தமிழகம்

தமிழகம்

சென்னை துறைமுகம் – மதுரவாயல் ஈரடுக்கு சாலைக்கு டெண்டர் அறிவிப்பு

சென்னை மதுரவாயல் - துறைமுகம் ஈரடுக்கு உயர்மட்ட சாலை ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரையிலான இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு அரசு, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சென்னை துறைமுக பொறுப்புக் கழகம் மற்றும் இந்திய கடற்படை ஆகியவற்றிற்கிடையே கையெழுத்தானது. இத்திட்டத்தின்படி, ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தால் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வாயிலாக சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரையிலான 20.565 கி.மீ. நீளத்திற்கு ரூ.5855 கோடி மதிப்பில் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை அமைக்கப்படுகிறது. இந்த இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலையில் சென்னை துறைமுகம் முதல் கோயம்பேடு வரை முதல் அடுக்கில் உள்ளூர் வாகனங்கள் மட்டும் பயணிக்கும் வகையிலும், 13 இடங்களில் வாகனங்கள்...
தமிழகம்

கும்பகோணம் பள்ளி தீ விபத்து நினைவு தினம்: பெற்றோர் கண்ணீர் மல்க அஞ்சலி

கும்பகோணம் கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் உயிரிழந்த 94 குழந்தைகளின் 18 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று (16-ம் தேதி) அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு காலை குழந்தைகளை இழந்த பெற்றோர்கள், அரசியல் கட்சியினர், பள்ளி குழந்தைகள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி கும்பகோணம் காசிராமன் தெருவில் அமைந்திருந்த ஸ்ரீ கிருஷ்ணா தொடக்கப் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்தனர். மேலும் 18 குழந்தைகள் படுகாயமடைந்தனர். இந்த தீவிபத்தில் உயிரிழந்த 94 குழந்தைகளின் 18-ம் ஆண்டு நினைவு தினம் இன்று (16-ம் தேதி) அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு தீ விபத்து நிகழ்ந்த பள்ளி முன் குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் சார்பில் நினைவஞ்சலி கூட்டமும், பாலக்கரையில் உள்ள நினைவு மண்டபத்தில் மலர்வளையம்...
தமிழகம்

நடிகர் பிரதாப் போத்தன் காலமானார்

பிரபல நடிகரும், இயக்குநருமான பிரதாப் போத்தன் (69) சென்னையில் தனது இல்லத்தில் இன்று காலை 8 மணிக்கு காலமானவர். பிரதாப் போத்தன் தமிழ், மலையாளம், தெலுங்கு என...
தமிழகம்

காமராஜரின் 120-வது பிறந்தநாள்: ராமதாஸ், அன்புமணி மற்றும் டிடிவி தினகரன் வாழ்த்து

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், கல்வி கண் திறந்த கர்ம வீரர் என்று போற்றப்படுபவருமான பெருந்தலைவர் காமராஜரின் 120வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. காமராஜரின் பிறந்தநாளை ஒட்டி பல்வேறு கட்சித் தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: "ஏழைகளுக்கு கல்வி எட்டாக்கனி என்ற நிலையை மாற்றி, அறிவுப்பசி தீர்க்க ஏழைகளுக்கு இலவசக் கல்வி உண்டு; வயிற்றுப்பசி போக்க இலவச உணவும் உண்டு என்று அறிவித்து ஏழைகளின் வாழ்வில் கல்வி ஒளி ஏற்றிய கர்மவீரர் காமராசருக்கு இன்று 120வது பிறந்தநாள். இது வரலாற்றில் பொன்னாள்! கல்வியில் மட்டுமின்றி, தொழில்துறை, பாசனம் ஆகியவற்றிலும் தமிழகம் தலை நிமிர்ந்து நிற்கிறது என்றால் அதற்கு அடித்தளம் அமைத்தவர் காமராசர் தான். தமிழகத்தின் வளர்ச்சிக்கு வித்திட்ட சிவகாமி மைந்தனின் தியாகத்தை அவரது...
தமிழகம்

அண்ணாமலை – உதயநிதி ஸ்டாலின் திடீர் சந்திப்பு.

முன்னாள் அமைச்சர் ஐசரி வேலன் மனைவியும், சென்னை வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தரும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஐசரி கணேஷ் தாயாருமான புஷ்பா நேற்று காலமானார். அவருடைய உடல் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள ஐசரி கணேஷ் வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. அரசியல் பிரபலங்கள், திரைத்துறையினர் உள்ளிட்ட ஏராளமானோர் நேரில் சென்று புஷ்பா உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அதன்படி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று மாலை அஞ்சலி செலுத்தினார். அப்போது, திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலினும் அங்கு அஞ்சலி செலுத்துவதற்காக வந்திருந்தார். அஞ்சலி செலுத்திய பின்னர், இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டனர். அப்போது அண்ணாமலை, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல்நலம் குறித்து உதயநிதி ஸ்டாலினிடம் கேட்டறிந்தார். அப்போது, ஐசரி கணேஷ், பாஜக நிர்வாகிகள் கரு.நாகராஜன், கராத்தே தியாகராஜன்...
தமிழகம்

ஒரே சிறுமியிடம் இருந்து மாதந்தோறும் பலமுறை கருமுட்டையை எடுத்திருக்கிறார்கள் :அமைச்சர் மா.சுப்பிரமணியன் பகீர் தகவல்

