சசிகலா மேல்முறையீட்டு வழக்கு: அக்.26-இல் இறுதி விசாரணை
அதிமுக பொதுச்செயலாளா் பதவியிலிருந்து தன்னை நீக்கியது செல்லும் என்ற சென்னை நகர உரிமையியல் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக் கோரி சசிகலா தொடா்ந்த மேல் முறையீட்டு மனுவை அதிமுக பொதுச்செயலாளா் பதவியிலிருந்து தன்னை நீக்கியது செல்லும் என்ற சென்னை நகர உரிமையியல் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக் கோரி சசிகலா தொடா்ந்த மேல் முறையீட்டு மனுவை இறுதி விசாரணைக்காக, அக்.26-க்கு சென்னை உயா் நீதிமன்றம் ஒத்திவைத்தது. அதிமுக பொது செயலாளராக இருந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, கட்சியின் பொது செயலாளராக வி.கே.சசிகலாவும், துணை பொது செயலாளராக டிடிவி தினகரனும் தோந்தெடுக்கப்பட்டதாக அதிமுக தரப்பில் அறிவிக்கப்பட்டது. சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு, 2017 செப்டம்பா் மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், சசிகலா, தினகரன் ஆகியோரை கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கியும்,...
