அதிமுக ஆட்சியில் நடந்த ஸ்மார்ட் சிட்டி ஊழல் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை தாக்கல் செய்தது ஒரு நபர் விசாரணை ஆணையம்.
அதிமுக ஆட்சியில் நடந்த ஸ்மார்ட் சிட்டி ஊழல் தொடர்பாக முதலமைச்சரிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஒரு நபர் ஆணைய தலைவர் டேவிதார் அறிக்கை தாக்கல் செய்து ஆலோசனையில் ஈடுபட்டார். கடந்த 2015ம் ஆண்டு ஒன்றிய அரசு சார்பாக ஸ்மார்ட் சிட்டி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. அந்தத் திட்டத்தின் அடிப்படையில் அதிமுக ஆட்சியில், நாடு முழுவதும் 100 நகரங்களை தேர்வு செய்து ஸ்மார்ட் சிட்டிகளாக மாற்ற திட்டமிடப்பட்டது. முதற்கட்டமாக தமிழகத்தில் சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, தஞ்சை, சேலம், வேலூர், தூத்துக்குடி உள்ளிட்ட 11 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டன. அதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ஒன்றிய அமைச்சகம் ரூ.5,390 கோடி ஒதுக்கியுள்ளது. இதில் தற்போது அளிக்கப்பட்ட தொகை ரூ.3,969 கோடி ஆகும். ஒன்றிய அமைச்சகத்தில் இருந்து ரூ.1,421 கோடி வர வேண்டி உள்ளது....