ஈரோடு சிறுமி கருமுட்டை விற்பனை தொடர்பாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிறுமியை அவரது குடும்பத்தினரே நிர்பந்தம் செய்து கருமுட்டை விற்பனையில் ஈடுபட்டுள்ளதாகவும் இது தொடர்புடைய மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.மேலும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசியதாவது, 'கருமுட்டை விற்பனையில் ஈடுபட்ட 4 தமிழக தனியார் மருத்துவமனைகளை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவ குழு விசாரணை அறிக்கையில் குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ஈரோடு, சேலத்தில் சுதா, ஓசூரில் விஜய், பெருந்துறையில் ராம்பிரசாத் மருத்துவமனைகளை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்படும். 4 தனியார் மருத்துவமனைகளிலும் உள்ள நோயாளிகளை 15 நாளில் டிஸ்சார்ஜ் செய்ய வேண்டும். 4 மருத்துவமனைகளில் உள்ள ஸ்கேன் சென்டர்கள் உடனடியாக மூடப்படும். சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளுக்கு ரூ.50...
தமிழகம்

நான் நலமாக இருக்கிறேன்; கவலை வேண்டாம் – ராமதாஸ் ட்வீட்

என்னுடைய உடல்நிலை குறித்து கவலை கொள்ள வேண்டாம் என்று ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு அரசியல் தலைவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழக முதல்வர் மு. க .ஸ்டாலின் நேற்று முன்தினம் தனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்று ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார். இதன் காரணமாக அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இந்த சூழலில் பாமக நிறுவனர் ராமதாஸுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . இதை நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறிய அவர் , தொண்டை வலியால் பாதிக்கப்பட்டிருந்த எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . தைலாபுரம் தோட்ட இல்லத்தில் என்னை நான் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன் . கொரோனா தொற்று வேகமாக பரவ தொடங்கியுள்ள நிலையில், மக்கள் அனைவரும்...
தமிழகம்

அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட 16 தீர்மானங்கள்..! 4 மாதத்தில் பொதுச்செயலாளர் தேர்தல்

இரட்டை தலைமையை ரத்து செய்தும், ஒற்றை தலைமை நியமிப்பது தொடர்பாக அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 1) அதிமுக அமைப்பு தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தல்.. 2) தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, ஜெயலலிதா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசை வலியுறுத்தல்.. 3) அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டை தலைமையை ரத்து செய்து, அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படும் பொது செயலாளர் பொறுப்பு குறித்து விவாதித்து முடிவு எடுத்தல்.. 4) அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் பொறுப்பை உருவாக்குவது குறித்து விவாதித்து முடிவு எடுத்தல்.. 5) அதிமுகவின் இடைக்கால பொது செயலாளரை நடைபெறவுள்ள பொதுக்குழுவிலேயே தேர்வு செய்ய வேண்டுதல். 16 resolutions including the election of Edappadi Palaniswami as General Secretary...
தமிழகம்

27 அம்மன் கோயில்களில் ஆடி மாத திருவிழா சிறப்பு ஏற்பாடு – அமைச்சர் சேகர் பாபு

தமிழ்நாட்டில் உள்ள 27 பெரிய அம்மன் திருக்கோயில்களில் ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, சென்னை, நுங்கம்பாக்கம், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் எதிர்வரும் ஆடி மாதத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள 27 பெரிய அம்மன் திருக்கோயில்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்வது தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ​இக்கூட்டத்தில், தமிழ்நாட்டில் உள்ள முக்கிய அம்மன் திருக்கோயில்களான சென்னை மயிலாப்பூர் அருள்மிகு முண்டக்கண்ணி அம்மன் திருக்கோயில், மாங்காடு, அருள்மிகு காமாட்சியம்மன் திருக்கோயில், திருவேற்காடு அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில், மதுரை, தெப்பக்குளம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், காஞ்சிபுரம் அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில், பண்ணாரி அருள்மிகு மாரியம்மன்...
தமிழகம்

தமிழகத்தில் ஊரடங்கு தேவையில்லை: அமைச்சர் சுப்பிரமணியன் திட்டவட்டம்

'தமிழகத்தில், 5 சதவீதம் பேருக்கு தான் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளதால், ஊரடங்கு தேவையில்லை,'' என, தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார். தஞ்சாவூரில் நேற்று கொரோனா தடுப்பூசி முகாமை ஆய்வு செய்த பின், அவர் கூறியதாவது:தமிழகத்தில் இதுவரை, கொரோனா தடுப்பூசி முதல் டோஸ், 94.68 சதவீதம் பேரும், இரண்டாம் டோஸ், 85.47 சதவீதம் பேரும் செலுத்திக் கொண்டுள்ளனர். தடுப்பூசியால், மக்களிடையே, 88 சதவீதம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது. ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனையில், 10 சதவீதத்துக்கும் மேல் தொற்று உறுதி செய்யப்பட்டாலோ, தொற்று பாதிப்பு எண்ணிக்கை, 40 சதவீதத்துக்கும் மேல் இருந்தாலோ தான் ஊரடங்கு தேவை.தற்போது, தமிழகத்தில், 5 சதவீதம் பேர் தான் தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதால், ஊரடங்கு தேவையில்லை. தனியார் மருத்துவமனைகளில், இலவச பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும்.'பிஏ4,...
1 422 423 424 425 426 499
Page 424 of 499

Right Click & View Source is disabled.

error: Content is protected !!