தஞ்சாவூர் மாவட்டத்தில் மீண்டும் கனமழை; 2 ஆயிரம் ஏக்கர் சம்பா, தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கின: 200 ஏக்கர் வாழைத் தோப்பிலும் நீர் தேங்கியது
தஞ்சாவூர் மாவட்டத்தில் மீண்டும் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக 2 ஆயிரம் ஏக்கர் சம்பா, தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. 200 ஏக்கர் வாழைத் தோப்பில் மழைநீர் தேங்கியுள்ளது. தஞ்சாவூர் உட்பட டெல்டா மாவட்டங்களில் ஏற்கெனவே பெய்த தொடர் கனமழையால் 1.50 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த சம்பா, தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. கடந்த 4 நாட்களாக மழை குறைந்ததால், வயலில் தேங்கிய தண்ணீர் வடியத் தொடங்கியது. வடிகால் முறையாக தூர் வாரப்படாததால், பல இடங்களில் தண்ணீர் வடிவதில் தாமதமாகி, பயிர்கள் அழுகத் தொடங்கின. இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் மீண்டும் கனமழை பெய்ததால் அம்மையகரம், செய்யாமங்கலம், பாதிரக்குடி, கழுமங்கலம், களர்பட்டி, அம்மன்குடி, அந்தலி, நடுக்காவேரி, அம்மன்பேட்டை, ஆற்காடு, கண்டியூர் உள்ளிட்ட பகுதிகளில் 2 ஆயிரம் ஏக்கரில் புதிதாக நடவு...
