செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் பிரதமர், ஜனாதிபதி படம் இடம்பெற வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு
44ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் இன்று (ஜூலை 29) முதல் தொடங்குகிறது. 187 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் போட்டியில் பங்கேற்கின்றனர். செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரபலப்படுத்த தமிழக அரசு சார்பில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டது. இதில் முதலமைச்சர் ஸ்டாலின் படம் மட்டும் இடம்பெற்றுள்ளது, பிரதமர் மோடி படம் இடம்பெறவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இந்தநிலையில், சிவகங்கையைச் சேர்ந்த ராஜேஷ்குமார் செஸ் ஒலிம்பியாட் தொடர்பான விளம்பரங்களில் பிரதமர் மோடி பெயர் மற்றும் புகைப்படத்தைச் சேர்க்க கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்தார். அதில், “தமிழகத்தில் சென்னை மாமல்லபுரத்தில் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. பிரதமர் மோடி இந்த போட்டிகளை தொடங்கி வைக்கிறார். ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெற உள்ள இந்த போட்டியின் விளம்பரத்திற்காக பெருமளவிலான பொதுமக்களின் வரிப்பணம்...
