பாலாறு, தேனாறு ஓடிய தமிழ்நாட்டில் டாஸ்மாக் பார்கள் ஓடும் அவல நிலை
கல்விச்சாலைகள் செய்வோம் என்று சொன்ன தமிழ் நாட்டிலே, இன்றைக்கு பார்சாலைகளாக மாறிவிட்டன. அம்மா காலத்திலும் 500டாஸ்மார்க் கடைகள், எடப்பாடியார் காலத்தில் 500 டாஸ்மார்க் கடைகள் மூடப்பட்டன. இளைய சமுதாயத்தை காப்பதற்கு நீதியரசர்கள் முன் வைத்திருக்கிற கேள்விகளுக்கு உரிய நடவடிக்கை எடுப்பதற்கு அரசு முன்வருமா? சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி. போதைப் பொருள்கள் பெரும் அச்சத்தை ஏற்பட்டு கேள்விக்குறியாக்குகிற இந்த அபாயகரமான சூழ்நிலையை, அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் தொடர்ந்து இந்த அரசை வலியுறுத்தி வருகிறார்கள். ஆளுநரிடம் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் போதை பொருள் குறித்து, இந்த அரசு நடவடிக்கை எடுக்க தவறியதை சுட்டிக்காட்டி உள்ளார். தமிழ்நாட்டிலே சட்ட விரோதமாக போதை பொருள் தடுப்பு நடவடிக்கை என்பது மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிற சூழ்நிலையிலே, அதைவிட இன்றைக்கு அதிகாரப்பூர்வமாக டாஸ்மாக் கடைகள் 24...
