தமிழக கோயில்களுக்குச் சொந்தமான ரூ.2,043 கோடி மதிப்புள்ள நிலங்கள் மீட்பு: இந்து சமய அறநிலையத் துறை தகவல்
தமிழகத்தில் உள்ள பல்வேறு கோயில்களுக்குச் சொந்தமான ரூ.2,043 கோடி மதிப்புள்ள நிலங் கள் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளன. இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்து சமய அறநிலையத் துறைஅமைச்சர் பி.கே.சேகர்பாபு, பல்வேறு மாவட்டங்களில் உள்ளகோயில்களில் ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை மீட்க நடவடிக்கை எடுப்பதோடு, ஆக்கிரமித்தவர்கள், அதற்கு உடந்தையாக இருந்த வர்கள் மீது வழக்குப்பதிவு செய் யப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி, 540.39 ஏக்கர் நிலம், 496.1748 கிரவுண்டு சதுரஅடி மனைகள், 20.1434 கிரவுண்டு கட்டிடம்,46.2077 கிரவுண்டு திருக்குளக்கரைஆகியவை 991 ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன. இதன் தற்போதைய மதிப்பு ரூ.2,043 கோடி ஆகும். குறிப்பாக, கும்பகோணம் மாவட்டம் ஒப்பிலியப்பன் கோயிலுக்கு அருகில் உள்ள வெங்கடாஜலபதி கோயிலுக்கு சொந்தமான 3.47 ஏக்கர் நிலம் மற்றும் குத்தகைக்கு விடப்பட்டிருந்த 6.9 ஏக்கர்நிலம் மீட்கப்பட்டது. திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில்...
