தமிழகம்

தமிழகம்

“இருளுடன் போராட வேண்டாம்; ஒளி வந்தால் இருள் தானாக நீங்கிவிடும்” – சத்குருவின் தீபாவளி வாழ்த்து

“இருள் என்னும் அறியாமையுடன் போராட வேண்டாம்; தெளிவு என்னும் ஒளியை ஏற்றினால் அறியாமை இருள் தானாக மறைந்துவிடும்” என தீபாவளி வாழ்த்து செய்தியில் சத்குரு தெரிவித்துள்ளார். பாரத...
தமிழகம்

மதுரை வாடிப்பட்டி அதிமுக அலுவலகத்தில் வெடிகுண்டு வீச்சு. திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் குற்றசாட்டு.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அதிமுக அலுவலகத்தில் நேற்றிரவு, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசி சென்றதாக அதிமுகவினர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். காவல் துறையினர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து தடயங்களை சேகரித்து விசாரணை செய்கின்றனர். இந்நிலையில் முன்னாள் வருவாய் துறைஅமைச்சரும் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான ஆர்பி உதயகுமார் சம்பவ இடத்தை பார்வையிட்டு கட்சி நிரவாகிகளுடன் ஆலோசணை செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதயகுமார்:- மதுரை வாடிப்பட்டியில் அதிமுக அலுவலகத்தில் வெடிகுண்டு வீசிய சம்பவம், திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்து விட்டதை காட்டுகிறது. மதுரை மாநகராட்சி பகுதியில் முறையாக மழைநீர் வடிகால் அமைக்காமல் இருப்பது குறித்து வணிகவரிதுறை அமைச்சர் மூர்த்தி மதுரை மேயர் இந்துராணியிடமே குற்றம்சாட்டியுள்ள சம்வம் நகைப்புக்குறியது. இது மாவட்ட அமைச்சரின் இயலாமையை வெளிபடுத்துகிறது ....
தமிழகம்

மதுரை விமான நிலையத்தில் பண்டிகை தினத்தை முன்னிடு கூடுதல் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு.

மதுரை விமான நிலையத்தில் பண்டிகை தினமான "தீபாவளி திரு நாளையொட்டி கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பண்டிகை தினத்தையொட்டி கூடுதல் பயணிகள் வருபை மற்றும் மற்றும் புறப்பாடு அதிகமாக இருப்பதால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் விமான நிலைய உள்வளாகம் போடு பாதை மற்றும் சுற்றுப்பாதை | அதிவிரைவு அதிரடிப்படை, ஆகியவை மத்திய தொழில் பாதுகாப்பு பிரிவினர் 3 பிரிவுகளாகவும். வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் போலீஸார் விமான நிலைய வெளி வளாகம், டோல்கேட். வாகனம் நிறுத்துமிடம் ஆகிய இடங்களில் மதுரை மாநகர காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோவையில் கார்சிலிண்டர் வெடித்த நிகழ்வை தொடர்ந்து போலீஸார், மத்திய தொழில் பாதுகாப்ப படையினர் தீவிர வாகன பரிசோதனை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். செய்தியாளர் : வி காளமேகம் மதுரை மாவட்டம்...
தமிழகம்

ரூபாய் 3 கோடி 95 லட்சம் செலவில் புதிய யூனியன் அலுவலகம் கட்டும் பணி தீவிரம்- அதற்காக முதல் கட்ட பணிகள் துவக்கம்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இயங்கி வந்த கட்டிடம் மிகுந்த பழமையாகவும் , சாலையை விட்டு தரைத்தளம் கீழ்ப்புறம் ஆனதால், அதனை தகர்த்து அதே இடத்தில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு, தமிழக அரசு சார்பில் ரூபாய் 3 கோடி 95 லட்சம் செலவில் நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இதற்காக பழைய கட்டிடத்தை இயந்திரம் வைத்து இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டுள்ளது. தற்சமயம் ரூபாய் 40 லட்சம் செலவில் தற்காலிக கட்டிடம் வைத்து, பொது மக்களின் தேவைக்காக அலுவலக பணிகள் நடைபெற்று வருகிறது. செய்தியாளர் : வி காளமேகம் மதுரை மாவட்டம்  ...
தமிழகம்

சிவகாசி பகுதியில், தீபாவளி பண்டிகை பொருட்கள் வாங்குவதற்காக கடை வீதிகளில் திரண்ட கூட்டம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தீபாவளி பண்டிகை களைகட்டியுள்ளது. கடந்த சில நாட்களாக அவ்வப்போது பெய்து வந்த சாரல்மழை காரணமாக நடைபாதை வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. மேலும் சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகள், அச்சகங்கள், சிறிய தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்களில் வேலை செய்து வரும் தொழிலாளர்களுக்கு நேற்று தான் போனஸ் பணம் வழங்கப்பட்டது. போனஸ் பணம் கிடைத்தவுடன் தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தினருக்கு தேவையான புத்தாடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் தீபாவளி பண்டிகைக்கான பொருட்கள் வாங்குவதற்காக கடை வீதிகளில் திரண்டனர். சிவகாசி நகர் பகுதிகள், புறநகர் பகுதிகள் மற்றும் அருகில் உள்ள கிராமப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் சிவகாசி நகர் பகுதிக்கு பொருட்கள் வாங்குவதற்காக குவிந்தனர். இதனால் சிவகாசி பேருந்து நிலையப்பகுதி, காந்தி சாலை, ஜவுளிக்கடைவீதி, கிழக்கு ரதவீதி, என்ஆர்கேஆர் சாலை, அம்பேத்கர் சிலைப்...
தமிழகம்

