தமிழகம்

தமிழகம்

புழல் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார் ஜெயக்குமார்

திமுக நபரை தாக்கிய வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடந்த 21ஆம் தேதி கைது செய்யப்பட்டார் . அதன் பின் சாலை மறியல் , நில அபகரிப்பு உள்ளிட்ட வழக்குகளிலும் அவர் கைது செய்யபட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார் . ஏற்கனவே திமுக நபரை தாக்கிய வழக்கு , சாலை மறியல் செய்த வழக்குகளில் ஜாமீன் பெற்றிருந்த நிலையில் நில அபகரிப்பு வழக்கில் ஜெயக்குமாருக்கு உயர்நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியது . இதனால் கடந்த 21 ஆம் தேதியில் இருந்து புழல் சிறையில் உள்ள அமைச்சர் ஜெயக்குமாரை வரவேற்க அதிமுக தொண்டர்கள் நேற்று மாலை புழல் சிறை முன்பு கூடினர் . சிறைத்துறை விதிப்படி மாலை 6 மணிக்கு மேலாக கைதிகளை விடுவிக்க கூடாது. எனவே, மாலை 6.30 மணி வரை அமைச்சர் ஜெயக்குமார் பிணை ஆணையை...
தமிழகம்

டாப்சிலிப்பில் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி தீவிரம்

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள டாப்சிலிப் வனச்சரக பகுதிகளில் தீத்தடுப்பு கோடுகள் அமைத்தல் மற்றும் சாலையோர புதர்கள் அகற்றும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள முக்கிய பல்லுயிர் பெருக்கமண்டலமாக ஆனைமலை புலிகள் காப்பகம் உள்ளது. இந்த காப் பகத்தின் பொள்ளாச்சி கோட்டத்தில் உள்ள பொள்ளாச்சி, வால்பாறை, உலாந்தி, மானாம்பள்ளி ஆகியவனச்சரகங்களுக்கு, ஆயிரக்கணக் கான சுற்றுலா பயணிகள் வந்துசெல்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் மே வரையிலான காலகட்டத்தில் கோடை வெயில் மற்றும் சுற்றுலா பயணிகள் வனப்பகுதியில் தீப்பிடிக்கும் பொருட்களை பயன்படுத்துதல் ஆகியவற்றால் காட்டுத்தீ ஏற்படுகிறது. இதை தடுக்க காப்பகம் முழுவதும், சுமார் 170 கிலோ மீட்டர் தொலைவுக்கு, தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அத்துடன், சுற்றுலா பயணிகள் வனவிலங்குகளை பார்வையிட, டாப்சிலிப் வழித்தடத்தை வனத்துறையினர் சுத்தம் செய்யும் பணியை தொடங்கியுள்ளனர். இது...
தமிழகம்

இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில் அறிமுகம்; அரசு சேவைகளை மேம்படுத்தும் முதல்வரின் புத்தாய்வு திட்டம்: திறமையான இளைஞர்களை பயன்படுத்தி செயல்படுத்தப்படும்

திறமையான இளைஞர்களை பயன்படுத்தி அரசு சேவைகளை மேம்படுத்தும் முதல்வரின் புத்தாய்வு திட்டம் என்ற புதியதிட்டம் நாட்டிலேயே முதல்முறையாக தமிழகத்தில் செயல்படுத்தப்பட இருக்கிறது. தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதிய அரசு அமைந்த நிலையில், அடுத்து வந்த நிதிநிலை அறிக்கை மற்றும் துறைகள்தோறும் மானிய கோரிக்கை அறிவிப்புகளில் பல்வேறு புதிய திட்டங்கள் இடம் பெற்றிருந்தன. அவற்றில் ஒன்றுதான், 'முதல்வர் புத்தாய்வுத் திட்டம்'. சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் கீழ் வரும் இத்திட்டத்தை செயல்படுத்தும் நடவடிக்கையாக தற்போது திட்டத்துக்கான நிதி ஒதுக்கி, அதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழக இளைஞர்களின் திறமைகளில் அரசு அதிக நம்பிக்கைகொண்டுள்ளது. எனவே, இளைஞர்களை பயன்படுத்தி அரசு சேவைகளை மேம்படுத்த, புத்தாய்வு திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, தொழில்முறை, கல்விப் பின்னணி அடிப்படையில் தகுதியான இளம் வல்லுநர்களை தேர்வு செய்து ஊக்க ஊதியத்துடன்...
தமிழகம்

