தமிழகம்

தமிழகம்

சென்னை புறநகா் ரயில் பிரிவில் மட்டும் மொபைல் யுடிஎஸ் செயலி

சென்னை புறநகா் ரயில் பிரிவில் மட்டும் மொபைல் யுடிஎஸ் செயலி செயல்படுத்தப்படுகிறது என்று ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது. புறநகா் இல்லாத பிரிவுகளில் முன்பதிவில்லாத பயணச்சீட்டு வாங்க பயணச்சீட்டு கவுன்ட்டா்களை பயணிகள் அணுக வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. கரோனா நோய்த்தொற்று பாதிப்புகளைக் கருத்தில் கொண்டும், உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியும் பயணிகள் ரயில் சேவையை தெற்கு ரயில்வே பல்வேறு கட்டமாக படிப்படியாக அதிகரித்து வருகிறது. தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்தில் புறநகா் ரயில் சேவைகள் தொடா்பாக, சில பிரிவு பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. சென்னை புகரில் நான்கு வழித்தடங்களிலும் அனைத்துப் பிரிவு பயணிகளும் நேரக் கட்டுப்பாடு இன்றி பயணிக்க அனுமதிக்கப்படுவாா்கள். இது திங்கள்கிழமை (நவ.15) முதல் அமலுக்கு வருகிறது. சென்னை புறநகா் போக்குவரத்து முறையின் 4 வழித்தடங்களில் முன்பதிவு செய்யப்படாத ஒற்றை பயண டிக்கெட், திரும்பும்...
தமிழகம்

இன்று 8வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம்: 50,000 முகாம்கள் ஏற்பாடு

தமிழகம் முழுவதும் இன்று 50 ஆயிரம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்களை நடத்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை ஏற்பாடு செய்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து மக்களை காக்க பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் தமிழ்நாடு அரசு, 8ஆவது முறையாக மெகா தடுப்பூசி முகாமை நடத்துகிறது. தலைநகர் சென்னையில் உள்ள 200 வார்டுகளில் 2 ஆயிரம் முகாம்கள் உள்பட மாநிலம் முழுவதும் 50 ஆயிரம் முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மெகா கொரோனா தடுப்பூசி முகாமை மக்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்....
தமிழகம்

குழந்தைகள் இந்நாட்டின் செல்வங்கள் – ஒளிச்சுடர்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குழந்தைகள் தின வாழ்த்து.!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் குழந்தைகள் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். இன்று நாடு முழுவதும், குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இத்தினம் , ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் குழந்தைகள் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், 'குழந்தைகள் மீது அளவற்ற அன்பு கொண்டிருந்த இந்திய ஒன்றியத்தின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளைக் குழந்தைகள் தினமாகக் கொண்டாடி மகிழ்கிறோம். குழந்தைகள் இந்நாட்டின் செல்வங்கள் - ஒளிச்சுடர்கள்! ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு வகையில் திறமையானவர்கள், அழகானவர்கள்! குழந்தைகளின் தனித் திறமைகளைக் கண்டறிந்து, அவர்களை வளர்த்தெடுப்போம். குழந்தைகளுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்கி, மழலைப்பருவத்தில் உலகை அச்சமின்றி அணுகிக் கற்க துணை நிற்போம்! குழந்தைகளைப் பாதுகாப்பது ஒட்டுமொத்தச் சமூகத்தின் கூட்டுச் செயல்பாடாகும். அவர்களுக்கு...
தமிழகம்

மாணவி தற்கொலை விவகாரம்: தலைமறைவாக இருந்த தனியாா் பள்ளி தலைமை ஆசிரியை பெங்களூரில் கைது

கோவையில் பாலியல் தொல்லையால், மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் தேடப்பட்டு வந்த பள்ளியின் தலைமை ஆசிரியை மீரா ஜாக்சனை போலீஸார் கைது செய்துள்ளனர். கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த மாணவி ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பள்ளியை மாற்றிய மாணவி கடந்த 2 நாள்களுக்கு முன்பு தனது வீட்டில் வாக்குமூலம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பள்ளியில் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த கோவை மேற்கு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையே ஆசிரியர் மீது புகார் தெரிவிக்கப்பட்டும்...
தமிழகம்

ராஜராஜ சோழனின் 1036 ஆவது சதய விழா – தஞ்சை பெருவுடையார் பெரியநாயகி அம்மனுக்கு பேரபிஷேகம்

மாமன்னன் ராஜராஜ சோழனின் 1036 ஆவது சதய விழா இன்று நடைபெறுகிறது. பெருவுடையார் பெரியநாயகி அம்மன் திருமேனிக்கு பேரபிஷேகம் மட்டுமே நடைபெற உள்ளதால் சதய விழாவிற்கு வருகை தருபவர்கள் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சோழ அரசர்களின் பெரும் புகழுக்குச் சொந்தக்காரரான ராஜராஜசோழன், தஞ்சை பெரிய கோவில் என்னும் பேரதிசயத்தை கட்டி உலக அளவில் புகழ் மிக்கவராக மாறியுள்ளார். ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் அவரது பிறந்தநாளை சதயவிழாவாக மக்கள் கொண்டாடுகின்றனர். ராஜராஜன் சோழன் ஐப்பசி மாதம் சதய தினத்தன்று பிறந்தார் என்பது வரலாறு. இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் சதய விழாவாக அரசு சார்பில் உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் இரண்டு நாட்கள் கொண்டாடப்படுகிறது. நாட்டியம் கலை நிகழ்ச்சி பட்டிமன்றம் ராஜராஜசோழன் விருது வழங்கும் விழா திருவீதி உலா என வெகு...
தமிழகம்

