விடுத்துகாப்பு காட்டில் விட்டனர்.  உயிர்பிழைத்ததை எண்ணி சங்கர் பெருமூச்சிவிட்டார். செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்...
தமிழகம்

உசிலம்பட்டி நகரப்பகுதியில் வெடி வெடித்தால் ரூ10 ஆயிரம் அபராதம் விதிக்க வேண்டும்.நகர்மன்றக் கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் இன்று சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் தலைமையில் நகர மன்ற தலைவர் சகுந்தலா துணைத்தலைவர் தேன்மொழி ஆகியோர் முன்னிலையில் நகர்மன்ற கவுன்சிலர் அவசரக் கூட்டம் நடைபெற்றது. இதில் 24 வார்டுகளில் உள்ள அடிப்படை வசதிகள் வார்டு கவுன்சிலர்கள் குறைகளாக எடுத்து முன் வைத்தனர். அதனை தொடர்ந்து உசிலம்பட்டி பகுதிகளில் பட்டாசு வெடிக்கும் தனியார் மண்டபங்களில் விசேஷம் மற்றும் இல்ல விழாவில் கலந்து கொள்ள வரும் நபரிடம் பட்டாசு வெடிக்க கூடாது என தெரிவிக்க வேண்டும். மேலும் அதனை மீறி பட்டாசு வெடித்தால் தனியார் மண்டப உரிமையாளர் மீது ரூபாய் பத்தாயிரம் முதல் ரூ20 ஆயிரம் வரை அபராதம் விதிக்க வேண்டும். மீண்டும் இதுபோல் செயலில் ஈடுபட்டால் காவல்துறையிடம் புகார் அளித்து கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கவுன்சிலர்கள் தெரிவித்தனர்....
தமிழகம்

மணக்குள விநாயகர் கோயில் யானை ‘லட்சுமி’ நடைபயிற்சியில் மயங்கி விழுந்து திடீர் மரணம்: மீளா துயரில் பக்தர்கள்

ஓய்வில் இருந்த மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி நடைபயிற்சியின் போது மயங்கி விழுந்து இன்று காலை உயிரிழந்ததால் பக்தர்கள் சோகமடைந்துள்ளனர். புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலுக்கு கடந்த 1996ம் ஆண்டு ஐந்து வயதில் லட்சுமி யானை வந்தது. புதுச்சேரியில் உள்ள பக்தர்களுக்கு மிகவும் நெருக்கமான யானையாக லட்சுமி திகழ்ந்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மணக்குள விநாயகர் கோவிலுக்கு வரும் பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் யானை லட்சுமியை தரிசிக்காமல் சென்றதில்லை. தமிழகத்தில் கோவில் யானைகளுக்கு ஆண்டுதோறும். 48 நாட்கள் புத்துணர்வு முகாம் நடத்தப்படுவது வழக்கம். கரோனா காலத்தில் கோவில் யானைகளுக்கான இந்த புத்துணர்வு முகாம் நிறுத்தப்பட்டது. இந்த முகாமில் ஆண்டுதோறும் புதுவை மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமியும் பங்கேற்று திரும்பும். இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக புத்துணர்வு முகாம் இல்லாததால் இந்த ஆண்டு கோவில்...
தமிழகம்

வேலூர் அருகே நெடுஞ்சாலையில் பைப் ஏற்றிவந்த லாரி கவிழ்ந்து விபத்து

வேலூர் மாவட்டம் பொய்கை தேசிய நெடுஞ்சாலையில் பெங்களூரிலிருந்து அடர்த்தி குறைந்த இரும்பு பைப்புகளை ஏற்றிக்கொண்டு சென்னையை நோக்கி செல்லும்போது பொய்கை என்ற இடத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சென்டர்மீடியனில் மோதி எதிர் திசையில் பெங்களூரில் சாலையில் பைப்புகள் சிதறின. இந்த விபத்தில் டிரைவர் உள்ளிட்ட 3 பேர் லேசான காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விரிஞ்சிபுரம் காவல்துறையினர் வந்து விபத்தில் கவிழ்ந்த லாரியை மீட்டு போக்குவரத்தை சரிசெய்தனர். செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்...
தமிழகம்

ஈஷாவின் வழிகாட்டுதலால் ரூ.17.7 கோடி Turn over செய்த விவசாயிகள் – வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனம் புது சாதனை

ஈஷாவின் வழிகாட்டுதலின் கீழ் செயல்படும் கோவை வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனம் 2021-2022-ம் நிதியாண்டில் ரூ.17.7 கோடி மொத்த வருவாய் ஈட்டி (Annual Turn over) புது சாதனை படைத்துள்ளது. இது கடந்த நிதியாண்டை விட ரூ.3.7 கோடி அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனம் சத்குருவின் ஆலோசனையின் படி, கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் கடந்த 2013-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 1063 விவசாய உறுப்பினர்களை கொண்டுள்ள இந்நிறுவனத்தில் 404 பேர் பெண் விவசாயிகள் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து லாபகரமாக இயங்கி வரும் இந்நிறுவனத்தின் ஆண்டு பொது கூட்டம் கோவை ஈஷா யோகா மையத்தில் இன்று (நவம்பர் 30) நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான விவசாய உறுப்பினர்கள் பங்கேற்றனர். அவர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்ட தகவலின்படி, வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்தின் உறுப்பினர்கள் மொத்தம் 5,859 ஏக்கரில் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிறுவனம்...
தமிழகம்

