தமிழகம்

தமிழகம்

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்: சுரங்கப் பாதை பணிகள் விரைவில் தொடக்கம்

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் சுரங்கப் பாதை அமைப்பதற்கான நிறுவனங்களைத் தேர்வு செய்யும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. எனவே, விரைவில் சுரங்கப் பாதை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளன. சென்னையில் தற்போது இரு வழித்தடங்களில் 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படுகிறது. பொதுமக்களின் தேவையைக் கருத்தில்கொண்டு, சென்னையில் இரண்டாவது கட்டமாக மாதவரம்-சிறுசேரி, மாதவரம்-சோழிங்கநல்லூர், பூந்தமல்லி-விவேகானந்தர் இல்லம் என மூன்று வழித்தடங்களில் மொத்தம் 119 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்களை இயக்குவதற்கான திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தேர்வு செய்யப்பட்ட வழித்தடங்களில் தடுப்புகள் அமைத்து, சாலைகளைத் தோண்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சில இடங்களில் அடிப்படை கட்டுமானப் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகளிடம் கேட்டபோது, ''சென்னையில் இரண்டாவது கட்ட மெட்ரோ ரயில் திட்டம் துரிதமாக நடைபெறும்...
தமிழகம்

ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்

இலங்கை அரசை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். நேற்று முன்தினம் ராமேஸ்வரம் மீன்பிடித்துறைமுகத்திலிருந்து மீன்பிடிப்பதற்கு அனுமதி சீட்டு பெற்று 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் விசைப்படகுகள் மூலம் கடலுக்கு சென்றனர். அப்போது,எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 16 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.கச்சதீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து,பின்னர் அவர்களின் 3 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தது. இதனையடுத்து,எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை பிப்.11-ஆம் தேதி யாழ்ப்பாணம் சிறையிலடைக்க இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. ஏற்கனவே,கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை இலங்கை அரசு ஏலத்தில் விட்டு வருகிறது.இந்நிலையில்,இலங்கை அரசை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில்...
தமிழகம்

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் – சான்றிதழ் சரிபார்ப்பு இன்று தொடக்கம்!!

தமிழ்நாட்டில்இளநிலைபொதுமருத்துவகலந்தாய்வில் பங்கேற்றுள்ள மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு இன்று தொடங்குகிறது . எம் . பி . பி . எஸ் ., பி . டி . எஸ் . உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான பொது கலந்தாய்வு இணையவழியில் நடைபெற்று வருகிறது . முதலில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு கலந்தாய்வு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அரசுப்பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் 7.5% இடஒதுக்கீட்டின் கீழ் கல்லூரிகளை தேர்வு செய்தனர். இந்நிலையில் பொதுப் பிரிவு கலந்தாய்வு அதனைத் தொடர்ந்து நடைபெற்றது. நீட் தேர்வின் அடிப்படையில், மாணவர்கள் விருப்பக் கல்லூரிகளை தேர்வு செய்துள்ள நிலையில், இன்று சான்றிதழ் சரிபார்ப்பு தொடங்குகிறது. மாணவர்கள் ஏற்கனவே தாங்கள் தேர்வு செய்த கல்லூரிக்கு நேரில் சென்று, அசல் சான்றிதழ்களை காட்டுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். 6,639 இடங்களுக்கு தரவரிசைப்பட்டியலில் உள்ள 6,082...
தமிழகம்

பொதுமக்கள் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்க வசதியாக தேர்தல் பார்வையாளர் எண்கள் வெளியீடு: சென்னை மாநகராட்சி தகவல்