பள்ளிக்குள் புகுந்த மழை நீர் . வடிகால் சாக்கடை அமைக்க கோரிக்கை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகரில் நேற்று மழை வெளுத்து வாங்கியது. அப்போது 18 வது வார்டில் தனியார் உதவி பெறும் பள்ளியான நாடார் சரஸ்வதி தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது....
தமிழகம்

கர்ப்பப்பை வாய் புற்று நோயை பாப்ஸ்மியர் சோதனையில் கண்டறியலாம் மதுரை அப்போலோ மருத்துவர்கள் தகவல்

பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை புற்றுநோய் குறித்து அப்போலோ மருத்துவ குழுவினர்கள் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்ததாவது: நவீன உலகில் பெண்கள் உடல் நலம் குறித்த அதிக கவனம் இல்லாமல் உள்ளனர். ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்களுக்கு மாரடைப்பினால் வரும் மரண விகிதம் அதிகமாக உள்ளது.  கருப்பை மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் இரண்டுக்கும் இடையேயான வேறுபாடுகள் பலருக்கும் தெரிவதில்லை. கர்ப்பை வாய் புற்றுநோயை பாப்ஸ்மியர் சோதனையில் கண்டறியலாம். கருப்பை புற்றுநோய் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு ஏற்படுகிறது, ஆனால் 25% பெண்களுக்கு மாதவிடாய் நிற்பதற்க்கு முன் ஏற்படலாம். பிறப்புறுப்பு இதழ் (வால்வார்) புற்றுநோய் புற்றுநோய் என்பது 0.6% பெண்களுக்கு ஏற்படும் அரிதான புற்றுநோயாகும். 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் 4% பெண்களுக்கு வரும் புற்றுநோய். இது பாலியல் ரீதியாக பரவும் வைரஸ். ஒரு பெண்ணுக்கு வெளிப்புற பிறப்புறுப்பில் தொடர்ந்து அரிப்பு, வலி,...
தமிழகம்

பேரையூர் ரோட்டில் அரசு மருத்துவமனையில் ஆலோசனைக் கூட்டம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேரையூர் ரோட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் இணை இயக்குனர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட 58 கிராம கால்வாய் இளைஞர் சங்கம் தலைவர் சௌந்தரபாண்டியன் கலந்துகொண்டு உசிலம்பட்டி பகுதியில் பெண் சிசுக்கொலை அதிகம் நடைபெறுவதால் தொட்டில் குழந்தை திட்டத்தை பற்றி விழிப்புணர்வு அதிக அளவில் பொதுமக்களுக்கு வெளிக்கொண்டு வரவேண்டும் ரத்ததான முகாம் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை கிராமங்கள் மற்றும் கல்லூரியில் நடைபெற வேண்டும். இதற்கு முழு உறுதுணையாக 58 கிராம கால்வாய் இளைஞர் சங்கம் சார்பில் உதவுவதாகவும் தெரிவித்தனர் இந்த கூட்டத்தின் தலைமை மருத்துவர் செவிலியர்கள் காவல்துறையினர் யூனியன் சேர்மன் மற்றும் 58 கிராம இளைஞர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். செய்தியாளர்: உசிலை சிந்தனியா  ...
தமிழகம்

உசிலம்பட்டி அருகே வாலாந்தூரில் தனது சொந்த செலவில் தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வாலாந்தூரில் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் கணபதி இவர் தீபாவளியை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு தனது சொந்த செலவில் புத்தாடை மற்றும் இனிப்புகள் தீபாவளி பரிசுகள் வழங்கி தூய்மை பணியாளர்களை மெய்சிலிர்க்க வைத்தார். ஊராட்சி மன்ற தலைவர் தனது சொந்த செலவில் தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கியிருப்பது தூய்மை பணியாளர்களிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. செய்தியாளர்: உசிலை சிந்தனியா...
தமிழகம்

உசிலம்பட்டியில் நகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேனி ரோட்டில் நகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தூய்மை பணியாளர்களுக்கு நகர மன்ற தலைவர் சகுந்தலா சீருடை வழங்கினார் இதில் நகர மன்ற துணைத் தலைவர் தேன்மொழி பொறுப்பு ஆணையாளர் முத்து சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் சசிகலா மற்றும் சிவக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர். இதில் தூய்மை பணியாளர்களுக்கு சீருடை வழங்கி தீபாவளி பரிசுகளும் நகர மன்ற தலைவர் வழங்கினார். செய்தியாளர்: உசிலை சிந்தனியா...
1 473 474 475 476 477 563
Page 475 of 563

Right Click & View Source is disabled.

error: Content is protected !!