வேலூரில் நாளை 14 ஆயிரம்பேர் காவலர்களுக்கு எழுத்து தேர்வு, 1200 போலீசார் பாதுகாப்பு ஈடுப்படவுள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் நாளை 27-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை 15 தேர்வு மையங்களில் ஆண்கள் 12799 பேரும், பெண்கள் 2192 பேர் உள்ளிட்ட 14,991 பேர் காவலர் எழுத்து தேர்வு எழுத உள்ளனர். இதுதொடர்பாக காவல்துறை செய்ய வேண்டிய பணிகள் குறித்து அறிவுரை கூட்டம் வேலூர் விஜடி அரங்கில் நடந்தது. இதில் மாவட்ட எஸ்.பி.ராஜேஷ்கண்ணன் கலந்துகொண்டு காவல்துறையினருக்கு அறிவுரை வழங்கினார். 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்...
