திமுகவின் ஆட்சி திருப்தியாக இல்லை.. கமல்ஹாசன் குற்றச்சாட்டு !!
திமுகவின் 8 மாத கால ஆட்சி திருப்தியாக இல்லை என மக்கள் கூறுவதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனு தாக்கல் முடிந்த கையோடு அரசியல் கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்கள் பிரச்சாரத்தை தீவிரப்பபடுத்தியுள்னர். அந்த வகையில், சென்னை மாநகராட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் 182 வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வு ஆழ்வார்பேட்டையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் 182 வேட்பாளர்கள் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். மக்கள் நீதி மய்யத்தின் கட்சி நன்கொடையாக, நிர்வாகி ஒருவர் 1 லட்சம் ரூபாயையும், கொளத்தூரை சேர்ந்த எட்வின் என்ற 6 வயது சிறுவன் தான் உண்டியலில் சேர்த்து வைத்திருந்த 1000 ரூபாயையும் கமல்ஹாசனிடம் அளித்தனர். வேட்பாளர்கள் அறிமுகம் நிகழ்ச்சியின்போது மேடையில்...
