பாலமேடு பகுதியில் ஜல்லிக்கட்டு கோவில் காளைகள் திருட்டு – போலீஸ் தீவிர விசாரணை
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள முடுவார்பட்டி கிராமத்தில் ஸ்ரீ மஞ்சமலை சுவாமி கோவில் பங்காளிகளுக்கு பாத்தியப்பட்ட கோவில் ஜல்லிக்கட்டு காளை, மற்றும் அதே ஊரில் உள்ள சிவனாண்டி என்பவரின் காளை, கோடாங்கிபட்டி கிராமத்தில் சரவணன் என்பவரின் ஜல்லிக்கட்டு காளை உட்பட 3 காளைகள் வெவ்வேறு இடங்களில் ஒரே நாள் இரவில் காணாமல் போனது. தைப்பொங்கல் என்றாலே நாம் அனைவருக்கும் நினைவில் வருவது உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி தான். இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில் ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பவர்கள் தங்களது காளைகளை இப்பொழுதிலிருந்தே களத்தில் இறங்கி வீறு கொண்டு விளையாட தயார்படுத்தி வருகின்றனர். இப்பகுதியில் ஜல்லிக்கட்டு காளைகளை தங்களது வீட்டில் ஒரு பிள்ளையாக வளர்த்து தெய்வமாக வணங்கி பராமரித்து வருகின்றனர். இந்த நிலையில் உலகப் புகழ்பெற்ற...