வங்கக் கடலில் புதிய காற்றழுத்தம் – 4 நாட்களுக்கு கனமழை – குமரி, நீலகிரியில் மழை வெளுக்கும்

வங்கக்கடலில் தெற்கு அந்தமான் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இன்று காற்றழுத்தமாக மாறி அடுத்த 12 மணி நேரத்தில் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த தாழ்வு மண்டலம் சென்னையை ஒட்டிய கடலோரப் பகுதிக்கு நெருங்கி வரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. வழக்கமாக வடகிழக்கு பருவமழை காலத்தில் பெய்ய வேண்டிய ஒட்டு மொத்த மழையும், இந்த 11 நாட்களில் கூடுதலாகவே பெய்துவிட்டது. இதன் காரணமாக, தமிழகத்தில் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி விட்டன. பெரும்பாலான மாவட்டங்களில் மழைநீர் குடியிருப்பு பகுதிகளிலும், சாலைகளிலும் தேங்கியுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தேங்கிய நீரை அகற்றும் பணியில் மாவட்ட நிர்வாகங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன....
தமிழகம்

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை: தமிழக அரசு

தமிழ் வழியில், அரசு பள்ளியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை தரப்படும் என்று தமிழ்நாடு அரசு (வெள்ளிக்கிழமை) அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு கடந்த ஜூன் 21ஆம் தேதி நடந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில், ஆளுநர் உரையில், இது குறித்து குறிப்பிடுகையில் "தமிழ்நாட்டு மக்களுக்கு, குறிப்பாக தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கும், அரசு பள்ளியில் பயின்றவர்களுக்கும் அரசு பதவிகளுக்கான வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப்படுவதை அரசு உறுதி செய்யும்" என்று ஆளுநர் அறிவித்திருந்தார். அதன் பின்னர், நடந்த மானியக் கோரிக்கை மீதான கூட்டத் தொடரில் உரையாற்றிய மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், காரணமாக பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள், தமிழக அரசு பள்ளிகளில்...
தமிழகம்

சென்னையில் சிறப்பு மருத்துவ முகாம் இன்று தொடக்கம்!!

மழையினால் ஏற்படும் தொற்று நோய்களை தடுக்கும் வகையில் சென்னையில் சிறப்பு மருத்துவ முகாமை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததாலும், வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகவும் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக சென்னை மாநகரில் கடந்த 6ஆம் தேதி முதல் பெய்து வரும் கனமழையின் காரணமாக மாநகராட்சிக்குட்பட்ட தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதனால் சென்னை வெள்ளக்காடாக மாறியது. சாலைகளில் தேங்கிய மழை நீரில் கொசு உற்பத்தியாகி டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளிலும் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் நடைபெறும் சிறப்பு மருத்துவ...
தமிழகம்

சென்னையில் 11 சுரங்கப் பாதைகளை மூடியதால் நூற்றுக்கணக்கான பேருந்து சேவை பாதிப்பு

கனமழையால் சென்னையில் நேற்று 11 சுரங்கப் பாதைகள் மூடப்பட்டன. இதனால் நூற்றுக்கணக்கான மாநகரப் பேருந்துகளின் சேவை பாதிக்கப்பட்டது. தமிழகத்தில் பருவ மழை தீவிரமடைந்துள்ளதால், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கடந்த 4 நாட்களாக விட்டுவிட்டு கனமழை பெய்துவருகிறது. பயணிகள் வருகை குறைவாக இருந்ததால், சென்னையில் பெரும்பாலான வழித்தடங்களில் நேற்று காலை முதல் குறைந்த அளவிலேயே மாநகரப் பேருந்துகள் இயக்கப்பட்டன. சில வழித்தடங்களில் பேருந்துகள் காலியாகவே சென்றன. மதியத்துக்குப் பிறகு பேருந்துகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, தேவைக்கு ஏற்றாற்போல பேருந்துகள் இயக்கப்பட்டன. கனமழை காரணமாக அண்ணாசாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். இதேபோல், மழைநீரால் சென்னையில் சுரங்கப் பாதைகள் நிரம்பின. எனவே, மக்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு வியாசர்பாடி, கணேசபுரம்,...
தமிழகம்

உருவானது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் 3 நாள்களுக்கு பலத்த மழை

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி செவ்வாய்க்கிழமை உருவானது. இது அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வட தமிழக கரையை நோக்கி நகரும். இதன் காரணமாக தமிழகத்தில் 3 நாள்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக புதன்கிழமை டெல்டா மாவட்டங்கள் மற்றும் 5 மாவட்டங்களுக்கு அதி பலத்த மழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவா் எஸ்.பாலச்சந்திரன் சென்னையில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது புதன்கிழமை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, மேற்கு வடமேற்கு திசையில் நகா்ந்து, நவ.11-ஆம் தேதி காலை...
1 497 498 499 500 501 545
Page 499 of 545

Right Click & View Source is disabled.

error: Content is protected !!