தமிழக ஆளுநர் மக்களுக்கு எதிராக செயல்படுகிறார் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு ஆன்லைன் ரம்மி தொடர்பான மசோதாவை கிடப்பில் போட்டிருப்பது. பாஜக பாலியல் ஜனதா கட்சியாக உள்ளது.சூர்யா சிவா மீது தமிழக காவல்துறை வழக்காக பதிவு செய்த அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.. -எம்பி மாணிக்கம் தாகூர் பேட்டி
மதுரை திருநகர் அனைத்து வியாபாரிகள் நல சங்கம் மற்றும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் இணைந்து நடத்தும் 37 வதுதேசியப் புத்தக கண்காட்சி துவக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கண்காட்சியை திறந்துவைத்து குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்கள் சந்தித்த எம்பி மாணிக்கம் தாகூர் கூறுகையில்: ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் ஆளுநர் செயல்பாடு குறித்த கேள்விக்கு, தமிழக மக்களுக்கு எதிராக செயல்படுகிறார் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு ஆன்லைன் ரம்மி தொடர்பான மசோதாவை கிடப்பில் போட்டிருப்பது. இது மிகப்பெரிய ஐயத்தை ஏற்படுத்துகிறது. தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டம் தலைவிரித்தாடுகிறது. பல மக்கள் தங்களின் சேமிப்புகளையும், கடன் வாங்கி பணங்களையும் இழந்து தற்கொலைக்கு தள்ளப்படுகிறார்கள். ஆளுநர் தாமதப்படுத்துவது அவரின் நேர்மையில் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஆளுநர் ஏன், எதற்காக இதை ஆதரிக்கிறார் என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது. இதைப்...
