archiveஇலக்கியம்

கவிதை

மாதர் போற்றுவோம்

அவள் அஹிம்சையின் ஒரு பெயர் அக்கினிக்கு மறுபெயர் பூ போலும் சிரிப்பாள் பூகம்பமாகவும் வெடிப்பாள்... வீட்டுக்கு மட்டுமின்றி நாட்டுக்கும் அவள் தான் நல்ல நம்பிக்கை ... நமக்கு முன்னிருந்தோ பின்னிருந்தோ நம்மை இயக்கும் ஒரு பெருங்கை... அவள் எடுக்கும் அவதாரங்கள் அநேகம்... அத்தனையும் காட்டுவது பாசம் மிக்க குடும்பத்தின் சினேகம்.... ஒரு முகம் காட்டும் பன்முகம் ... விளக்குத் திரி போல் அனைவருக்கும் நன்முகம்... தனக்கு மட்டுமின்றி கணவனுக்கும் குடும்பத்துக்கும்...
இலக்கியம்

‘மகாகவிதை’க்கு ரூ 18 லட்சம் விருது: கவிஞர் வைரமுத்து மலேசியாவில் பெருந்தமிழ் விருது பெற்றார்

கவிப்பேரரசு வைரமுத்து சமீபத்தில் எழுதிய 'மகாகவிதை' நூல் தமிழகம் மற்றும் இந்தியாவின் இதர பகுதிகளில் பெரும் பாராட்டு பெற்றதை தொடர்ந்து கடல் தாண்டியும் கவனத்தை ஈர்த்து வருகிறது. மலேசிய தமிழ் இலக்கிய காப்பகமும் தமிழ் பேராயமும் இணைந்து கவிப்பேரரசு வைரமுத்துவின் சாதனை படைப்பான ‘மகாகவிதை’ நூலுக்கு ‘பெருந்தமிழ் விருது' மற்றும் 1 லட்சம் வெள்ளி (இந்திய மதிப்பில் ரூ 18 லட்சம்) மலேசியாவில் இன்று நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் வழங்கின....
இலக்கியம்

எழுத்தாளர் அ.வெண்ணிலா எழுதிய ‘நீரதிகாரம்’ நூலினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

எழுத்தாளர் அ.வெண்ணிலா ‘ஆனந்த விகடன்' வார இதழில் 122 வாரங்கள் தொடராக எழுதி, வாசகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற நாவல் ‘நீரதிகாரம்’. இரு பெரும் தொகுதிகளாக வெளிவந்துள்ள இந்த நாவலைத் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலகத்தில் நேற்று (2024 - ஜனவரி 18) வெளியிட்டார். நூலின் முதல் பிரதியைப் பத்திரிகையாளர், மொழிபெயர்ப்பாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன் பெற்றுக்கொண்டார். உடன் தமிழக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, எழுத்தாளர் இமையம், கவிஞர் மு.முருகேஷ்,...
கவிதை

“கைக்கூலிகளுக்கு மத்தியில் இவன் ஒரு மேய்வேலி’ : திப்பு சுல்தான்

தேசத்திற்கு தப்பிட்டவர்கள் மத்தியில் சுதந்திர வேட்கை எனும் உப்பிட்டவன் இவன்... துப்பு கெட்டவர்கள் மத்தியில் தேசத்தை உயிருக்கு மேலாக ஒப்பிட்டவன் இவன்... திப்பு - மனிதர்களில் ஒரு புனிதன்.. மன்னர்களில் ஒரு மாமணி.... வீரத்தால் சிறந்தவன் - நெஞ்சின் ஈரத்தால் நிறைந்தவன்... அடுத்தவர்க்கு உதவும் - உப காரத்தால் இனித்தவன் - எதிரிகளை மேல் கொண்ட காரத்தால் தனித்தவன்.... தேசத்தை நேசிப்போர்க்கு திப்புவின் வீரம் பிடிக்கும்... பிடிக்காதவர்க்குத்தான் உள்ளமெல்லாம் அரிக்கும்.......
இலக்கியம்

மொழிபெயர்ப்புக்கு முதன்முதலாக விருதுகளை வழங்கியவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் அவ்வை ந.அருள் புகழாரம்

சென்னையில் கடந்த நவம்பர் 9-ஆம் தேதியன்று எழுத்தாளரும் புரவலருமான நல்லி குப்புசாமியின் மூன்று நூல்கள் வெளியீட்டு விழா மற்றும் ‘திசை எட்டும்’ மொழியாக்க விருதுகள் வழங்கும் விழாவும் ராஜா அண்ணாமலை புரத்திலுள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் அவ்வை ந.அருள் தலைமையேற்றதோடு, நூல்களை வெளியிட்டும், மொழியாக்க விருதுகளை வழங்கியும் தலைமையுரையாற்றினார். அவர் பேசியதாவது: “நாடறிந்த பெருந்தகையும், நல்லவர் நெஞ்சிலெல்லாம் புகழ் மணக்க வாழும்...
இலக்கியம்கவிதை

இதயம் பேசுகிறது!

