தமிழகம்

தமிழகம்

இன்ஜினீயரிங் படிப்புக்கு புதிய பாடத்திட்டம்.. வரும் 18-ம் தேதி வெளியாகிறது

பொறியியல் படிப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் வருகிற 18-ம் தேதி வெளியிடப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. பொறியியல் படிப்புக்கு புதிய பாடத்தை அறிமுகம் செய்ய அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கனவே முடிவு செய்திருந்தது. முதற்கட்டமாக, முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் மாற்றப்படவுள்ளதாக அறிவித்திருந்தது. பாடத்திட்டத்தின் பெரும்பகுதி தொழில் துறையின் பங்களிப்பு இடம்பெறும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அண்ணா பல்கலைக்கழகம் விளக்கமளித்திருந்தது. இந்நிலையில், நடப்பு ஆண்டிலேயே புதிய பாடத்திட்டத்தை அறிமுகம் செய்து அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, காலத்துக்கேற்ப மாற்றி வடிவமைக்கப்பட்டுள்ள புதிய பொறியியல் பாடத்திட்டம் வரும் 18-ம் தேதி வெளியிடப்படும் என தெரிவித்துள்ளது. புதிய பாடத்திட்டத்துக்கு வரும் 12-ம் தேதி நடைபெற உள்ள அண்ணா பல்கலைக்கழக கல்விக்குழு கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. வேலைவாய்ப்பு, தனித்திறன் ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் 20 ஆண்டுகளுக்குப் பின் பொறியியல் பாடத்திட்டம்...
தமிழகம்

கருணாநிதி 4-ம் ஆண்டு நினைவு தினம்: முதல்-அமைச்சர் தலைமையில் தி.மு.க.வினர் அமைதி பேரணி

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, சென்னை கோபாலபுரம் இல்லத்துக்கு தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேற்று காலை சென்றார். இல்லம் முன்பு அலங்கரிக்கப்பட்ட கருணாநிதி உருவப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் கே.என்.நேரு, க.பொன்முடி, எ.வ.வேலு, மு.பெ.சாமிநாதன், சக்கரபாணி, தயாநிதி மாறன் எம்.பி., உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். கோபாலபுரம் இல்லத்துக்கு எப்போது சென்றாலும் எதிர் வீட்டில் வசிப்போரிடம் நலம் விசாரிப்பதை வாடிக்கையாக கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்றும் அவர்கள் வீட்டுக்கு சென்று நலம் விசாரித்தார். பின்னர் கோபாலபுரம் இல்லம் சென்று அங்கு கருணாநிதி உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தினார். தனது தாயார் தயாளு அம்மாளை சந்தித்து நலம் விசாரித்தார். சென்னை சி.ஐ.டி.நகர் இல்லத்தில் பூக்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உருவப்படத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்...
தமிழகம்

இந்த மாவட்டங்களில் எல்லாம் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் நிலையில், தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஒரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், கோவை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. சனிக்கிழமையன்று நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. தமிழகம், ஆந்திரா...
தமிழகம்

மன்னார்குடி பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதியா? தமிழக அரசுக்கு சீமான் எதிர்ப்பு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பெரியகுடி பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக சீமான் வெளியிட்ட அறிக்கை: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம் பெரியகுடியிலுள்ள ஹைட்ரோ கார்பன் கிணற்றிலிருந்து எரிகாற்று எடுப்பதற்கான கலந்தாலோசனை கூட்டம் விரைவில் நடைபெறுமென மாவட்ட நிர்வாகம் அறிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. 'பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான' காவிரிப்படுகை பகுதியில் மீண்டும் ஹைட்ரோ கார்பன் எரிகாற்று எடுக்க முயலும் திமுக அரசின் திரைமறைவுச் செயல்பாடுகள் வன்மையான கண்டனத்திற்குரியது. காவிரிப்படுகை மாவட்டங்களை முற்றுமுழுதாகப் பாலைவனமாக்கி, விவசாயிகளை வேளாண்மையை விட்டே அகற்றும் நோக்கத்துடன் கடந்த 2010ஆம் ஆண்டு அன்றைய திமுக அரசால் அனுமதியளிக்கப்பட்டுத் தொடங்கப்பட்ட மீத்தேன் எரிகாற்று எடுக்கும் கொடுந்திட்டம், ஐயா நம்மாழ்வார் உள்ளிட்ட பெருமக்களின் தொடர்ப்போராட்டத்தால் கைவிடப்பட்டது. பின்னர்...
தமிழகம்