பஜ்ஜி சாப்பிட்ட செலவு 3 கோடி ரூபாய்.. பாஜக தலைவர் பரபரப்பு பேச்சு

"தமிழக அரசு 3 கோடி ரூபாய் மீட்பு பணிக்கு செலவு செய்திருப்பது, அமைச்சர்கள் டில்லி சென்று பஜ்ஜி சாப்பிட்ட செலவுதான்" என்று, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மண்டைக்காட்டில் பேசினார். கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் நடைபெற்று வரும் மாசி கொடை விழாவின் ஒடுக்கு பூஜையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். அதைத்தொடர்ந்து, ஹைந்தவ ஹிந்து சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற சமய மாநாடு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஏழைகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதைத் தொடர்ந்து பேசிய அண்ணாமலை, "ஒரே நேரத்தில் ரஷ்யா - உக்ரைன் அதிபர்களிடம் பேசிய ஒரே பிரதமர் மோடிதான். மோடியை எதிர்க்க பிரதமர் ஆசையுடன் தமிழக முதல்வர் ஸ்டாலின், மம்தா, ராகுல் காந்தி உள்ளிட்டோர் கும்பலாக கிளம்பியுள்ளனர்....
தமிழகம்

புதுச்சேரி எல்லையின் அடையாள வளைவு, காமராஜர் சதுக்கம் இடிப்பு

நான்கு வழிச்சாலை பணிகளுக்காக புதுச்சேரி எல்லை மதகடிப்பட்டில் அமைக்கப்பட்டிருந்த அடையாள அலங்கார வளைவு மற்றும் காமராஜர் சதுக்கம் ஆகியவை இடிக்கப்பட்டன. புதுச்சேரி - விழுப்புரம் இடையேபோக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இச் சூழலில் விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி வழியாக நாகப்பட்டினம் வரை 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக கண்டமங்கலம், திருபு வனை, திருபுவனை பாளையம், அரியூர், திருவண்டார்கோவில், மதகடிப்பட்டு, கெங்கராம்பாளை யம் உள்ளிட்ட பகுதிகளில் கடை கள், வீடுகள் இடிக்கப்பட்டு சாலை விரிவாக்க பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. மழைநீர்செல்லும் வகையில் சாலை யின் குறுக்கே பல்வேறு இடங்களில் சிறிய பாலங்களும் அமைக் கப்படுகின்றன. மேலும் திருபுவனை, திருவண்டார் கோவில் ஆகிய பகுதிகளில் கிராமப்புற சாலைகளைஇணைக்கும் வகையில் 2 மேம் பாலங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன....
தமிழகம்

சேலம் அரசு மருத்துவமனையில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு விரைவில் சிகிச்சைப் பிரிவு

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விரைவில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சிறப்பு சிகிச்சைப் பிரிவு தொடங்கப்படும் என மருத்துவமனை டீன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மருத்துவமனை டீன் வள்ளி சத்தியமூர்த்தி கூறியதாவது: தமிழகத்தில் சென்னை, மதுரையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சிறப்பு சிகிச்சைப் பிரிவு தொடங்கப்படுகிறது. இதற்கான மருத்துவமனை வளாகத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. புதிதாக தொடங்கப்படவுள்ள சிகிச்சைப் பிரிவு வாரத்தில் ஒருநாள் மட்டும் செயல்படும். இப்பிரிவில் பொது மருத்துவர், சிறுநீரகவியல் துறை மருத்துவர், பிளாஸ்டிக் சர்ஜன், என்டோகிரைனாலாஜிஸ்ட் என சிகிச்சையின் தேவைக்கு ஏற்ப மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு, உரிய சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படும். வருங்காலத்தில், மூன்றாம் பாலினத்தவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளவும் வாய்ப்புள்ளது. இச்சிகிச்சைப் பிரிவு...
தமிழகம்

2022-23 நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் மார்ச் 18-ம் தேதி தாக்கல்

