கவிதைகள் 2
62
சிறார் கவிதை
செல்லக் குழந்தைகளே
சிரித்து மகிழுங்கள்
வெல்லத் தமிழில்
கற்றுத் தேறுங்கள்.
நல்ல செயல்களில்
சிந்தை செலுத்துங்கள்
நாடும் வீடும்
ஒன்றெனக் கொள்ளுங்கள்.
நாளைய உலகம்
நமதென எண்ணுங்கள்
இன்றைய பொழுதினைத்
தன்வயப் படுத்துங்கள்.
எங்கும் எதிலும்
நல்லதே காணுங்கள்
எப்போதும் வெற்றி
நம்ம கையிலே நம்புங்கள்.
அன்புடன்:
வீ.கோவிந்தசாமி,
திருச்சிராப்பள்ளி
நம் மேன்மை காட்ட வேண்டும்.
நான் உரைக்கும் செய்திகள்
நம் பெருமை பேச வேண்டும்
ஏடெழுதும் எழுத்துக்கள்
எம்புகழைக் கூறவேண்டும்.
அளப்பரிய உயிர்ச்சக்தி
அண்டவெளி கொண்டிருக்கும்
அவைகளை நம் ஐம்புலன்கள்
அப்படியே கொள்ள வேண்டும்.
கொண்டுவிட்ட கருத்துக்கள் குடி கொண்டால் நம் மனதில்
வடிவெடுக்கும் செயல் யாவும்
கொடிபிடித்து வென்றுவிடும்.