தமிழகம்

செய்திகள்தமிழகம்

மழைநீர் வடிகால், நீர்நிலைகளில் கழிவுநீர் விடும் லாரிகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்: பசுமை தீர்ப்பாயத்தில் சென்னை குடிநீர் வாரியம் பரிந்துரை

சென்னை மாநகரப் பகுதியில் மழைநீர் வடிகால் மற்றும் நீர்நிலைகளில் லாரிகள் கழிவுநீர் விடுவதை தடுக்க, அத்தகைய விதிமீறலில் ஈடுபடும் கழிவுநீர் லாரிகளின் உரிமத்தை வட்டார போக்குவரத்து அதிகாரி (ஆர்டிஓ) ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை குடிநீர் வாரியம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் பரிந்துரை செய்துள்ளது. சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் மண்டலத்துக்கு உட்பட்ட போரூர், அதைச் சுற்றியுள்ள பகுதியில் விதிகளை மீறி கழிவுநீர் லாரிகள், மழைநீர் வடிகாலில் கழிவுநீர் விடுவதால் சுகாதாரக் கேடு ஏற்படுவதாக நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. அதை அடிப்படையாகக் கொண்டு தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு, அமர்வின் நீதித்துறை உறுப்பினர் கே.ராமகிருஷ்ணன், தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்யகோபால் ஆகியோர் முன்னிலையில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை குடிநீர் வாரியம் தாக்கல்...
செய்திகள்தமிழகம்

ஊடகங்கள் மீதான வழக்குகள் வாபஸ் அறிவிப்பு: முதல்வருக்கு ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணி அமைப்பு பாராட்டு

ஊடகங்கள் மீது கடந்த ஆட்சியில் தொடர்ந்த வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும் என்று அறிவித்தமைக்காக, முதல்வர் மு.க.ஸ்டாலினை ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணி அமைப்பினர் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் நேற்று ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணி அமைப்பின் தலைவர் `இந்து' என்.ராம், மூத்த பத்திரிகையாளர் ஆர்.பகவான் சிங், நக்கீரன் இதழின் ஆசிரியர் நக்கீரன் கோபால், பெண் ஊடகவியலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் லட்சுமி சுப்பிரமணியன், இந்துஜா ரகுநாதன், அமைப்பாளர் பீர் முகமது ஆகியோர் சந்தித்தனர். அப்போது, கடந்த 24-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்துக்கு அளித்த பதில் உரையில், ``கடந்த ஆட்சியில் கருத்து சுதந்திரத்துக்கு எதிராக ஊடகங்கள் மீது அரசு தொடர்ந்த வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும்'' என்று அறிவித்து, ஜனநாயகத்தின் அடிநாதமான பேச்சு சுதந்திரத்தைப் பாதுகாத்தமைக்காக தங்களது...
செய்திகள்தமிழகம்

மீனவர்களுக்கு தனி வங்கி உருவாக்க நடவடிக்கை: கனிமொழி எம்.பி. உறுதி

மீனவர்களுக்கென தனி வங்கி உருவாக்குவதற்கு மத்திய அரசிடம் பேசி முயற்சி மேற் கொள்ளப்படும் என கனிமொழி எம்.பி. தெரிவித்தார். தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் கூடுதல் படகு அணையும் தளம் மற்றும் மீனவர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மக்களவை உறுப்பினர் கனிமொழி தலைமை வகித்தார். மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், சமூக நலத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து, ரூ.25 கோடி மதிப்பீட்டில் தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் கூடுதல் படகு அணையும் தளம் அமைக்கும் பணிக்கு கனிமொழி எம்.பிஅடிக்கல் நாட்டினார். 12 மீனவர்களுக்கு ரூ.5.05 லட்சம் மானியத்தில் நாட்டுப் படகில் வெளிப்பொருத்தும் இயந்திரத்தை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது: தமிழகத்தில் மீனவர்களின் குறைகளை அவர்களின் பக்கம் நின்று கேட்டு நிறைவேற்றும் விதமாக திமுக அரசு செயல்படுகிறது. பல திட்டங்களை...
செய்திகள்தமிழகம்

கோவை மெட்ரோ ரயில் திட்டம் ஆளுநர் உரையில் இடம்பெறாதது ஏமாற்றம்: வானதி சீனிவாசன் எம்எல்ஏ கருத்து

