தமிழகம்

தமிழகம்

சென்னை உணவுத் திருவிழாவில் இன்று முதல் பீப் பிரியாணிக்கு அனுமதி

சென்னை உணவுத் திருவிழாவில் இன்று முதல் பீப் பிரியாணிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பு துறை சார்பில் சென்னை தீவுத்திடலில் இன்றும் நேற்று முதல் மூன்று நாட்களுக்கு பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உணவு திருவிழா நடத்தப்படுகிறது. 'சிங்கார சென்னையில் உணவுத் திருவிழா 2022' உஎன்ற பெயரில் நடத்தப்படும் . இந்த திருவிழாவில் திரை கலைஞர்கள் , முக்கிய கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர். 15 0அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இவ்விழாவினை அமைச்சர்கள் சேகர் பாபு மற்றும் மா.சுப்பிரமணியன் இருவரும் நேற்று தொடங்கி வைத்தனர்.இந்த சூழலில் சென்னையில் தமிழ்நாடு அரசின் சார்பில் நடத்தப்படும் உணவு திருவிழாவில் பீஃப் பிரியாணி இடம்பெறவில்லை. இது சர்ச்சையான நிலையில் பீஃப்பிரியாணி அரங்குகள் அமைக்க விற்பனையாளர்கள் யாரும் விருப்பம் தெரிவிக்காததால் பீஃப் பிரியாணி இடம்பெறவில்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேற்று...
தமிழகம்

சர்வதேச காற்றாடி திருவிழா.. களைகட்டிய மாமல்லபுரம்

மாமல்லபுரத்தில் சர்வதேச காற்றாடி திருவிழா இன்று தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. நாட்டின் 76-வது சுதந்திர தினம், வரும் 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதைமுன்னிட்டு முதல்...
தமிழகம்

முற்றும் துறந்த மனிதனாகும் முயற்சியாக ஆன்மிக பாதையில் வாழ்க்கை நடத்துகிறேன்: அண்ணாமலை

முற்றும் துறந்த மனிதனாகும் முயற்சி எடுத்ததுடன், அந்த நிலையை நோக்கி செல்வதற்காக ஆன்மிக பாதையில் வாழ்க்கை நடத்திக் கொண்டிருப்பதாக தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். திருக்கழுகுன்றம் அடுத்த தேசுமுகிப்பேட்டையில் உள்ள சிவனடியார் சிவதாமோதரனை, கே.அண்ணாமலை அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார். அப்போது அண்ணாமலை பேசியதாவது: தற்போது ஆன்மிகத்தின் மீதான நாட்டம் இளைய தலைமுறையினரிடம் குறைவாக உள்ளது. தமிழகத்தில் ஆன்மிக ஆட்சி வரவேண்டும். அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க ஆன்மிக ஆட்சி வேண்டும். ஆன்மிகம் என்பது கோயிலில் நித்தியப்பூஜை செய்வது கிடையாது. அது மக்களுக்கான சிந்தனை. சாதி, மதத்தை எல்லாம் தாண்டி மனிதனை மனிதனாகப் பார்ப்பது. அதைவிட மிக முக்கியமானது இருப்பவன், தனக்கு எவ்வளவு தேவையோ அதைத்தாண்டி இருப்பவற்றை இல்லாதவருக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவதுதான் ஆன்மிக ஆட்சி. அப்படிப்பட்ட ஆன்மிக ஆட்சிக்குதான்...
தமிழகம்

இபிஎஸ்..? ஓபிஎஸ்.? யார் கை ஓங்கும்.. பொதுக்குழு தீர்மானம் செல்லுமா.. நீதிமன்றத்தில் இன்று விசாரணை

அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லுமா? செல்லாதா என உயர்நீதிமன்றத்தில் இன்று முதல் விசாரணை நடைபெறவுள்ளது. இதனையடுத்து தான் பொதுக்குழு தீர்மானம் தொடர்பாக முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம் அக்கட்சியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கடந்த மாதம் 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் நடைபெற இருப்பதாகவும் அந்த கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்ந்தெடுக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியானது. இதனையடுத்து அ.தி.மு்க பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும், என ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி அமர்வு, பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு அளித்துள்ளதால் பொதுக்குழுவை நடத்தலாம். விதிகளை மீறினால் நீதிமன்றத்தை நாடலாம் என தீர்ப்பு வழங்கினார். இதையடுத்து கடந்த 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடத்தப்பட்டு, எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்தெடுக்கப்பட்டார்.மேலும் சிறப்பு...
தமிழகம்

கவர்னருடன் ரஜினிகாந்த் அரசியல் பேச்சு – மார்க்சிஸ்ட் கண்டனம்

நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் குறித்து டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பல்வேறு துறை பிரபலங்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில் நடிகர் ரஜினிகாந்தும் கலந்து கொண்டார். இந்த நிலையில் டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய அவர், கிண்டி ராஜ்பவனில் கவர்னர் ஆர்.என்.ரவியை நேற்று காலை 11.30 மணியளவில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடம் நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது அரசியல் குறித்து விவாதித்ததாக ரஜினிகாந்த் பரபரப்பு கருத்தை தெரிவித்தார். இந்நிலையில், கவர்னருடன் அரசியல் குறித்து விவாதித்ததாக நடிகர் ரஜினிகாந்த் கூறிய கருத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:- அரசியல் அலுவலகமா? கவர்னர் மாளிகை? இனியும் பொறுப்போமா? தமிழ்நாடு கவர்னரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சந்தித்து...
தமிழகம்

சிறு, குறு தொழில் துறைக்கு உதவுவதற்கு ஒன்றிய அரசு எடுத்த முயற்சிகள் என்ன? – வைகோ கேள்வி

