தமிழகம்

தமிழகம்

சிவகாசி பகுதியில், பட்டாசு ஆலைகளில் உற்பத்தி பணிகள் துவங்கியது.. தொழிலாளர்கள் மகிழ்ச்சி

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பட்டாசு உற்பத்தி பணிகள் துவங்கியிருப்பதால், பட்டாசு தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 40 நாட்களுக்கு பின்பு, பட்டாசு ஆலைகளில் பட்டாசு உற்பத்தி பணிகள் துவங்கப்பட்டுள்ளது. வழக்கமாக தீபாவளி பண்டிகை முடிந்தபின்பு, பட்டாசு ஆலைகளில் கையிருப்பில் இருக்கும் பட்டாசுகள், கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக விற்பனை செய்யப்படுவது வழக்கம். இந்த ஆண்டு பட்டாசுத் தொழிலுக்கு ஏற்பட்ட பல்வேறு இடையூறுகள் காரணமாக, பட்டாசு உற்பத்தி பணிகள் சுமார் 40 சதவிகிதம் அளவிற்காக குறைவாக இருந்தது. மேலும் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகளின் தேவை அதிகமாக இருந்ததால், பட்டாசு ஆலைகளில் தயாரான பட்டாசுகள் அனைத்தும் முழுமையாக விற்பனையாகி விட்டன. தற்போது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக, வெளி மாநிலங்களில் இருந்து பட்டாசு ஆர்டர்கள் வெகுவாக வந்துள்ளது. வழக்கமாக தீபாவளி பண்டிகை...
தமிழகம்

மதுரை மீனாட்சியம்மன் கோவில் தெற்கு கோபுரம் அருகே மின்சாரம் தாக்கி பசு மாடு பலி

மதுரை மாநகரில் கடந்த இரண்டு வார காலமாக வட கிழக்கு பருவ மழை பெய்யாத நிலையில் நேற்று இரவு இரவு 7.30 மணி முதல் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்தது. இதனால் மாநகரில் உள்ள பல்வேறு சாலைகள் மற்றும் தெருக்கல் தோறும் மழை நீர் தேங்கி காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெற்கு சித்திரை வீதியில் சுற்றி திரிந்த பசு மாடு ஒன்று அப்பகுதியில் உள்ள மின் கம்பம் அருகே நின்று கொண்டிருந்த போது பசுவின் மீது மின்சாரம் தாக்கி உயிரிழந்ததுள்ளது. இதனை அடுத்த உரிமையாளர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பசு மாட்டை மீட்டு அப்புறப்படுத்தினர். தொடர்ந்து காவல்துறையினர் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். செய்தியாளர் : வி காளமேகம்,  மதுரை மாவட்டம்...
தமிழகம்

தேனி மாவட்டத்தில் ஊஞ்சாம்பட்டி பஞ்சாயத்து உட்பட்ட அமைந்துள்ள அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் வானவில் மன்றம்

தேனி மாவட்டத்தில் ஊஞ்சாம்பட்டி பஞ்சாயத்து உட்பட்ட அமைந்துள்ள அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் இன்று தமிழக முதல்வர் ஆணைப்படி வானவில் மன்றம் கணிதம் அறிவியல் பாடங்களில் மாணவர்களின் ஆர்வத்தை தூண்ட புதிய முயற்சியாக நிகழ்ச்சிமாவட்ட ஆட்சியரின் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல்முருகன் மற்றும் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் செந்தில்குமார் மற்றும் பள்ளி மேலாண்மை குழு தலைவி வித்தியாச செல்லமுத்து பூஞ்சாம்பட்டி பஞ்சாயத்து தலைவர் பாண்டியம்மாள் மற்றும் அறிவியல் ஆசிரியை சுமித்ரா மற்றும் உதயகுமார் கணித ஆசிரியை மங்கையர்க்கரசி ஸ்டெம் தூதுவர் அபரஞ்சி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு உராய்வு மற்றும் வேதியல் மாற்றம் எப்படி நிகழ்கிறது என்பதையும் கணித பாடத்தில் எங்களை எப்படி வர்க்கமாக பிரிப்பது என்பதை சுட்டி காட்டினார்கள். நிகழ்ச்சியில் மாணவ மாணவியர்கள் ஆர்வத்துடன் கலந்து...
தமிழகம்

தேனி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று ஆண்களுக்கான கருத்தடை – வாசக்டெமி விழிப்புணர்வு

