தமிழகம்

தமிழகம்

திமுகவின் ஆட்சி திருப்தியாக இல்லை.. கமல்ஹாசன் குற்றச்சாட்டு !!

திமுகவின் 8 மாத கால ஆட்சி திருப்தியாக இல்லை என மக்கள் கூறுவதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனு தாக்கல் முடிந்த கையோடு அரசியல் கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்கள் பிரச்சாரத்தை தீவிரப்பபடுத்தியுள்னர். அந்த வகையில், சென்னை மாநகராட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் 182 வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வு ஆழ்வார்பேட்டையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் 182 வேட்பாளர்கள் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். மக்கள் நீதி மய்யத்தின் கட்சி நன்கொடையாக, நிர்வாகி ஒருவர் 1 லட்சம் ரூபாயையும், கொளத்தூரை சேர்ந்த எட்வின் என்ற 6 வயது சிறுவன் தான் உண்டியலில் சேர்த்து வைத்திருந்த 1000 ரூபாயையும் கமல்ஹாசனிடம் அளித்தனர். வேட்பாளர்கள் அறிமுகம் நிகழ்ச்சியின்போது மேடையில்...
தமிழகம்

வரும் 7 ஆம் தேதி மூன்று நாள் பயணமாக டெல்லி செல்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசு அனுப்பிய நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பினார். ஆளுநரின் இந்த செயலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதற்கு மாநிலங்களைவில் தமிழ்நாடு எம்பிக்கள் கண்டனம் தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். இந்த நிலையில், நீட் விலக்கு மசோதா திருப்பி அனுப்பட்ட விவகாரம் தொடர்பாக, இன்று தமிழ்நாடு அரசு சட்டமன்ற அனைத்து கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளது. இந்த சூழலில் ஆளுநர் ஆர்.என்.ரவி பிப்ரவரி 7-ம் தேதி மதியம் 1.20 மணியளவில் 3 நாள் பயணமாக டெல்லி செல்கிறார். பிறகு 9-ம் தேதி தமிழ்நாட்டிற்கு திரும்புகிறார். நீட் விலக்கு மசோதா திருப்பி அனுப்பட்ட விவகாரத்திற்கு மத்தியில், ஆளுநரின் டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 'பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது...
தமிழகம்

நீட் தேர்வு விலக்கு மசோதா – முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்

தமிழக அரசின் நீட் தேர்வுக்கு விலக்குகோரும் மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியிருக்கும் நிலையில், தமிழக அரசு அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள இன்றைய கூட்டத்தில் நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதற்கான சட்டமுன்வடிவு 13-9-2021 அன்று சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவர் அவர்களின் ஒப்புதலைப் பெற்றிட, ஒன்றிய அரசிற்கு அனுப்பி வைப்பதற்காக மாண்புமிகு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நீட் விலக்கு மசோதாவை தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளார். நீட் விலக்கு மசோதா உச்சநீதிமன்றத்திற்கு உத்தரவிற்கு மாறாக உள்ளதாக ஆளுனர் மாளிகை தமிழக அரசுக்கு விளக்கம் அளித்துள்ளது. இதனை தொடர்ந்து, தமிழக சட்டமன்ற...
தமிழகம்

நீட் மசோதா பிப்.,5-ல் அனைத்து கட்சி கூட்டம் : முதல்வர் அறிவிப்பு

நீட் விலக்கு மசோதாவை தமிழக கவர்னர் திருப்பி அனுப்பியதை அடுத்து அனைத்து கட்சி கூட்டம் வரும் பிப்.,5-ம் தேதி நடைபெற உள்ளது. இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து இருப்பதாவது: நீட் விலக்கு மசோதா குறித்து கவர்னர் தெரிவித்துள்ள கருத்துக்கள் தமிழக மக்களால் ஏற்கத்தக்கதல்ல. நீட் விலக்கு மசோதாவை மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்ற அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும். கவர்னரின் கருத்துக்கள் ஆராயப்பட்டு நீட்தேர்வு பற்றிய உண்மை நிலை அனைவருக்கும் தெளிவாக விளக்கப்படும். நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் அனைவரிடமும் கருத்தொற்றுமை நிலவி வருகிறது. நீட்விலக்கு மசோதாவை கவர்னர் திருப்பி அனுப்பியநிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி ஆராய பிப். 05 தேதி காலை 11 மணிக்கு அனைத்துகட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெறும். சட்டத்திற்கு அடிப்படையான கூற்றுக்கள் தவறானவை என கவர்னர் தெரிவித்துள்ள கருத்துகள் ஏற்கத்தக்கதல்ல. இவ்வாறு முதல்வர்...
தமிழகம்

கடந்த 4 மாதங்களில் 4,717 சட்டவிரோத பேனர்கள் அகற்றம்

தமிழகத்தில் கடந்த 4 மாதங்களில்4,717 சட்டவிரோத பேனர்கள் அகற்றப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. சட்டவிரோதமாக பேனர்கள் மற்றும் ப்ளக்ஸ் போர்டுகள் வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதஅதிகாரிகளுக்கு எதிரான நீதிமன்றஅவமதிப்பு வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், சட்டவிரோதமாக பேனர் வைத்தது தொடர்பாக இதுவரை எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? அந்த வழக்குகளின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்குகள்பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதிபி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலர்பிரபாகர் சார்பில் கூடுதல் அரசுதலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி அறிக்கை தாக்கல்செய்தார். அதில், ''கடந்த 2016-ம்ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை...
தமிழகம்

