கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி 34 வது பட்டமளிப்பு விழா
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முஹமது சதக் பொறியியல் கல்லூரியில் 34 வது பட்டமளிப்பு விழா நடந்தது. முஹமது சதக் அறக்கட்டளை செயல் இயக்குநர் பி.ஆர்.எல். ஹாமீது இப்ராஹிம் தலைமை வகித்தார். அறக்கட்டளை இயக்குநர். எஸ்.எம்.ஏ.ஜெ.ஹபீப் முஹமது முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் (பொறுப்பு) முனைவர் இரா. செந்தில்குமார் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர், ஜான் டாம் வர்கீஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது: நம் வாழ்வில் வெற்றி, தோல்வி என இரண்டும் மாறி மாறி வரும். தோல்வியை கண்டு துவண்டு விடாமல் விடாமுயற்சியுடன் முயன்று வென்று சாதனை படைக்க மாணவர்களாகிய நீங்கள் உங்களின் தனித்திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றார். அண்ணா பல்கலை அளவில் தரவரிசை பட்டியலில் இடம் பிடித்த மாணவர் 5 பேர், இளநிலை பொறியியல் பட்டதாரிகள் 910 பேர், முதுநிலை பொறியியல் பட்டதாரிகள்...
