ஆம்பூர் அருகே மலைபாம்பின் பிடியிலிலிருந்து பஞ்சாயத்து பம்பு ஆப்ரேட்டர் மீட்பு
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கைலாசகிரி மலை அடிவாரத்தில் 10 அடி நீளமுள்ள ஒரு மலைபாம்பை பொதுமக்கள் பிடிக்க முற்பட்டனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த பஞ்சாயத்து பம்ப் ஆபரேட்டர் சங்கர் பிடிக்க முயன்றபோது, அவரின் காலை மலைப்பாம்பு பிடித்து கொண்டது. இதனால் சங்கருக்கு மூச்சுதிணறியது. பொதுமக்களால்சங்கரை மீட்க முடியவில்லை. தகவல் அறிந்தவனத்துறையினர் விரைந்து வந்து சங்கர் உடலில் இருந்த பாம்பை விடுத்துகாப்பு காட்டில் விட்டனர். உயிர்பிழைத்ததை எண்ணி சங்கர் பெருமூச்சிவிட்டார். செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்...