தேனி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று ஆண்களுக்கான கருத்தடை - வாசக்டெமி விழிப்புணர்வு வாகனத்தைமாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் மாவட்ட மருத்துவ துணை இயக்குனர் மருத்துவர் அன்பு செழியன் குடும்பநல மருத்துவர் கலந்து கொண்டு சிகிச்சை முறையின் சிறப்பு அம்சங்களை கூறினார். எளிய பாதுகாப்பான வாசக்டமி கத்தியின்றி தையல் இன்றி செய்யப்படுகிறது. ஆனந்த வாழ்க்கை பெற தடை இல்லை. மேலும் பக்க விளைவுகள் எதுவும் இல்லை, கடின உழைப்பினை மேற்கொள்ளலாம். மயக்க மருந்து அவசியமில்லை. மருத்துவமனையில் தங்க வேண்டியதில்லை. அளவான குடும்பத்தை அமைக்கலாம். இச் சிகிச்சையின் முறைகளைப் பற்றி எடுத்துக் கூறினார். இந்த நிகழ்வில் மருத்துவர் அன்புச் செழியனோடு மருத்துவ ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்...
தமிழகம்

உசிலம்பட்டி அருகே தொடர் மழை காரணமாக குளம் போல் காட்சியளித்த அரசு பள்ளி உடனடியாக சீரமைத்து கொடுத்த எம் எல் ஏ

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கழுங்குபட்டியில் இயங்கி வரும் ஆரம்ப அரசு பள்ளியில் கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழை காரணமாக பள்ளியில் குளம் போல் தண்ணீர் தேங்கி காட்சியளித்தது மேலும் பள்ளி மாணவ மாணவிகள் பள்ளிக்கு படிக்கச் செல்ல முடியாமல் தவித்து வந்து மேலும் படிப்பை கைவிடாமல் தெருவோரத்தில் இருக்கும் திண்ணையில் அமர்ந்து மாணவ மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாடம் கற்று தந்து வந்தனர். இதனை அறிந்த எம்எல்ஏ ஐயப்பன் விரைந்து சென்று கழுங்குபட்டியில் உள்ள பள்ளியில் தேங்கி இருக்கும் தண்ணீரை உடனடியாக அகற்றுவதற்கு ஏற்பாடு செய்து சொந்த செலவில் சீரமைத்து கொடுத்தார். அதனை தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகள் பள்ளிக்கு வழக்கம்போல் சென்றனர். ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுத்து பள்ளியில் தேங்கி இருக்கும் தண்ணீரை அகற்றி கொடுத்த எம்எல்ஏவுக்கு பொதுமக்கள் ஆசிரியர்கள் பள்ளி...
தமிழகம்

ஆரம்பப் பள்ளி மாணவ மாணவிகள் வாழ்க்கையில் விளையாடுகிறது மாநகராட்சி சுற்றுச்சுவர் இடிந்து ஓராண்டு கடந்தும் சரி செய்யாத அவல நிலை உயிர்பலி ஆகும் நடவடிக்கை எடுக்குமா

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 71 வது வார்டு பழங்காநத்தம் உழவர் சந்தை அருகே செயல்பட்டு வருகிறது ஜெயகோபால் கரடியா பள்ளி இது மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது இதன் கழிவறை அருகே சுற்று சுவர் இடிந்து விழுந்து ஓர் ஆண்டை கடந்தும் பேரளவிற்கு வெறும் கருப்பு பலகை வைத்து அடைத்து வைத்துள்ளார்கள்.  மேலும் அறிய உள்ள சுற்றுச் சுவர்கள் எந்த நேரத்திலும் கீழே நிலையில் உள்ளது இது குறித்து அப்பொழுது மாநகராட்சி அதிகாரியிடம் கேட்ட பொழுது உடனடியாக சரி செய்து விடுவோம் என சொன்னார்கள்.  ஆனால் ஓராண்டு கடந்தும் அதே நிலை நீடிப்பதால் பள்ளி மாணவ மாணவிகள் கழிவறை அருகே செல்வதற்கு அச்சத்துடன் சென்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மழை காலம் என்பதால் எந்த நேரத்திலும் இடிந்து விழுந்த சுற்றுச்சூழல் பாதி மீண்டும் விழுந்துவிடுமோ என ஐயாத்திலேயே...
தமிழகம்

