தமிழகம்

தமிழகம்

மதுரை மாநகராட்சி 100-வது வார்டுக்குட்பட்ட பகுதியில் உள்ள தெருக்களில் கழிவுநீர் தேங்கி இருப்பதால் பொதுமக்கள் அவதி., புகார் அளித்தும் கண்டுகொள்ளாத மாநகராட்சி அதிகாரிகள்.

செய்தியாளர் : வி காளமேகம் மதுரை மாவட்டம் மதுரை மாநகராட்சி வார்டு எண் 100 உட்பட்ட அவனியாபுரம் இமானுவேல் நகர, துக்கா ராம்தெரு, பிரசன்னா காலனி செல்லும்...
தமிழகம்

2 நாட்களுக்கு 26 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை

விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 26 மாவட்டங்களில் இரு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு...
தமிழகம்

“எனது காதலை ஏற்றுக் கொள்ளாத சத்யா… யாருக்கும் கிடைக்கக் கூடாது” கொலையாளி பரபரப்பு வாக்குமூலம்

எனது காதலை ஏற்றுக் கொள்ளாத சத்திய பிரியா, யாருக்கும் கிடைக்கக் கூடாது என ரெயிலில் தள்ளிவிட்டு கொலை செய்தேன் என சதீஷ்பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளார். சென்னை...
தமிழகம்

தூய்மை இந்தியா தரவரிசையில் தமிழகம் கடைசி இடம்; கோவை – போத்தனூருக்கு மட்டுமே விருது!

தூய்மை இந்தியா தரவரிசை பட்டியலில் தமிழகத்தின் பெரிய நகரங்கள் ஒரு சில இடங்கள் மட்டுமே முன்னேறி உள்ளன. சிறிய நகரங்கள் அனைத்தும் 200-வது இடத்திற்கு மேல்தான் பிடித்துள்ளன....
தமிழகம்

திருமாவளவனின் மத நல்லிணக்க பேரணி நடக்கும் தேதி அறிவிப்பு!!

அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று தமிழகத்தில் 50 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் சார்பில் பேரணி நடத்த நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளை விதித்து அனுமதி அளித்திருந்தது....
தமிழகம்

சார்பதிவாளர்கள் 26 பேர் உதவியாளர்களாக பதவியிறக்கம்: பதிவுத்துறை ஐஜி சிவன் அருள் அதிரடி

தமிழகத்தில் 26 சார்பதிவாளர்கள், உதவியாளர்களாக பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை பதிவுத்துறை ஐஜி சிவன் அருள் பிறப்பித்துள்ளார். தமிழக பதிவுத்துறை ஐஜி சிவன் அருள் பதிவுத்துறையில்...
தமிழகம்

தேவர் குருபூஜை – தங்க கவசத்தை பெறப்போவது யார் ? ஓபிஎஸ் -ஈபிஎஸ் இடையே போட்டி

முத்துராமலிங்கத்தேவரின் குருபூஜைக்கு அவரின் சிலைக்கான தங்க கவசத்தை பெறப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆண்டுதோறும் அதிமுகவின் பொருளாளர் தங்கக்கவசத்தை பெறும் வழக்கம் இருக்கும் நிலையில், தற்போது ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் ஆகியோருக்கிடையே நிலவும் பிரச்னையால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30 ஆம் தேதி நடைபெறுகிறது. அந்த நாளில் தென் மாவட்டங்களில் உள்ள தேவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்துவார்கள். தென் மாவட்டங்களில் அதிகளவில் இருக்கும் தேவர் சமுதாய மக்களின் நம்பிக்கையை பெறுவதற்காக கடந்த 2014 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு 13 கிலோ எடையுள்ள தங்க கீரிடம் மற்றும் கவசத்தை வழங்கினார். சுமார்...
தமிழகம்

கடலூர் இந்து முன்னணி ஆதரவாளர் வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு: பொள்ளாச்சி காவல் நிலையத்துக்கும் மிரட்டல் கடிதம்

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே இந்து முன்னணி ஆதரவாளர் வீட்டின் மீது நேற்று பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. பரங்கிப்பேட்டை அருகே பி.முட்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனு என்கிற ராமதாஸ் (52). இந்து முன்னணி ஆதரவாளரான இவர், ஸ்ரீராம அனுமான் தர்மபரிபாலன அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலராக உள்ளார். பு.முட்லூர் - கடலூர் சாலையில் ஆஞ்சநேயர் கோயில் ஒன்றை வைத்துள்ளார். அதே பகுதியில் 100 அடி உயரஆஞ்சநேயர் சிலை கட்டுவதற்கான பணியை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நேற்று அதிகாலை சுமார் 3 மணியளவில், இவரது வீட்டின் மீது மர்ம நபர்கள் 2 பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். இதில் அவரது வீட்டு முன்னால் நிறுத்தப்பட்டிருந்த ஜீப் மற்றும் வீட்டின் முன்பு இருந்த பனை மரத்தின் மீது பெட்ரோல் குண்டுகள் விழுந்தன. ஜீப்பின் முன் பகுதியில் புகை படிந்துள்ளது. பனை மரத்தின் கீழே...
தமிழகம்

நடிகை ஜெயலட்சுமி போலீஸில் புகார்; பாடலாசிரியர் சினேகன் மீது வழக்குப் பதிவு: அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

நடிகை ஜெயலட்சுமி அளித்துள்ள புகாரின்படி திரைப்பட பாடலாசிரியர் சினேகன் மீது திருமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவுசெய்து அறிக்கை தாக்கல் செய்ய எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சினேகம் பவுண்டேஷன் விவகாரம் தொடர்பாக பாஜக நிர்வாகியும், நடிகையுமான ஜெயலட்சுமியும், திரைப்பட பாடலாசிரியர் சினேகனும் பரஸ்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இருவரது புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸார் அவர்களை விசாரணைக்கு அழைத்து பின்னர் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். ஆனால் சினேகம் பவுண்டேஷன் பெயரில் பணமோசடியில் ஈடுபட்டு வருவதாக திரைப்பட பாடலாசிரியர் சினேகன் தனக்கு எதிராக அளித்தது பொய் புகார் என்றும், எனவே சினேகன் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக்கோரி நடிகை ஜெயலட்சுமி மீண்டும் திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் அந்த புகார் மீது எந்த...
தமிழகம்

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்., விசிக பேரணிக்கு அனுமதி மறுப்பு

தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் அக். 2ம் தேதி நடக்க உள்ள ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. சட்டம் - ஒழுங்கு பிரச்சினை காரணமாக ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்க முடியாது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 2-ம் தேதி சமூக ஒற்றுமை நல்லிணக்க மனித சங்கிலி பேரணி நடத்தப்போவதாக திருமாவளவன் அறிவித்திருந்தார். அக்டோபர் 2-ம் தேதி வேறு சில அமைப்புகளும் தமிழகம் தழுவிய சமூக ஒற்றுமை நல்லிணக்க மனித சங்கிலி பேரணி நடத்த அனுமதி கோரியதால் சட்டம் ஒழுங்கு கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 2-ல் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால் ஊர்வலத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 50 இடங்களில் அக்டோபர் 2-ம் தேதி ஆர் எஸ்.எஸ். ஊர்வலம்...
1 479 480 481 482 483 563
Page 481 of 563

Right Click & View Source is disabled.

error: Content is protected !!