சென்னை மாநகராட்சி தேர்தலை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட மற்றும் வட்டார பார்வையாளர்களிடம் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாநகராட்சி தேர்தல் பணிகளை பார்வையிட வடக்கு, மத்தியம் மற்றும் தெற்கு வட்டாரங்களுக்கு 3 மாவட்ட பார்வையாளர்கள் மற்றும் 15 மண்டலங்களுக்கு தலா ஒரு பார்வையாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் தொடர்பாக அவர்களிடம் பொதுமக்கள் புகார் தெரிவிக்க தொடர்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. மாநகராட்சி வடக்கு வட்டார தேர்தல் பார்வையாளரை 94450 36552 என்ற எண்ணிலும், மத்திய வட்டார பார்வையாளரை 94450 36532 என்ற எண்ணிலும், தெற்கு வட்டார பார்வையாளரை 94450 36512 என்ற எண்ணிலும் தொடர்புகொள்ளலாம். மேலும் திருவொற்றியூர் மண்டல பார்வையாளர்- 94450 71035, மணலி மண்டல பார்வையாளர்- 94450 71036, மாதவரம் மண்டல பார்வையாளர்-94450 71037, தண்டையார்பேட்டை மண்டல பார்வையாளர்- 94450...
தமிழகம்

விவேகானந்தர் நாடு திரும்பிய 125-வது ஆண்டு தினம்: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை

அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய சுவாமி விவேகானந்தர், பின்னர் இந்தியா திரும்பிய 125-வது ஆண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தனது மனைவியுடன் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள விவேகானந்தர் இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள விவேகானந்தர் சிலைக்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, விவேகானந்தரின் குழந்தைப் பருவம் மற்றும் பல்வேறு தருணங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை ஆளுநர் பார்வையிட்டார். தொடர்ந்து, விவேகானந்தர் இந்தியா வந்த பின்னர் 9 நாட்கள் தங்கியிருந்த தியான அறையில், ஆளுநர் ரவி தியானம் செய்தார். இதுகுறித்து ஆளுநர் கூறும்போது, "நாட்டில் உள்ள இளைஞர்கள் விவேகானந்தரின் 'எழுந்திரு, விழித்திரு, இலக்கை அடையும் வரை நிற்காதே' என்ற கருத்துகளை அடுத்து வரும் 25 ஆண்டுகளுக்கு நினைவில் வைத்துக்கொண்டு, பின்பற்ற வேண்டும்" என்றார். பின்னர், மயிலாப்பூர் ராமகிருஷ்ணா...
தமிழகம்

திமுகவின் ஆட்சி திருப்தியாக இல்லை.. கமல்ஹாசன் குற்றச்சாட்டு !!

திமுகவின் 8 மாத கால ஆட்சி திருப்தியாக இல்லை என மக்கள் கூறுவதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனு தாக்கல் முடிந்த கையோடு அரசியல் கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்கள் பிரச்சாரத்தை தீவிரப்பபடுத்தியுள்னர். அந்த வகையில், சென்னை மாநகராட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் 182 வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வு ஆழ்வார்பேட்டையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் 182 வேட்பாளர்கள் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். மக்கள் நீதி மய்யத்தின் கட்சி நன்கொடையாக, நிர்வாகி ஒருவர் 1 லட்சம் ரூபாயையும், கொளத்தூரை சேர்ந்த எட்வின் என்ற 6 வயது சிறுவன் தான் உண்டியலில் சேர்த்து வைத்திருந்த 1000 ரூபாயையும் கமல்ஹாசனிடம் அளித்தனர். வேட்பாளர்கள் அறிமுகம் நிகழ்ச்சியின்போது மேடையில்...
தமிழகம்

வரும் 7 ஆம் தேதி மூன்று நாள் பயணமாக டெல்லி செல்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசு அனுப்பிய நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பினார். ஆளுநரின் இந்த செயலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதற்கு மாநிலங்களைவில் தமிழ்நாடு எம்பிக்கள் கண்டனம் தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். இந்த நிலையில், நீட் விலக்கு மசோதா திருப்பி அனுப்பட்ட விவகாரம் தொடர்பாக, இன்று தமிழ்நாடு அரசு சட்டமன்ற அனைத்து கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளது. இந்த சூழலில் ஆளுநர் ஆர்.என்.ரவி பிப்ரவரி 7-ம் தேதி மதியம் 1.20 மணியளவில் 3 நாள் பயணமாக டெல்லி செல்கிறார். பிறகு 9-ம் தேதி தமிழ்நாட்டிற்கு திரும்புகிறார். நீட் விலக்கு மசோதா திருப்பி அனுப்பட்ட விவகாரத்திற்கு மத்தியில், ஆளுநரின் டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 'பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது...
தமிழகம்