சிவகாசி பகுதிகளில், இன்று அதிகாலை பலத்த மழை

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று அதிகாலை நேரத்தில் பலத்த மழை பெய்தது. வடகிழக்கு பருவமழை துவங்கியவுடன் விருதுநகர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வந்தது. இந்த நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக முற்றிலும் மழை இல்லாத நிலையில், கோடை காலத்தைப் போல வெயில் கடுமையாக இருந்து வந்தது. கடந்த 2 நாட்களாக மேகமூட்டமாக இருந்தாலும் மழை பெய்யவில்லை. இன்று அதிகாலை 3 மணியளவில் திடீரென்று பலத்த மழை பெய்தது. திடீர் மழை காரணமாக மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. கழிவுநீர் வாறுகால்கள் நிரம்பி, மழைநீருடன் கழிவுநீர் கலந்து சாலைகளில் ஆங்காங்கே தேங்கி நிற்கின்றது. சிவகாசி புறநகர் பகுதிகள், நாரணாபுரம் சாலை, ஓம் சேர்மா நகர், அம்மன் நகர், செல்லையநாயக்கன்பட்டி, மீனம்பட்டி, பாறைப்பட்டி, பேராபட்டி, அனுப்பங்குளம், மேட்டமலை, சித்துராஜபுரம், சசிநகர், பேர்நாயக்கன்பட்டி, மடத்துப்பட்டி, உப்புபட்டி,...
தமிழகம்

காட்பாடி அருகே அமைச்சர் விழாவிற்கு பேனர் கட்டும்போது மின்சாரம் தாக்கி திமுக பிரமுகர் உயிரிழப்பு

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தாலுகா வடுகந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் மார்கபந்து (54). இவர் வடுகந்தாங்கல் முன்னாள் திமுக பஞ்சாயத்து தலைவராக இருந்தார். தற்போது திமுக ஊராட்சி செயலாளராக உள்ளார்.  இந்த நிலையில் நேற்று 28-ம் தேதி திமுக இளைஞர் அணிசெயலாளர் உதயநிதி பிறந்தநாள் விழா பழைய கிருஷ்ணாவரத்தில் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொள்வதாக இருந்தது.  இதற்காக மார்கபந்து அமைச்சரை வரவேற்க வடுகந்தாங்கல் பஸ் நிலையத்தில் பிளாக்ஸ் பேனர் கட்டும் பணியில் ஈடுப்பட்டு இருந்தார். அப்பேரது மேலே இருந்த மின்கம்பியில் பேனரின் இரும்பு சட்டம் உரசியது. இதனால் மின்சாரம் தாக்கி தூக்கிவீசப்பட்டார். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்க சென்றனர். ஆனால் அவர் வரும் வழியிலேயேஉயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். பேனர் கட்டும் போது அவருக்கு உதவியாக இருந்த வடுகந்தாங்கல்...
தமிழகம்

சிவகங்கை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் “வானவில் மன்றம்” திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

மாணவ மாணவியர்கள் அறிவியல் மற்றும் கணித பாடங்களில் சிறந்து விளங்குவதற்காக "வானவில் மன்றம்" என்ற திட்டத்தினை முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று திருச்சியில் தொடங்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக சிவகங்கை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்இத்திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தொடங்கி வைத்து, இத்திட்டம் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விளக்கி கூறினார். அறிவியல் மற்றும் கணித பாடப்பிரிவுகளில் மாணவர்களின் தரத்தை மேம்படுத்த அப்பாட பிரிவுகளின் மிகச் சிறந்த கருத்தாளர்களைக் கொண்டு கற்பித்து, அதில் தலைசிறந்த மாணவர்களை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கம் என்றும் எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ, மாணவிகள்,கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். செய்தியாளர் : சந்தோஷ் சிவம்...
தமிழகம்

காட்பாடி அடுத்த அரும்பருதியில் காங்கிரஸ் ஆலோசனை கூட்டம்

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா அரும்பருதிகிராமத்தில் காங்கிரஸ் கமிட்டின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  இதில் வேலூர் மாவட்ட துணைத்தலைவர் டி. திருமால், ஒன்றியதலைவர் இளங்கோ,வேலூர் மாநகர் 1-வது மண்டல தலைவர் பி.பாலகுமார், காட்பாடி ஒன்றிய துணைத்தலைவர் கோரந்தாங்கல் சேகர், அரும்பருத்தி வெங்கடேசன், சேவூர் சரவணன், பாலா, லோகமூர்த்தி, காந்தி, ராகவன் உள்ளிட்ட கட்சியினர் கலந்துகொண்டனர். இறுதியில் அரும்பருத்தி வெங்கடேசன் நன்றி கூறினார். செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்...
1 415 416 417 418 419 556
Page 417 of 556

Right Click & View Source is disabled.

error: Content is protected !!