கோவை மெட்ரோ ரயில் திட்டம் ஆளுநர் உரையில் இடம்பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது என,கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கோவை விமான நிலையத்தில் நேற்று அவர்செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோவை மெட்ரோ ரயில் திட்டம் குறித்து ஆளுநர் உரையில்குறிப்பிடவில்லை. இதுபற்றி எம்எல்ஏ எஸ்.பி.வேலுமணி கேட்ட பின்பும், முதல்வர் ஸ்டாலின் கோவை மெட்ரோ ரயில் பற்றி எந்த வாக்குறுதியும் கொடுக்காதது ஏமாற்றம் அளிக்கிறது. கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு உதவ மத்திய அரசு தயாராக இருக்கிறது. வேறு சித்தாந்த பின்னணியில் வந்தாலும், மத்திய அரசுடன் இணைந்து வளர்ச்சி பணிகளில் அரசு ஈடுபட வேண்டும். சட்டப்பேரவையில் எங்களின் கருத்துகளை சொல்வதற்கும் இடம் வேண்டும். மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளுக்கு எதிராக இருப்பவர்களைத்தான் தமிழக அரசு குழுவில் நியமித்துக் கொள்ளும் என்றால், தமிழக அரசு மத்திய அரசுடன் இணைந்துதான்...
செய்திகள்தமிழகம்

ஒருமைப்பாட்டுக்கு கேடு விளைவிக்கும் செயல்களை பாஜக வேடிக்கை பார்க்காது: மாநில செயற்குழுவில் தீர்மானம்

இந்திய ஒருமைப்பாட்டுக்கு கேடுவிளைவிக்கும் எந்த செயலையும் பாஜக வேடிக்கை பார்க்காது என்றுபாஜக மாநில செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாஜக மாநில செயற்குழு கூட்டம் அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன் தலைமையில் சென்னை கமலாலயத்தில் நேற்றுநடந்தது. தமிழகத்தின் மற்ற பகுதிகளில் உள்ள குழு உறுப்பினர்கள் ஆங்காங்கே இருந்தபடி காணொலிக் காட்சி மூலம் பங்கேற்றனர். இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்: சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு திமுகவினர், மத்திய அரசு என்பதற்கு பதிலாக'ஒன்றிய அரசு' எனும் சொல்லைபயன்படுத்துகின்றனர். பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ''மாநிலங்களால் ஆனது இந்தியா. அரசியலமைப்பு சட்டத்தில் 'யூனியன் ஆஃப் ஸ்டேட்ஸ்' என்றே இந்தியா வரையறுக்கப்பட்டுள்ளது'' என்று கூறியிருப்பது வியப்பை அளிக்கிறது. 'இந்தியா பல மாநிலங்களைக் கொண்டதாக இருக்கலாம்' என்றே அரசியலமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, இந்தியா தனது நிர்வாகவசதிக்காக தன்னை மாநிலங்களாக பிரித்து அரசாளும் என்பதே...
செய்திகள்தமிழகம்

பெட்ரோல், டீசல் இன்றும் அதிரடி உயர்வு – தமிழகத்தில் பல மாவட்டங்களில் ரூ.100ஐ தாண்டி விற்பனை

கொரோனா லாக் டவுன் காலத்திலும் பெட்ரோல், டீசல் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாயை தாண்டி விற்பனையாகிறது. சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 99.19 ரூபாய் ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டீசல் லிட்டருக்கு 93.23 ரூபாய் ஆக விற்பனையாகிறது. இந்த விலை உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது. 5 மாநில தேர்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெட்ரோல் டீசல் விலை மே மாதத்தின் தொடக்கத்தில் இருந்து தினசரியும் உயர்த்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு விலை அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனா லாக்டவுன் காலத்திலும் தினசரியும் விலை அதிகரிக்கப்பட்டு வருகிறது. இன்று பெட்ரோல் லிட்டருக்கு 31 காசுகள் அதிகரித்துள்ளது. டீசல் லிட்டருக்கு 34 காசுகள் அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு...
செய்திகள்தமிழகம்

‘உள்ளாட்சித் தேர்தலிலும் வெற்றி பெற பாடுபட வேண்டும்’ – மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

சட்டப்பேரவை தேர்தலை போல உள்ளாட்சித் தேர்தலிலும் வெற்றி பெற அனைவரும் பாடுபட வேண்டும் என முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சென்னை அண்ணா அறிவாலாயத்தில், திமுக மாவட்டச் செயலாளர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது, விடுபட்ட 9 மாவட்டங்களில் நடக்க இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தென்காசி, நெல்லை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் செப்டம்பர் மாதத்திற்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்த வாய்ப்பு இருக்கிறது என்றும் அதற்கு மாவட்டச் செயலாளர்கள் தயார் நிலையில் இருக்குமாறும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டதாகத் தெரிகிறது. மேலும், 38 மாவட்டங்களில் நடைபெற இருக்கும் நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி சபைகளுக்கான தேர்தலில் கட்சி நிர்வாகிகளை தயார்படுத்தவும் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியதாகத் தெரிகிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நடைபெறும் முதல் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் என்பது...
செய்திகள்தமிழகம்