சிறு, குறு தொழில் துறைக்கு உதவுவதற்கு ஒன்றிய அரசு எடுத்த முயற்சிகள் என்ன? என்று மதிமுக பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ கேள்வி எழுப்பிய நிலையில் அமைச்சர் பானு பிரதாப் சிங் வர்மா பதிலளித்துள்ளார். (அ) தொழில்துறை உற்பத்தி, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆகியவற்றின் அடிப்படையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறையின் குறிப்பிடத்தக்க பங்களிப்பைக் கருத்தில் கொண்டு, தொழில் துறைக்கு, குறிப்பாக கொரோனா தொற்று முடக்கத்தின்போது ஏதேனும் பிணை எடுப்புத் தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளதா? (ஆ) கடந்த மூன்று ஆண்டுகளில் புதிய சவால்களை எதிர்கொள்வதற்கும், உயிர்வாழ்வதற்கும் சிறு, குறு தொழில் துறைக்கு உதவுவதற்கு ஒன்றிய அரசு எடுத்த முயற்சிகள் என்ன? (இ) ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்ட சலுகைகள் மற்றும் நிவாரணங்கள் உரியவர்களுக்கு கிடைக்கிறதா என்பதைக் கண்டறிய ஏதேனும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளதா? (ஈ)...
தமிழகம்

இன்ஜினீயரிங் படிப்புக்கு புதிய பாடத்திட்டம்.. வரும் 18-ம் தேதி வெளியாகிறது

பொறியியல் படிப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் வருகிற 18-ம் தேதி வெளியிடப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. பொறியியல் படிப்புக்கு புதிய பாடத்தை அறிமுகம் செய்ய அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கனவே முடிவு செய்திருந்தது. முதற்கட்டமாக, முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் மாற்றப்படவுள்ளதாக அறிவித்திருந்தது. பாடத்திட்டத்தின் பெரும்பகுதி தொழில் துறையின் பங்களிப்பு இடம்பெறும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அண்ணா பல்கலைக்கழகம் விளக்கமளித்திருந்தது. இந்நிலையில், நடப்பு ஆண்டிலேயே புதிய பாடத்திட்டத்தை அறிமுகம் செய்து அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, காலத்துக்கேற்ப மாற்றி வடிவமைக்கப்பட்டுள்ள புதிய பொறியியல் பாடத்திட்டம் வரும் 18-ம் தேதி வெளியிடப்படும் என தெரிவித்துள்ளது. புதிய பாடத்திட்டத்துக்கு வரும் 12-ம் தேதி நடைபெற உள்ள அண்ணா பல்கலைக்கழக கல்விக்குழு கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. வேலைவாய்ப்பு, தனித்திறன் ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் 20 ஆண்டுகளுக்குப் பின் பொறியியல் பாடத்திட்டம்...
தமிழகம்

கருணாநிதி 4-ம் ஆண்டு நினைவு தினம்: முதல்-அமைச்சர் தலைமையில் தி.மு.க.வினர் அமைதி பேரணி

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, சென்னை கோபாலபுரம் இல்லத்துக்கு தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேற்று காலை சென்றார். இல்லம் முன்பு அலங்கரிக்கப்பட்ட கருணாநிதி உருவப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் கே.என்.நேரு, க.பொன்முடி, எ.வ.வேலு, மு.பெ.சாமிநாதன், சக்கரபாணி, தயாநிதி மாறன் எம்.பி., உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். கோபாலபுரம் இல்லத்துக்கு எப்போது சென்றாலும் எதிர் வீட்டில் வசிப்போரிடம் நலம் விசாரிப்பதை வாடிக்கையாக கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்றும் அவர்கள் வீட்டுக்கு சென்று நலம் விசாரித்தார். பின்னர் கோபாலபுரம் இல்லம் சென்று அங்கு கருணாநிதி உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தினார். தனது தாயார் தயாளு அம்மாளை சந்தித்து நலம் விசாரித்தார். சென்னை சி.ஐ.டி.நகர் இல்லத்தில் பூக்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உருவப்படத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்...
தமிழகம்

இந்த மாவட்டங்களில் எல்லாம் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் நிலையில், தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஒரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், கோவை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. சனிக்கிழமையன்று நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. தமிழகம், ஆந்திரா...
தமிழகம்

மன்னார்குடி பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதியா? தமிழக அரசுக்கு சீமான் எதிர்ப்பு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பெரியகுடி பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக சீமான் வெளியிட்ட அறிக்கை: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம் பெரியகுடியிலுள்ள ஹைட்ரோ கார்பன் கிணற்றிலிருந்து எரிகாற்று எடுப்பதற்கான கலந்தாலோசனை கூட்டம் விரைவில் நடைபெறுமென மாவட்ட நிர்வாகம் அறிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. 'பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான' காவிரிப்படுகை பகுதியில் மீண்டும் ஹைட்ரோ கார்பன் எரிகாற்று எடுக்க முயலும் திமுக அரசின் திரைமறைவுச் செயல்பாடுகள் வன்மையான கண்டனத்திற்குரியது. காவிரிப்படுகை மாவட்டங்களை முற்றுமுழுதாகப் பாலைவனமாக்கி, விவசாயிகளை வேளாண்மையை விட்டே அகற்றும் நோக்கத்துடன் கடந்த 2010ஆம் ஆண்டு அன்றைய திமுக அரசால் அனுமதியளிக்கப்பட்டுத் தொடங்கப்பட்ட மீத்தேன் எரிகாற்று எடுக்கும் கொடுந்திட்டம், ஐயா நம்மாழ்வார் உள்ளிட்ட பெருமக்களின் தொடர்ப்போராட்டத்தால் கைவிடப்பட்டது. பின்னர்...
1 475 476 477 478 479 556
Page 477 of 556

Right Click & View Source is disabled.

error: Content is protected !!