தமிழகம்

தமிழகம்

வேலூரில் நாளை 14 ஆயிரம்பேர் காவலர்களுக்கு எழுத்து தேர்வு, 1200 போலீசார் பாதுகாப்பு ஈடுப்படவுள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் நாளை 27-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை 15 தேர்வு மையங்களில் ஆண்கள் 12799 பேரும், பெண்கள் 2192 பேர் உள்ளிட்ட 14,991 பேர் காவலர் எழுத்து தேர்வு எழுத உள்ளனர். இதுதொடர்பாக காவல்துறை செய்ய வேண்டிய பணிகள் குறித்து அறிவுரை கூட்டம் வேலூர் விஜடி அரங்கில் நடந்தது. இதில் மாவட்ட எஸ்.பி.ராஜேஷ்கண்ணன் கலந்துகொண்டு காவல்துறையினருக்கு அறிவுரை வழங்கினார். 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்...
தமிழகம்

தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பாக நடைபெற்ற ஆலோசனை

தமிழக வாழ்வுரிமைக் கட்சி கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் இன்று(26-11-2022 ) தமிழக வாழ்வுரிமைக் தளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேன்கனிக்கோட்டை நகரச் செயலாளர் முகம்மது ரபிக் அவர்களை மாவட்டச் செயலாளர் சந்தித்து கட்சியினுடைய வளர்ச்சிக்காக ஆலோசனை வழங்கினார். உடன் மாவட்டத் தலைவர் மற்றும் கட்சி நிர்வாகிகள் இருந்தார்கள். செய்தியாளர் : A. முஹம்மத் யூனூஸ், கிருஷ்ணகிரி மாவட்டம்...
தமிழகம்

வேலூர் மண்டல பேரூராட்சி உதவி இயக்குநரின் மெத்தன போக்கு அரசு பணியாளர் சங்கம் புகார்

தமிழ்நாடு அரசு அனைத்து பணியாளர் சங்க மாநில கெளரவ தலைவர் சி.ராஜவேலு.  சென்னை பேரூராட்சி ஆணையரகத்திற்கு அனுப்பி உள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: ராணிப்பேட்டை மாவட்டம் கலவை பேரூராட்சி துப்புரவு மேற்பணியாளர் பணியிடம் பூர்த்தி செய்வதை எங்கள் சங்கம் மூலம் புகார் மனு அனுப்பி இருந்தோம் (கடிதம் எண்15/2022) அதில் தாங்கள் வேலூர் மண்டல பேரூராட்சி உதவி இயக்குநர் மனுவின மீது விதிகளின் படி நடவடிக்கைஎடுக்க அறிவுறுத்தி கடிதம் அனுப்பி இருந்தீர்கள், ஆனால் வேலூர் மண்டல பேரூராட்சி உதவி இயக்குநர் அதை அப்படியை கலவை பேரூராட்சி செயல் அலுவலருக்கு அனுப்பி வைத்து உள்ளார். ஆனால் எந்த நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி கெளரவத் தலைவர் சி.ராஜவேலு, சென்னை பேரூராட்சி ஆணையரக இணை இயக்குநர்/பொது/உமாமகேஸ்வரிக்கு மீண்டும் புகார் மனு அனுப்பி உள்ளார். செய்தியாளர் : கே.எம்....
தமிழகம்

