ராஜபாளையம் அருகே குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள கோழிப்பண்ணையால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக குற்றச்சாட்டி அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே புத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட இனாம் கோவில்பட்டி இந்திரா காலனி பகுதியில் சுமார் 30 குடும்பங்களை நூற்றுக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த ஐந்து வருடங்களாக பழனிச்சாமி என்பவர் கோழி பண்ணை நடத்தி வருகிறார். அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோழிப்பண்ணை அமைப்பதற்கு தொடக்கத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். மேலும் கோழி பண்ணை ஆரம்பித்த காலகட்டத்தில் இருந்து இறந்த கோழிகளை அப்புறப்படுத்துவது கோழி கழிவுகளை சுகாதாரத்திற்க்கு கேடு விளைவிக்கும் விதமாக சாலைகளில் வீசுவது போன்ற செயல்பாட்டினால் பல்வேறு விதமான நோய் தொற்று ஏற்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இவ்வாறு இறக்கும் கோழிகளை நாய்கள் இழுத்துக் கொண்டு வந்து குடியிருப்பு பகுதியில் வீசி செல்வதால் ஈக்கள் மற்றும் கொசு தொல்லை அதிகரித்துள்ளதாகவும் இதன் காரணமாக குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு உட்பட பல்வேறு நோய் தாக்கம்...