‘தமிழ்நாட்டிலும் ஆட்சியைக் கைப்பற்றுவோம்’- ராகுல் காந்திக்கு அண்ணாமலை பதிலடி

பாஜகவை நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்ததற்கு, புதுச்சேரியைப் போன்று தமிழ்நாட்டிலும் ஆட்சியைக் கைப்பற்றுவோம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலடி அளித்துள்ளார். குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மக்களவையில் நேற்று நடைபெற்றது. இதில் பேசிய ராகுல் காந்தி, குடியரசுத் தலைவர் உரை நாட்டின் தலைமைக்கான உரையாக இல்லாமல் அரசு அதிகாரிகள் கொடுத்த தகவலாக இருப்பதாகக் கூறினார். மேலும், வாழ்நாளில் ஒரு போதும் தமிழ்நாட்டில் உங்களால் ஆதிக்கம் செலுத்த முடியாது எனவும், தமிழ்நாட்டிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும் எனவும் பாஜகவை நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்திருந்தார். இது குறித்து தற்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது பதில் கருத்தை ட்விட்டர் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், வரலாற்றை ஒருபோதும் மறக்க வேண்டாம் என்றும், இலங்கை தமிழர்கள்...
தமிழகம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான பொது பிரிவு கலந்தாய்வு ஆன்லைனில் தொடங்கியது: இடஒதுக்கீட்டு விவரம் பிப்.15-ம் தேதி வெளியாகிறது

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான பொதுப் பிரிவு கலந்தாய்வு ஆன்லைனில் தொடங்கியது. மாணவ, மாணவிகளுக்கு ஒதுக்கீடுசெய்யப்பட்ட இடங்கள் குறித்த விவரங்கள் வரும் 15-ம் தேதி வெளியிடப்படவுள்ளது. தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த மாதம்27-ம் தேதி தொடங்கியது. சென்னைஅண்ணாசாலையில் உள்ள அரசுபன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நடைபெற்ற சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வில் 73 பேரும், தொடர்ந்து அரசு பள்ளிமாணவர்களுக்கான 7.5 சதவீத உள்இடஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வில் 541 பேரும் கல்லூரிகளில் சேருவதற்கான ஆணையை பெற்றனர். கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக அரசு கல்லூரிகளின் 3,995 எம்பிபிஎஸ் இடங்கள், 157 பிடிஎஸ் இடங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளின் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கான 1,390 எம்பிபிஎஸ் இடங்கள், 1,166 பிடிஎஸ் இடங்களுக்கான பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வை முதல்முறையாக ஆன்லைனில் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கலந்தாய்வில் பங்கேற்குமாறு...
தமிழகம்

நேற்று 19,280; இன்று 16,096 பேருக்கு தொற்று உறுதி-தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு சரிவு

தமிழகத்தில் ஒரே நாளில் 16,096 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது. ஜனவரி மாதத்தின் நடுப்பகுதியில் 30 ஆயிரத்திற்கும் மேலாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வந்தது. இதன்பின்னர் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. நேற்று 19,280 பேருக்கு தொற்று உறுதியானது. இந்நிலையில், இன்று 1,22,120 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில், 16,096 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று ஒரே நாளில் 35 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா சிகிச்சையில் இருந்து இன்று 25,592 பேர் குணமாகியுள்ளனர். சென்னையில் அதிகபட்சமாக 2,348 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 1,88,599 ஆக குறைந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 33,61,316 பேருக்கு தொற்று உறுதி...
தமிழகம்

நெல் கொள்முதலின்போது முறைகேடாக விவசாயிகளிடம் கட்டாய வசூல் செய்வதை தடுக்க வேண்டும்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை

நெல் கொள்முதலின்போது முறைகேடாக விவசாயிகளிடம் கட்டாயவசூல் செய்வதை தடுக்க வேண்டும் என்று அரசுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் பெ.சண்முகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நெல் கொள்முதல் செய்ய ஆன்-லைன் மூலமாக விவசாயிகள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டுமென்று அரசு உத்தரவிட்டது. இந்த புதிய முறை விவசாயிகளை பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாக்கியது. உரிய காலத்தில் கொள்முதல் மையத்தில் நெல்லை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இணையம் வேலை செய்யாதது, ஸ்மார்ட் போன் இல்லாத விவசாயிகள், பட்டா தங்கள் பெயரில் இல்லாதவர்கள், குத்தகைவிவசாயிகள் என லட்சக்கணக்கானோர் இந்த புதிய முறையினால் அரசு கொள்முதல் மையத்தில் நெல் விற்பனை செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதுகுறித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தில் சார்பில் உணவுத் துறை அமைச்சர்...
தமிழகம்

நகர்ப்புற உள்ளாட்சி தேதல்: 1,468 வேட்புமனுக்கள் தாக்கல்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இதுவரை 1,468 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பிப். 19ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவித்திருந்தார். ஜனவரி 28ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கப்படுவதாகவும், பிப்.4ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாள் எனவும் தேர்தல் ஆணையர் அறிவித்திருந்தார். அதேபோல பிப்.5ம் தேதி வேட்புமனு மீதான பரிசீலனை எனவும், பிப்.7ம் தேதி மனுவை வாபஸ் பெற இறுதி நாள் என்றும் அதேபோல வாக்கு எண்ணிக்கை பிப்.22ம் தேதி நடைபெறம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் நடைபெற்று வருகிறது. நேற்று தை அமாவாசை என்பதால்...
1 481 482 483 484 485 545
Page 483 of 545

Right Click & View Source is disabled.

error: Content is protected !!