நல்லுதேவன்பட்டியில் நாட்டு நலப்பணித் திட்டத்தை தொடங்கி வைத்த எம் எல் ஏ

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நல்லுதேவன்பட்டியில் நாட்டு நலப்பணி திட்டம் மூலம் டி இ எல் சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ஒவ்வொரு ஊர்களாகச் சென்று பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் நாட்டு நலப்பணித் திட்டத்தின் குறிக்கோளை பற்றி எடுத்துரைக்கும் வகையில் பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதனை எம்எல்ஏ ஐயப்பன் தொடங்கி வைத்தார். இதில் ஒவ்வொரு ஊர்களுக்கும் முகாம் அமைத்து மாணவிகள் மக்கும் குப்பை மக்காத குப்பை எவ்வாறு தரம் பிரித்து வழங்குவதும் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகித்தால் எவ்வாறு விளைவுகள் ஏற்படும் என்பதும் பிளாஸ்டிக் பைகளை உபயோகிப்பதை தடுத்து விட்டு மஞ்சள் பை உபயோகிக்க வேண்டும் எனவும் கோஷங்கள் எழுப்பி பேரணியாக சென்றனர். இதில் நல்லதேவன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா லிங்கம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சதீஷ்குமார் கிளைச் செயலாளர்கள் கூழு உயர்நான்...
தமிழகம்

தென்காசி மாவட்ட பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்கள் தங்கள் மனுக்களை அளிப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பின் படி, தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு வழங்குவதற்காக வரும் பொதுமக்கள் திங்கள் கிழமை நடைபெறும் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டு காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை மனுக்களை வழங்கலாம். இதர அலுவலக பணி நாட்களில் மாவட்ட ஆட்சித்தலைவரை நேரில் சந்தித்து மனு வழங்க வரும் பொதுமக்கள் பார்வையாளர்கள் நேரமான பிற்பகல் 3.00 மணி முதல் 4.00 மணி வரை மட்டும் தங்களது மனுக்களை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேற்படி நேரம் தவிர்த்து பிற அலுவலக நேரங்களில் மனு அளிக்க வரும் பொதுமக்கள் தங்களது மனுக்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள மனுக்கள் பெட்டியில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் பொதுமக்கள் வசதிக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள...
தமிழகம்

திருமங்கலம் அருகே அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகள், மாநில அளவில் நடைபெறும் ஜூடோ, குத்துச்சண்டை போட்டிக்கு தேர்வு – திமுக சார்பில் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் ஊக்கத்தொகை அளித்து கௌரவிப்பு.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி கல்லுப்பட்டியில் உள்ள காந்தி நிகேதன் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் மாணவிகள், சமிக்ஷா , பூமாரி ஆகிய இருவர் மாநில அளவில் நடைபெறும் விளையாட்டு போட்டியில் ஜூடோ பிரிவு மற்றும் குத்துச்சண்டை பிரிவில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு திமுக சார்பில் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன், ஊக்க தொகையாக ரூபாய் 5000/- வீதம் அளித்தும்,சால்வை அணிவித்தும் கௌரவப்படுத்தினார்.அரசு பள்ளி மாணவிகள், இதுபோன்ற தற்காப்புக் கலைகளிலும் முன்னிலை பெற்று வர வேண்டும் என வாழ்த்து தெரிவித்தார். செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்...
தமிழகம்

உசிலம்பட்டியில் தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் வகையில் குப்பைகளை வீடு வீடாக சென்று சேகரித்த நகர மன்ற தலைவர்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நகராட்சி சார்பில் எனது குப்பை எனது பொறுப்பு என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு வார்டுகளிலும் நேரடியாக சென்று குப்பைகளை எவ்வாறு பிரித்துக் கொடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நகர மன்ற தலைவர் சகுந்தலா தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் வகையில் அவர்களுக்கு மாலை அணிவித்து சால்வை அணிவித்து ஒரு நாள் விடுப்பு அளித்து அவர்களுடைய வேலையே நகராட்சி சார்பில் வீடு வீடாக சென்று குப்பையிலே சேகரித்து வருகின்றனர். தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் வகையில் இந்த செயலில் ஈடுபட்டு வரும் நகராட்சி அதிகாரிகளை கண்டு பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். இந்நிகழ்ச்சியில் நகராட்சி துணைத் தலைவர் தேன்மொழி நகராட்சி பொறுப்பு ஆணையாளர் பாண்டி தாய் இருபதாவது வார்டு நகர மன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் சுகாதாரத்துறை ஆய்வாளர் சிவக்குமார் உட்பட...
தமிழகம்

