மதுரை மாவட்டம் பேச்சிகுளத்தில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது
மதுரை மாவட்டம் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பேச்சிகுளம் அய்யனார்புரத்தில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் மாவட்ட கால்நடை துறை இணை இயக்குனர் நடராஜகுமார் மற்றும் உதவி இயக்குநர் சரவணன் ஆகியோரின் உத்தரவின்படி பேச்சிகுளம் ஊராட்சி மன்ற தலைவர் ராஜலட்சுமி வாசு தலைமையில் துணைத் தலைவர் கார்த்திக் பாண்டி முன்னிலையில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கால்நடை உதவி மருத்துவர்கள் தேன்மொழி, சிந்து, ராமலட்சுமி ஆகியோர் மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி, கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் நோய் தடுப்பூசி, சினை பரிசோதனை, செயற்கை முறை கருவூட்டல்,கன்று மற்றும் ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம், சிகிச்சை பணி, மருந்து கொடுத்தும். மேலும் கால்நடைகளுக்கு எந்த மாதிரியான தீவனங்களை வழங்க வேண்டும் என்றும் ஆலோசனை தெரிவித்தனர். கால்நடைகளுக்கு தடுப்பு கலவை, ஊறுகாய் புல்...
