தமிழகம்

தமிழகம்

திருமங்கலத்தில் ஆதரவற்ற முதியோர்களுக்கு தீபாவளி பண்டிகையை ஒட்டி புதிய ஆடைகள் மற்றும் இனிப்புகள், வழங்கி கௌரவிப்பு – சமூக சேவகர்களுக்கு சால்வை அணிவித்தும் கேடயம் வழங்கியும் கௌரவிப்பு.

முன்னாள் எம்பி சித்தன் கலந்து கொண்டு முதியோர்களுக்கு புத்தாடைகள் வழங்கினார். மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள அன்னை வசந்தா டிரஸ்ட் என்ற தனியார் தொண்டு நிறுவனம் சார்பில், இப்பகுதியில் வசிக்கும் ஆதரவற்ற முதியோர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு, தீபாவளி பண்டிகையை ஒட்டி புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இவ்விழாவில் முன்னாள் எம்பி சீத்தன் கலந்து கொண்டு ஆதரவற்ற முதியோர்களுக்குபுத்தாடைகள் வழங்கினார்.மேலும் திருமங்கலம் பகுதியில் பல்வேறு சேவைப் பணிகளை செய்த சமூக சேவகர்களுக்கு சால்வை அணிவித்து கேடயமும் நினைவு பரிசாக வழங்கப்பட்டது.   மேலும், இத் தனியார் தொண்டு நிறுவனத்தின் புதிய அலுவலகத்தையும் முன்னாள் எம்.பி.சித்தன் திறந்துவைத்தார். செய்தியாளர் :  வி காளமேகம் மதுரை மாவட்டம்...
தமிழகம்

மதுரையில் எதிரெதிரே வந்த இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் போக்குவரத்து ஊழியர் படுகாயம்

மதுரை பைபாஸ் சாலையில் பழகானந்தத்தில் இருந்து எல்லிஸ் நகர் பகுதியை இணைக்கும் மேம்பாலத்தில் இருசக்கர வந்து கொண்டிருந்த போக்குவரத்து ஊழியர் ஆனந்தன் என்பவர் மீது எதிர்புறம் இருசக்கர அதிவேகமாக வந்த அழகப்பன் நகர் பகுதியை சேர்ந்த வாலிபர் கிஷோர் மோதி விபத்து ஏற்ப்பட்டது. இதில் இருவருக்கும் காலில் பலத்த காயம் ஏற்பட்டத்தை தொடர்ந்து சக வாகன ஓட்டிகள் இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மிகக் குறுகலான மேம்பாலமாக திகழும் பைபாஸ் மேம்பாலர் கடந்த மூன்று தினங்களில் சுமார் பத்துக்கும் மேற்பட்டோர் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து ஒருவர் பலியாகிய சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போக்குவரத்து துறை நடவடிக்கை மேற்கொண்டு விபத்தில்லா சாலையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். செய்தியாளர் : வி...
தமிழகம்

நீதிமன்றத்தில் ஆஜராகாத காவல் ஆய்வாளருக்கு பிடிவாரண்ட். திருவில்லிபுத்தூர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல் காவல் நிலையத்தில், கடந்த 2016 ஆம் ஆண்டு முகமது பரக்கத்துல்லா ஆய்வாளாராக பணியில் இருந்தார். இவர் பணியில் இருந்த போது, அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது 6 மாத குழந்தையை கிணற்றில் போட்டு கொலை செய்ததாக, முகமது பரக்கத்துல்லா வழக்கு பதிவு செய்தார். இது குறித்த வழக்கு திருவில்லிபுத்தூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கின் விசாரணை அதிகாரியான ஆய்வாளர் முகமது பரக்கத்துல்லா, பணி மாறுதலாகி தற்போது சென்னையில் பணிபுரிந்து வருகிறார். வழக்கு விசாரணையின் போது பலமுறை சம்மன் அனுப்பியும் ஆய்வாளர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. நேற்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையில் சாட்சி சொல்வதற்காக, நீதிமன்றம் சம்மன் அனுப்பியும் ஆய்வாளர் முகமது பரக்கத்துல்லா ஆஜராகவில்லை. வழக்கை விசாரித்த கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி...
தமிழகம்

மழைநீர் பள்ளத்தில் விழுந்து இளைஞர் உயிரிழப்பு; மேயர் முன்பு அதிமுக கவுன்சிலர் கொந்தளிப்பு – மாமன்ற கூட்டத்தில் சலசலப்பு

மதுரை மாநகராட்சி வார்டு 2-ல் உள்ள கூடல்நகர் - சொக்கலிங்கம் நகர் பகுதியில் மழை பாதிப்பால் சேதமடைந்த சாலை பள்ளத்தில் விழுந்து ரமேஷ் என்பவர் நேற்றிரவு உயிரிழந்து...
தமிழகம்

தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலர்கள் சங்கத்தின் சார்பாக அமைப்பு தினம் வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்றது

மாவட்டத்தலைவர் மகாலிங்கம் தலைமையேற்று கொடியேற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் முகமது அலி ஜின்னா, மாவட்ட செயலாளர் சென்னமராஜ் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்....
தமிழகம்

பாரதப் பிரதமரின் தூய்மை பாரதம் 2.0 திட்டம்

பாரதப் பிரதமரின் தூய்மை பாரதம் 2.0 திட்டம் அக்டோபர் 1 முதல் அக்டோபர் 31 வரை தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக பள்ளி மாணவர்கள் மற்றும்...
தமிழகம்

மதுரை அவனியாபுரம் வெள்ளக்கல் பாசன கால்வாயில் கழிவுநீர் கலந்து வெண்மை நிறத்தில் நுரை நுரையாக வருவதால் விவசாயிகள் அச்சம். மேலும் ஆகாயத்தாமரைகள் நிறைந்து காணப்படுகிறது

காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது அந்த வகையில் மதுரை அவனியாபுரம் அயன் பாப்பாகுடி கண்மாய் வெள்ளக்கல் பகுதியில்...
தமிழகம்

வெளுத்து வாங்கிய வடகிழக்கு பருவமழை சாலைகள் முழுவதும் மழை நீர் தேக்கம்

மதுரை மாநகரில் நேற்று மாலை 5 மணி முதல் 6 மணி வரை பலத்த மழை பெய்தது மீண்டும் ஆறு முப்பது லிருந்து 8 மணி வரை...
தமிழகம்

விபத்து இல்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் விழிப்புணர்வு பிரச்சாரம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் நிலைய அலுவலர் ஜெயராணி தலைமையில் தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர் திருமங்கலம் பகுதியில் அமைந்துள்ள லிங்கா மெட்ரிகுலேஷன் பள்ளியில் மாணவ மாணவியர்களுக்கு...
தமிழகம்

தமிழ்த் தன்னுரிமை இயக்கம் செய்தியாளர் சந்திப்பு

இடம்: சென்னை செய்தியாளர் அரங்கம் நாள்: 19-10-2022 ஊடகம்- செய்தித்தாள் மற்றும் தொலைக் காட்சிகளுக்கான செய்தி: இந்திய அரசு தற்போது அளித்துள்ள மைய அரசின் பாடதிட்ட கொள்கையை...
1 475 476 477 478 479 563
Page 477 of 563

Right Click & View Source is disabled.

error: Content is protected !!