திருவில்லிபுத்தூரில், உரம் விற்பனைக் கடையின் கதவை உடைத்து பணம் திருட்டு

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் நம்பிநாயுடு தெரு பகுதியைச் சேர்ந்தவர் முத்துச்சாமி (52). இவர் மடவார் வளாகம் பகுதியில் உரம் விற்பனை செய்யும் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். நேற்று வழக்கம் போல கடையை திறப்பதற்காக முத்துச்சாமி சென்றபோது, கடையின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். கடையில் இருந்த மேஜையின் பூட்டு உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 30 ஆயிரம் ரூபாய் பணம் திருடு போனதைக் கண்டு மேலும் அதிர்ச்சியடைந்தார். இது குறித்து முத்துச்சாமி, திருவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்...
தமிழகம்

அருப்புக்கோட்டை அருகே 2 பேர் வெட்டி படுகொலை… 3 பேர் மதுரை நீதிமன்றத்தில் சரண்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை புறவழிச்சாலை பகுதியில் உள்ள காந்தி நகர் அருகே, சபரி மற்றும் அவரது உறவினர் ரத்தினவேல்பாண்டியன் இருவரும் நேற்று முன்தினம் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். நேற்று காலை அவர்களது உடல்கள் மீட்கப்பட்டது. இந்த இரட்டைக் கொலை சம்பவம் அருப்புக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக சம்பவ இடத்தை மதுரை சரக டி.ஐ.ஜி பொன்னி நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். சம்பவம் குறித்து அருப்புக்கோட்டை நகர் காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். போலீசார் விசாரணையில், திருச்சுழி அருகேயுள்ள உடையனம்பட்டி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ராக்கம்மாள்(52), கடந்த மார்ச் மாதம், குடும்பப்பிரச்சினை காரணமாக உறவினர்களால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக திருச்சுழி போலீசார் 5 பேரை கைது செய்தனர். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய சபரி (36) ஜாமீனில், சிறையிலிருந்து வெளியே...
தமிழகம்

நாள் பதிவேடே இல்லாத அய்யலூர் பேரூராட்சி அலுவலகம்!! நொந்துகொள்ளும் ஆர்.டி.ஐ ஆர்வலர்!

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், அய்யலூர் அருகே வேங்கனூரை சேர்ந்தவர் செம்.மகிடேஸ்வரன். இவர் தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர். இவர் அய்யலூர் பேரூராட்சியின் சில ஆவணங்களை நேரடியாக கள ஆய்வு செய்ய விண்ணப்பித்திருக்கிறார். ஆனால் இவரின் மனு காரணமே இல்லாமல் பல மாதங்களாக அலைகழிக்கப்பட்டிருக்கிறது. பிறகு மேல்முறையீட்டின் மூலம் கள ஆய்வுக்கான வாய்ப்பை பெற்ற இவர் பேரூராட்சியின் நாள் பதிவேட்டை பார்வையிட கேட்டிருக்கிறார். இதில்தான் பேரூராட்சியின் தினசரி வரவு செலவு கணக்கு விபரங்கள் பதியப்பட்டிருக்கும். ஆய்வின் போது அலுவலகத்தில் இருந்த இளநிலை உதவியாளர் அல்லிமுத்து முறையான பதிலளிக்காமல் முழித்திருக்கிறார். ஆய்வின் போது பொது தகவல் அலுவலராக இருந்து கடமையாற்ற வேண்டிய பேரூராட்சி செயல் அலுவலர் அலுவலகத்தில் இல்லாததால் அவருக்கு போன் செய்து நாள் பதிவேடு குறித்து கேள்வி எழுப்புகையில் உரிய பதிலளிக்காமல் இடையிலேயே போனை கட்...
1 424 425 426 427 428 556
Page 426 of 556

Right Click & View Source is disabled.

error: Content is protected !!