போக்குவரத்துக் கழக ஊழியர்களின் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை: அமைச்சர் சிவசங்கர் தகவல்

போக்குவரத்துக் கழக ஊழியர்களின் ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. எனினும், தொழிற்சங்கத்தினரின் பெரும்பாலான கோரிக்கைகளை ஏற்கப்பட்டிருப்பதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான, 14-வது ஊதிய ஒப்பந்த ஆறாம் கட்ட பேச்சுவார்த்தையானது, போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தலைமையில் சென்னை, குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்துக் கழக பயற்சி மைய வளாகத்தில் நேற்று நடந்தது. அங்கு, 60-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்க நிர்வாகிகள் மற்றும் போக்குவரத்துக் கழக உயரதிகாரிகளுடன் சுமார் 6 மணி நேரத்துக்கு மேலாக அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு பே மேட்ரிக்ஸ் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என ஒப்புக் கொள்ளப்பட்டது. அதனை எந்த காலகட்டத்தில் இருந்து தருவது, எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை பேச்சுவார்த்தை நடைபெறுவது...
தமிழகம்

5ஜி அலைக்கற்றை ஏலத்தொகை குறைந்தது ஏன்?: ‘2ஜி புகழ்’ ராசா கேட்கிறார்

5ஜி ஏலத்தில் எதிர்பார்க்கப்பட்ட ரூ.5 லட்சம் கோடி தொகையை விட குறைவாக ரூ.1.5 லட்சம் கோடிக்கு தான் ஏலம் சென்றுள்ளதாகவும், எஞ்சிய பணம் எங்கே சென்றது என மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என ‛2ஜி' அலைக்கற்றை ஏலம் தொடர்பான வழக்கில் சிறை சென்று பின்னர் விடுதலையான திமுக எம்.பி., ஆ.ராசா கூறியுள்ளார். 5ஜி அலைக்கற்றை ஏலம் கடந்த ஒரு வாரமாக நீடித்து வந்த நிலையில், முகேஷ் அம்பானி தலைமையிலான 'ரிலையன்ஸ் ஜியோ' அதிக தொகைக்கு ஏலம் கோரி, முதலிடத்தை பிடித்தது. மொத்தமாக 5ஜி ஏலத்தில் நிறுவனங்கள் ரூ.1,50,173 கோடிக்கு ஏலம் எடுத்தன. இதில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மட்டும் ரூ.88,078 கோடிக்கு ஏலம் எடுத்தது. ஏலம் துவங்குவதற்கு முன்னதாக சுமார் ரூ.4.3 லட்சம் கோடிக்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரூ.1.5 லட்சம் கோடிக்கு...
தமிழகம்

கன மழை எச்சரிக்கையால் ஒரே நாளில் கரை திரும்பிய குமரி மீனவர்கள்

சேலத்தில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால், வீடுகளில் மழைநீர் புகுந்தது. தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் வளிமண்டல...
தமிழகம்

எடப்பாடி பழனிசாமியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்: ஆர்.எஸ்.பாரதி பதில் மனு – இன்று விசாரணை

அ.தி.மு.க. ஆட்சியில் நெடுஞ்சாலைப்பணிகளை மேற்கொள்ள ஒதுக்கீடு செய்யப்பட்ட டெண்டர் ஒப்பந்தத்தில் சுமார் ரூ.4,800 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக தி.மு.க. குற்றம்சாட்டியது. இதுகுறித்து கடந்த 2018-ம் ஆண்டு...
தமிழகம்

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்கள் மழை வெளுக்கும்.. 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்! வானிலை மையம் வார்னிங்

தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் அதி தீவிர கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதி தீவிர கனமழைக்கான ரெட் அலர்ட் 3 மாவட்டங்களுக்கு விடப்பட்டுள்ளது....
தமிழகம்

கள்ளக்குறிச்சி | பள்ளி மாணவி உயிரிழந்த வழக்கு: பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேர் ஜாமீன் மனு தள்ளிவைப்பு

சின்னசேலம் பள்ளி மாணவி உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பள்ளித் தாளாளர் உள்ளிட்ட 5 பேரை ஜாமீனில் விடுவிக்க, மாணவியின் தாய் தரப்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து...
1 483 484 485 486 487 563
Page 485 of 563

Right Click & View Source is disabled.

error: Content is protected !!