நீட் தேர்வு விலக்கு மசோதா – முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்

தமிழக அரசின் நீட் தேர்வுக்கு விலக்குகோரும் மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியிருக்கும் நிலையில், தமிழக அரசு அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள இன்றைய கூட்டத்தில் நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதற்கான சட்டமுன்வடிவு 13-9-2021 அன்று சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவர் அவர்களின் ஒப்புதலைப் பெற்றிட, ஒன்றிய அரசிற்கு அனுப்பி வைப்பதற்காக மாண்புமிகு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நீட் விலக்கு மசோதாவை தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளார். நீட் விலக்கு மசோதா உச்சநீதிமன்றத்திற்கு உத்தரவிற்கு மாறாக உள்ளதாக ஆளுனர் மாளிகை தமிழக அரசுக்கு விளக்கம் அளித்துள்ளது. இதனை தொடர்ந்து, தமிழக சட்டமன்ற...
தமிழகம்

நீட் மசோதா பிப்.,5-ல் அனைத்து கட்சி கூட்டம் : முதல்வர் அறிவிப்பு

நீட் விலக்கு மசோதாவை தமிழக கவர்னர் திருப்பி அனுப்பியதை அடுத்து அனைத்து கட்சி கூட்டம் வரும் பிப்.,5-ம் தேதி நடைபெற உள்ளது. இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து இருப்பதாவது: நீட் விலக்கு மசோதா குறித்து கவர்னர் தெரிவித்துள்ள கருத்துக்கள் தமிழக மக்களால் ஏற்கத்தக்கதல்ல. நீட் விலக்கு மசோதாவை மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்ற அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும். கவர்னரின் கருத்துக்கள் ஆராயப்பட்டு நீட்தேர்வு பற்றிய உண்மை நிலை அனைவருக்கும் தெளிவாக விளக்கப்படும். நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் அனைவரிடமும் கருத்தொற்றுமை நிலவி வருகிறது. நீட்விலக்கு மசோதாவை கவர்னர் திருப்பி அனுப்பியநிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி ஆராய பிப். 05 தேதி காலை 11 மணிக்கு அனைத்துகட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெறும். சட்டத்திற்கு அடிப்படையான கூற்றுக்கள் தவறானவை என கவர்னர் தெரிவித்துள்ள கருத்துகள் ஏற்கத்தக்கதல்ல. இவ்வாறு முதல்வர்...
தமிழகம்

கடந்த 4 மாதங்களில் 4,717 சட்டவிரோத பேனர்கள் அகற்றம்

தமிழகத்தில் கடந்த 4 மாதங்களில்4,717 சட்டவிரோத பேனர்கள் அகற்றப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. சட்டவிரோதமாக பேனர்கள் மற்றும் ப்ளக்ஸ் போர்டுகள் வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதஅதிகாரிகளுக்கு எதிரான நீதிமன்றஅவமதிப்பு வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், சட்டவிரோதமாக பேனர் வைத்தது தொடர்பாக இதுவரை எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? அந்த வழக்குகளின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்குகள்பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதிபி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலர்பிரபாகர் சார்பில் கூடுதல் அரசுதலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி அறிக்கை தாக்கல்செய்தார். அதில், ''கடந்த 2016-ம்ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை...
1 499 500 501 502 503 563
Page 501 of 563

Right Click & View Source is disabled.

error: Content is protected !!