இந்தியாவில் வரதட்சணைக் கொடுமைக்கு 1 மணி நேரத்திற்கு ஒரு பெண் பலியாகிறார்: கனிமொழி ஆதங்கம்

இந்தியாவில் வரதட்சணைக் கொடுமைக்கு 1 மணி நேரத்திற்கு, 1 பெண் பலியாகிறார் என்று திமுக மகளிரணி செயலாளரும் எம்பியும் ஆன கனிமொழி தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக கனிமொழி எம்.பி வெளியிட்டிருக்கும் ட்வீட்டில், 'இந்தியாவில் வரதட்சணைக் கொடுமைக்கு 1 மணி நேரத்திற்கு, 1 பெண் பலியாகிறார். ஆனாலும் இந்தியக் குடும்பங்கள் இந்த வழக்கத்தை நிறுத்தியபாடில்லை. நம் மகள்களுக்கு திருமணம் செய்துவைக்கும் போது அவர்கள் சுயமரியாதையோடு பாதுகாப்பாய் இருப்பது முக்கியம் என்பதை உணரவேண்டும்' என தெரிவித்திருக்கிறார்.  ...
செய்திகள்தமிழகம்

ஜூன் 28 முதல் கல்லூரி தேர்வுகள் தொடக்கம் – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!!!

தமிழகத்தில் பி.எட்., எம்.எட்., கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கான பருவத்தேர்வுகள் இணையம் வழியாக வருகிற ஜூன் 28ம் தேதி துவங்கி ஜூலை 15ம் தேதி வரை நடைபெறும் என பல்கலை நிர்வாகங்கள் தெரிவித்துள்ளது. தமிழக்தில் கொரோனா பரவல் காரணமாக கல்வி நிலையங்கள் ஏதும் திறக்கப்படவில்லை. பள்ளிகள் முதல் கல்லூரிகள் வரை வகுப்புகள் இணையம் வழியாகவே நடைபெற்று வருகிறது. அலகு தேர்வுகள், பருவத்தேர்வுகள், திருப்புதல் தேர்வுகள் போன்ற அனைத்து தேர்வுகளும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்படுகிறது. தேர்வுகள் நெருங்கும் நேரத்தில் கொரோனா இரண்டாம் அலை வேகமெடுத்த காரணத்தால் மே 10 முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக ஆன்லைன் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் மாணவர்களுக்கான பி.எட்., எம்.எட் பருவத்தேர்வுகள் இணையம் வழியாக நடைபெறவுள்ளது. இந்த தேர்வானது வரும் ஜூன் 28ம் தேதி தொடங்கி அடுத்த...
செய்திகள்தமிழகம்

சென்னையில் மின்சார ரயில்களில் பயணம் செய்ய பொதுமக்களுக்கு இன்றுமுதல் கட்டுப்பாடுகளுடன் அனுமதி

சென்னையில் புறநகர் மின்சார ரயில்களில் இன்றுமுதல் சில கட்டுப்பாடுகளுடன் பொதுமக்கள் பயணிக்கலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தில் கரோனா தொற்றின் 2-வது அலை குறைந்து வருவதால், மாநில அரசு ஊரடங்கில் சில தளர்வுகளை அளித்துள்ளது. இந்நிலையில் பயணிகளின் தேவைக்கு ஏற்ப தொலைதூர மற்றும் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. புறநகர் மின்சார ரயில்களில் அத்தியாவசிய பணியாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தனர். பொதுமக்கள் அனுமதிக்கப்படாமல் இருந்தனர். இதனால் ரயில் போக்குவரத்தை நம்பியிருந்த தனியார் நிறுவன ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். அத்தியாவசிய பணியாளர்கள் மட்டுமின்றி, பொதுமக்களையும் புறநகர் மின்சார ரயில்களில் அனுமதிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் புறநகர் மின்சார ரயில்களில் பொதுமக்களும் பயணிக்க இன்றுமுதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அதற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி பெண்கள் மற்றும்...
1 477 478 479 480 481 497
Page 479 of 497

Right Click & View Source is disabled.

error: Content is protected !!