தமிழக அரசின் 2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை வரும் 18-ம் தேதி சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார். இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேரவைத் தலைவர் மு.அப்பாவு நேற்று கூறியதாவது: தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 18-ம் தேதி காலை 10 மணிக்கு தலைமைச் செயலக வளாகத்தில் அமைந்துள்ள பேரவை மண்டபத்தில் தொடங்குகிறது. அன்று, பேரவையில் அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் தாக்கல் செய்ய உள்ளார். காகிதமில்லா இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படுகிறது. அதன்பின், அலுவல் ஆய்வுக்குழு கூடி, எத்தனை நாட்கள் பேரவைக் கூட்டத்தை நடத்துவது என்பது குறித்து முடிவெடுக்கும். அத்துடன் 2022-23 நிதியாண்டுக்கான முன்பண மானிய கோரிக்கை, 2021-22 ஆண்டுக்கான இறுதி துணை நிலை அறிக்கையை ஆகியவையும் பேரவையில் நிதியமைச்சரால் தாக்கல் செய்யப்படும். வேளாண் பட்ஜெட் குறித்து அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவெடுத்து அறிவிக்கப்படும். துறைரீதியான மானிய கோரிக்கையை...
தமிழகம்

“தேர்வு தேதிகளில் மாற்றம் இருக்காது” – அமைச்சர் அன்பில் மகேஸ்

தமிழ்நாட்டில், 6 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மே மாதத்தில் நடைபெறும் ஆண்டு இறுதித் தேர்வு தேதியில் மாற்றம் இருக்காது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். "நம் பள்ளி நம் பெருமை" என்ற திட்டத்தின் கீழ் பள்ளி மேலாண்மைக் குழுவை வலுப்படுத்துவதற்கு பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. அதன்படி, நம் பள்ளி நம் பெருமை திட்டத்தின் பரப்புரை தொடக்க விழா சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு திட்டத்தின் பரப்புரையையும், பள்ளி மேம்பாட்டு திட்ட செயலியையும் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மற்றும் நிர்வாக பதவிகளில் அரசியல் தலையீடு இருப்பதாக வரும் புகார்கள் உண்மை இருந்தால், உரிய...
தமிழகம்

மகளிர் தினம்: முதலமைச்சர் வாழ்த்து

மகளிர் முன்னேற்றத்திற்கு 'திராவிட மாடல் அரசு' என்றும் துணை நிற்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இன்று உலக மகளிர் தினம் கொண்டாடப்படுவதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "பெண் ஏன் அடிமையானாள்?" என்று கேள்வி எழுப்பி, அறிவொளிப் பாய்ச்சிய தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கருணாநிதி ஆகியோரது வழி நடைபோடும் நமது 'திராவிட மாடல்' அரசு, மகளிர்க்கான எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகக் கூறியுள்ளார். ரத்த பேதம், பால் பேதம் கூடாது என்ற முழக்கத்தோடு, ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருக்கான சமூக விடுதலைக்காகப் போராடும் இயக்கம்தான் திராவிட இயக்கம் எனத் தெரிவித்துள்ளார். மகளிர்க்காக தி.மு.க. அரசு செயல்படுத்திய திட்டங்கள், இன்று நாட்டுக்கே வழிகாட்டியாகஅமைந்துள்ளன எனக் கூறியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெண்களது நலனும் உரிமையும் காக்கப்படும் என்றும் மகளிர் முன்னேற்றத்திற்கு நமது 'திராவிட மாடல் அரசு'...
தமிழகம்

கோகுல்ராஜ் ஆணவப்படுகொலை வழக்கு: யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு என்ன தண்டனை?- இன்று அறிவிப்பு

சேலம் மாவட்டம் ஓமலுரை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான கோகுல்ராஜ், 2015 ஆம் ஆண்டு தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்டார். இந்த ஆணவக்கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட அவரது கூட்டாளிகள் 10 பேர் குற்றவாளிகள் என்று நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை என்று இன்று நீதிபதி உத்தரவிட உள்ளார். ஓமலூரைச் சேர்ந்த பட்டியல் இன சமூகத்தைச் சேர்ந்த கோகுல்ராஜும் நாமக்கல்லைச் சேர்ந்த வேறு சமூகத்தைச் சேர்ந்த இளம் பெண்ணும் நட்பாக பழகினர். கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் 23 ஆம் தேதி கல்லூரிக்குச் செல்வதாக கூறிவிட்டுச் சென்ற கோகுல்ராஜ், இரவு வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால், அவரின் பெற்றோர் தேட ஆரம்பித்தனர். நாமக்கல் அருகே உள்ள கிழக்கு தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் தலை வேறு உடல் வேறாக சடலமாக கோகுல்ராஜின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவரது நாக்கும்...
1 429 430 431 432 433 499
Page 431 of 499

Right Click & View Source is disabled.

error: Content is protected !!