போக்குவரத்துக் கழக ஊழியர்களின் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை: அமைச்சர் சிவசங்கர் தகவல்
போக்குவரத்துக் கழக ஊழியர்களின் ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. எனினும், தொழிற்சங்கத்தினரின் பெரும்பாலான கோரிக்கைகளை ஏற்கப்பட்டிருப்பதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான, 14-வது ஊதிய ஒப்பந்த ஆறாம் கட்ட பேச்சுவார்த்தையானது, போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தலைமையில் சென்னை, குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்துக் கழக பயற்சி மைய வளாகத்தில் நேற்று நடந்தது. அங்கு, 60-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்க நிர்வாகிகள் மற்றும் போக்குவரத்துக் கழக உயரதிகாரிகளுடன் சுமார் 6 மணி நேரத்துக்கு மேலாக அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு பே மேட்ரிக்ஸ் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என ஒப்புக் கொள்ளப்பட்டது. அதனை எந்த காலகட்டத்தில் இருந்து தருவது, எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை பேச்சுவார்த்தை நடைபெறுவது...