பாழ்வெளியான‌ மனப்படுதாவில்‌ கனவுத் தூரிகையால்‌ வரைந்த ‌கைகளின்‌ வாரிசு‌ யார்‌?! விழிகள்நடத்திய‌ அழகுப்போட்டியில்‌ மிரண்ட முகத்திற்குப்‌ பொட்டு‌ வைத்துக்‌ கனவுகளை எல்லாம்‌ வெற்றி கொள்ள வைத்தவை எந்த‌ இதயத்தின்‌ கீறல்கள்‌?! நான் கொய்த கனிகளின் நறுமணச்‌ சாறுகள்‌ பின்பு முகத்தின்‌ கைகளில்‌ என்கைகளிலோ‌ முள்ளின்‌ கீறல்கள்‌.. குயில்களின் கனவு‌ வானத்தில்‌ கழுகுக் கூட்டங்களின்‌ வட்டங்கள்‌ கழுகுகளை‌ வீழ்த்தும்‌ என்‌ கண்மணியே‌ நீ வாழ்க‌! என் உள்ளத்தில் உன்னை அங்கீகரிக்கின்றன! எஸ் ஆர்...
இலக்கியம்விமர்சனம்

நள்ளென் கங்குலும்கேட்கும் நின் குரலே

கவிஞர் கூடல் தாரிக் அவர்களின் நிலவென்னும் நல்லாள் கவிதைநூல் குறித்து நவீன கவிதை இயங்கு தளத்தில் 90 களுக்கு பிறகான காலகட்டம் மிக முதன்மையானது. அகவாசிப்பு என்றும் புறவாசிப்பு என்றும் கவிதை தன்னை இரண்டு விதமாக கட்டமைத்துக் கொண்ட காலகட்டம்அதில் தான். இரண்டு தரப்பிலும் மிகுந்த வேகம் கொண்டு பல்வேறுபாடு பொருள்களில் பல்வேறு உத்திகளில் கவிதை காட்டாற்று வெள்ளம் போல பொங்கி பிரவாகம் எடுத்து வழிந்து ஓடியது. ரத்தமும் சதையுமான...
இலக்கியம்நிகழ்வு

‘வளரி’ பன்னாட்டுப் பெண் கவிஞர் பேரமைப்பின் சார்பில் 15-ஆம் ஆண்டு விழாவும், கவிப்பேராசான் மீரா விருது வழங்கும் விழாவும் கும்பகோணத்தில் நடைபெற்றது

கடந்த செப்டம்பர் 17, ஞாயிறன்று கும்பகோணம் ரோட்டரி அரங்கில் ‘வளரி’ பன்னாட்டுப் பெண் கவிஞர் பேரமைப்பு ஒருங்கிணைத்த 15-ஆம் ஆண்டு விழாவும், கவிப்பேராசான் மீரா விருது வழங்கும் விழாவும் வெகு சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு பேராசிரியர் ஆதிரா முல்லை தலைமை தாங்கினார். ஆசிரியர் சுதா மாணிக்கம் அனைவரையும் வரவேற்றார். ‘வளரி’ முதன்மை ஒருங்கிணைப்பாளர் கவிஞர் அருணாசுந்தரராசன் தொடக்கவுரையாற்றினார். விழாவில், கவிப்பேராசான் மீரா நினைவேந்தல் ‘வளரி’ சிறப்பிதழைக் கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர்...
இலக்கியம்கவிதை

யாழ் ராகவன் – கவிதைகள்

தலையாட்டித்தான் வரவேற்கின்றன ஒவ்வொரு இலைகளும் உன்னை காணாத நாள் இலையுதிர் காலம் கருப்பு குழல்அருவியின் சீரான பரவலில் உற்சாக மடைந்தது மாமரக்குருவி வனமெங்கும் கூவல் தாவர பாஷையும் பறவையின் ஓசையும் எங்கு படித்தாய்.. பூக்களையும் சினுங்கவைக்கும் புன்முறுவல் காண ஓடிவரும் தட்டானிடம் பறக்கும் உல்லாசம் கண்மூடி நிற்கும் போதெல்லாம் ஞானநிலை கண்திறந்து பார்த்தால் மோனநிலை.. காற்றுக்கும் பூவுக்கும் காதல் மூட்டுகிறாய் காலத்தை வெல்லும் ஜாலத்தை பார்வையில் தீட்டுகிறாய்.. உரிமை மீட்பு...
இலக்கியம்

கவிதை நந்தவனமாகிய நந்தனம்: கவிதை நூல் வெளியீட்டு விழா

செங்கற்பட்டைச் சேர்ந்த கவிஞர் ஆ.கிருட்டிணன் எழுதிய ‘மண்  தொடும் விழிகள்’ கவிதை நூல் வெளியீட்டு விழா, சென்னை நந்தனம் தாமரைக் குடியிருப்பிலுள்ள பொதுவுடமை கட்சியின் மூத்த தோழர் இரா.நல்லகண்ணு அவர்களின் இல்லத்தில் எளிய இலக்கிய நிகழ்வாக கடந்த செப்டம்பர் 10 அன்று நடைபெற்றது. அரசுப் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற கவிஞர் ஆ.கிருட்டிணன், 2002-ஆம் ஆண்டில் ‘கிழக்கின் சிறகுகள்’ எனும் கவிதை நூலை வெளியிட்டுள்ளார். 21 ஆண்டுகளுக்குப் பிறகு எழுதியிருக்கும்...
1 2 3 15
Page 1 of 15

Right Click & View Source is disabled.

error: Content is protected !!