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு சிறந்த ஆய்வு கட்டுரை சமர்ப்பித்த மாணாக்கருக்கு பரிசு

தமிழ்நாடு அறிவியல் இயக்கம், மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் சார்பில் 30 வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு ராமநாதபுரம் நேஷனல் அகாடமி மெட்ரிக் பள்ளியில் நடந்தது. மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் துவக்கி வைத்தார். ஆரோக்கியம், நல்வாழ்வுக்காக சுற்றுச்சூழல் அமைப்பை புரிந்து கொள்வது என்ற மைய கருப்பொருளில் நூறு பள்ளிகளை சேர்ந்த 300 மாணவர்கள் சமர்ப்பித்த 150 க்கும் மேற்பட்ட ஆய்வு கட்டுரைகளை ஆட்சியர் பார்வையிட்டார். தனியார் பள்ளிகளில் சீனியர் பிரிவில் கீழக்கரை முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரி, ராமநாதபுரம் ஷிபான் நூருல் மெட்ரிக் பள்ளி, ராமநாதபுரம் நேஷனல் அகாடமி மெட்ரிக் பள்ளி, பரமக்குடி வ.உ.சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ராமநாதபுரம் வேலு மாணிக்கம் மெட்ரிக் பள்ளி, ஜூனியர் பிரிவில் முதுகுளத்தூர் காமராஜர் மெட்ரிக் பள்ளி, உச்சிப்புளி நேஷனல் அகாடமி மெட்ரிக் பள்ளி, அரசு...
தமிழகம்

திமுக.விவசாய அணி மாநில இணைச் செயலாளராக திருமங்கலம் முன்னாள் எம்எல்ஏ முத்துராமலிங்கம் நியமனம் கட்சியினர் வாழ்த்து

திமுகவில் கட்சியினருக்கு சமீபத்தில் புதிதாக பொறுப்புகள் அறிவிக்கப்பட்டிருந்தது அதில்.திருமங்கலம் முன்னாள் எம்எல்ஏ முத்துராமலிங்கத்திற்கு மாநில விவசாய அணி இணைச் செயலாளராக திமுக தலைமையால் அறிவிக்கப்பட்டிருந்தது இதனை ஒட்டி மதுரை மாநகர் மற்றும் புறநகர் வடக்கு தெற்கு மாவட்டத்தை சேர்ந்த திமுகவினர் ஏராளமானோர் அவரை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்...
தமிழகம்

தங்கச்சிமடம் பள்ளியில் கூடுதல் வகுப்பறை பூமிபூஜை

ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் புனித யாகப்பர் பள்ளியில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.24 லட்சம் மதிப்பில் 2 வகுப்பறை கட்டுமான பூமிபூஜை நடந்தது. நவாஸ் கனி எம்பி துவங்கி வைத்தார். மாவட்ட கவுன்சிலர் ரவிச்சந்திர ராமவன்னி, மாவட்ட ஊராட்சி துணை தலைவர் வேலுச்சாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் வருசை முஹமது, மண்டபம் கிழக்கு ஒன்றிய செயலர் நிலோபர் கான், கத்தோலிக்க பங்கு தந்தையர் ஜீவன், மெக்கன்ரே, பள்ளி நிர்வாகி பிரபு, பரதவ சமுதாய தலைவர்கள் சாம்சன், சகாயம் விசைப்படகு மீனவ சங்க தலைவர்கள் சேசுராஜா, ஆல்வின், தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சேனாதிபதி சின்னத்தம்பி உள்பட பலர் கலந்துகொண்டனர். நவாஸ் கனி கூறுகையில் 1 மத்திய அரசு 1முதல் 8 வகுப்பு சிறுபான்மையின குழந்தைகளுக்கான கல்வி உயவித்தெகையை நிறுத்தியது...
தமிழகம்

சோழவந்தான்.தொகுதி.சமயநல்லூரில்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்பு பேரவை கூட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர் மாவட்ட குழு சார்பில் சிறப்பு பேரவை கூட்டம் சமயநல்லூரில் நடைபெற்றது. இந்த பேரவை கூட்டத்திற்கு கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.பாலா தலைமை வகித்தார். கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே. சாமுவேல்ராஜ் மத்திய மாநில குழு முடிவுகளை விளக்கி பேசினார். இந்த கூட்டத்தில் கட்சியின் புறநகர் மாவட்ட செயலாளர் கே.ராஜேந்திரன் மாவட்டக் குழு முடிவுகளை பேசினார். இதில் கட்சியின் மாநில குழு உறுப்பினர்கள் எஸ்.கே.பொன்னுத்தாய், மற்றும் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பா.ரவி, த.செல்லக்கண்ணு, வி.பி.முருகன், வி.உமாமகேஸ்வரன் பி.ஜீவானந்தம், செ.முத்துராணி, , மாவட்ட குழு உறுப்பினர்கள் இடைகமிட்டிச் செயலாளர்கள் நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டததின் நிறைவாக புறநகர் மாவட்டததில் தீக்கதிர் நாளிதழ்களுக்கான 140ஆண்டு சந்தா, 26 அரையாண்டு சந்தா என மொத்தம் 166 சந்தாவிற்கான தொகை...
1 412 413 414 415 416 556
Page 414 of 556

Right Click & View Source is disabled.

error: Content is protected !!