9 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்
வட தமிழகம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் மேற்கு பருவமழை கேரளாவில் தீவிரம் அடைந்துள்ளதால் அங்கு பலத்த மழை பெய்து வருகிறது. அதன் எதிரொலியாக, உருவாகியுள்ள வளி மண்டல் சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. அதன்படி தமிழகத்தில் நேற்று 17 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்தது. அதிகபட்சமாக திருக்குவளை பகுதியில் 130 மிமீ மழை பெய்துள்ளது. கீழச் செருவை, கோவில்பட்டி 110 மிமீ, அகரம் சீகூர், லப்பைகுடிக்காடு 90மிமீ, பெலாந்துறை, சொலையாறு 80மிமீ, தேவக்கோட்டை, ஏற்காடு 70மிமீ மழை பெய்துள்ளது. மாமல்லபுரம் 30 மிமீ, ஊத்துக்கோட்டை, பூண்டி,கேளம்பாக்கம்...
