தமிழகம்

தமிழகம்

சோழவந்தான் ஏழாவது வார்டில் பேரூராட்சி கவுன்சிலர் கணேசன் தலைமையில் முன்னாள் தமிழக முதல்வர் எம்ஜிஆர் நினைவு நாளையொட்டி அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

மதுரை மாவட்டம் சோழவந்தான் ஏழாவது வார்டு வட்ட பிள்ளையார் கோவிலில் பேரூராட்சி கவுன்சிலர் கணேசன் தலைமையில் முன்னாள் தமிழக முதல்வர் அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் நினைவு நாளை ஒட்டி அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் நிர்வாகிகள் ஏழாவது வார்டு செயலாளர் டிரைவர் மணி, தங்கத்துரை, பாண்டி, அழகர், கென்னடி ,வாத்தியார் மணி உட்பட பலர் கலந்து கொண்டனர். செய்தியாளர் : வி காமேகம், மதுரை மாவட்டம்...
தமிழகம்

பெரியகுளம் பகுதிகளில் செயல்பட்டு வரும் 3 தனியார் மதுபான கடைகளை மூட வலியுறுத்தி பல்வேறு கட்சி சார்பாக போராட்டம்

தேனி மாவட்டம் பெரியகுளம் வைகை அணைசாலைஉள்ள மீனாட்சிபார்பல வருடங்களாக உள்ளது காந்தி சிலை மற்றும் தேனி சாலை பகுதியில் 3 தனியார் மதுபான கடை இயங்கி வருவதால் இந்த கடைகளை மூட வலியுறுத்தி பல்வேறு கட்சி நிர்வாகிகள் மற்றும் பல்வேறு சார்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை நடத்தி தனியார் மதுபான கடையை மூட வலியுறுத்தி மனு அளித்தும் மாவட்ட நிர்வாகம் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததாலும் அதை கண்டிக்கும் விதமாக இன்று பெரியகுளம் புதிய பேருந்து நிலையம் அருகே விசிக, மதிமுக, தமுமுக, CPI, CPI (M), SPDI, இஸ்லாமியர் கூட்டமைப்பு இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிபோன்ற கட்சி சார்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது மூன்று தனியார் மதுபானம் கடை இயங்கி வரும் பிரதான சாலையாக உள்ளதாகவும் வழியாக பள்ளி...
தமிழகம்

5000 தற்காலிக சுகாதார ஆய்வாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் – தமிழ்நாடு சுகாதார மற்றும்.துப்புரவு ஆய்வாளர்கள் நல சங்க கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் அன்பரசு பேட்டி

தமிழ்நாடு சுகாதார மற்றும் துப்புரவு ஆய்வாளர்கள் நலச் சங்கத்தில் மதுரை மாவட்ட அமைப்பு கூட்டம் மதுரை அருகே நாகமலை புதுக்கோட்டை நடைபெற்றது இந்த கூட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாநில பொதுச் செயலாளர் அன்பரசு தற்போது பணி செய்து வரும்.5000 தற்காலிக.சுகாதார ஆய்வாளர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும்.  கொரோனா காலகட்டத்தில் சுகாதார ஆய்வாளராக பணிபுரிந்தவர்களை  தற்போது தமிழக அரசு செயல்படுத்தி வரும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் பணி கிடைக்காத சுகாதார ஆய்வாளர்களுக்கு பணி வழங்க வேண்டும். சுகாதார ஆய்வாளருக்கான பயிற்சியை கடந்த காலங்களில் தமிழக அரசே நடத்தி வந்த நிலையில் தற்போது தனியாரிடம் ஒப்படைத்ததுள்ளதை ரத்து செய்து மீண்டும் தமிழக அரசே நடத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும்.5000 மக்கள் தொகைக்கு ஒரு சுகாதார ஆய்வாளரை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  1989 ஆம் ஆண்டு தமிழக...
தமிழகம்

திருமங்கலத்தில் உள்ள மதுரை தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் தந்தை பெரியாரின் நினைவு நாளை ஒட்டி, அவரது பிரம்மாண்ட திருவுருவப் படத்திற்கு திமுக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள மதுரை தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்டசெயலாளர் மணிமாறன் தலைமையில் , முன்னாள் எம்எல்ஏ லதா அதியமான் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் தனபாண்டியன், பெரியசாமி, ஈஸ்வரன், ராமமூர்த்தி, நாகராஜன், சேடப்பட்டி ஜெயச்சந்திரன் மற்றும் பொதுக்குழு, தலைமைக்குழு ,செயற்குழு உறுப்பினர்கள் உட்பட ஏராளமான திமுக -வினர், நிர்வாகிகள், தந்தை பெரியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு ,அலுவலகம் முன்பு அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட திருவுருவப்படத்திற்கு, மலர் தூவி மரியாதை செலுத்தினர். செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்...
தமிழகம்

திருமங்கலம் கோட்டாட்சியர் அலுவலகத்தை 20- க்கும் மேற்பட்டோர் முற்றுகை – கடந்த ஆட்சி காலத்தில் ஒரு தலைபட்சமாக செயல்பட்டு, வீட்டுமனை பட்டா வழங்கியதாக குற்றச்சாட்டு.

மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சியில் உள்ள பத்தாவது வார்டு பகுதியில், 40 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் மக்களுக்கு இதுவரை, வீட்டுமனை பட்டா வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதால், நகராட்சி கவுன்சிலர் ஜாஹூர் உசேன் ரம்ஜான் பேகம் தலைமையில், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், தங்களுக்குரிய பட்டா வழங்க கோரி 20 - க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள், முற்றுகையிட்டனர் . கடந்த ஆட்சிக்காலத்தில் ஒருதலைப் பட்சமாக செயல்பட்டு, அதிமுக - வினருக்கு சாதகமாக உள்ளவர்களுக்கு மட்டும் வீட்டுமனை பட்டா வழங்கியதால், தாங்கள் 40 ஆண்டுகளுக்கு மேலாக பட்டா கேட்டும் இதுவரை பட்டா வழங்காததால், கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்...
தமிழகம்

முன்னாள் மத்திய இணை அமைச்சர் அன்புமணி ராமதாஸை, தமிழக முதல்வர் ஆக்கிட வலியுறுத்தி விரைவில் கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை நடை பயணம் – பா.ம.க மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் அன்புமணி ராமதாஸை தமிழக முதல்வராக்கிட வலியுறுத்தி, கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை நடைபயணம் மேற்கொள்வதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாவட்ட செயற்குழு கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் கன்னையா, மாவட்ட செயலாளர் வீரக்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட துணை செயலாளர்கள் சக்தி யேந்திரன், சோலைமுத்து, மாவட்ட பொருளாளர் கஸ்தூரி, நிர்வாகிகள் தெய்வம், மகேஸ்வரன், ராஜபாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அமைப்புச் செயலாளர் ராஜாராம் வரவேற்றார். ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்ற இந்த செயற்குழு கூட்டத்தில் ,மாநில பாட்டாளி மக்கள் கட்சி பொருளாளர் கவிஞர் திலகபாமா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார் . மேலும் நிர்வாகிகள் நடராஜன் ,செந்தில்குமார், ராஜ்குமார், செல்வம், மாரிச் செல்வம் ,மதுரை வீரன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள்...
தமிழகம்

கீழக்கரை டிஎஸ்பி சுபாஷ் தலைமையில் மத்திய அதிவிரைவு படையினர் மற்றும் காவல்துறையினர் சார்பாக கீழக்கரை காவல் நிலையத்தில் இருந்து கடற்கரை வரை கடற்கரை வரை கொடி அணிவகுப்பு நடைபெற்றது

தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் தமிழக காவல்துறை தலைவர் உத்தரவின் பேரில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் டிஎஸ்பி சுபாஷ் தலைமையில் மத்திய அதிவிரைவு படையினர் மற்றும் காவல் துறையினர் இணைந்து கீழக்கரை காவல் நிலையத்திலிருந்து கடற்கரை வரை கொடி அணிவகுப்பு நடைபெற்றன.  மேலும் கடற்கரை பகுதிகளில் அதிக அளவில் கடத்தல் மற்றும் குற்றச் சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கும் பொருட்டு இந்த அணிவகுப்பு நடைபெற்றதாக தெரிவித்தனர். செய்தியாளர் சந்தோஷ் சிவம்...
தமிழகம்

கெங்கவல்லி அருகே அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்ற மருத்துவர்

சேலம் மாவட்டம் கூடமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 5 ஆண்டுகளாக மருத்துவ அலுவலராக பணியாற்றி வருபவர் ஹர்ஷிதா 31 இவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் மதுரையில் சேர்ந்த மருத்துவர் புகழ் என்பருடன் திருமணம் நடந்தது கர்ப்பிணியான ஹர்ஷிதா தான் பணியாற்றும் மருத்துவமனையில் தொடர்ந்து பரிசோதனை மேற்கொண்டார் வந்தார்.  இந்த நிலையில் 20 தேதி அவருக்கு பிரசவ வழியில் ஏற்பட்டதும் கூடமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டார் அவருக்கு 21ஆம் தேதி சுகபிரசவத்திற்கு ஆண் குழந்தை பிறந்தது இதை அடுத்து தம்மம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் அலுவலக வேலுமணி மற்றும் மருத்துவர் அரசு மருத்துவர் ஹர்ஷிதா நேரில் வாழ்த்து கூறினார் இது குறித்து அரசு மருத்துவர் ஹர்ஷிதா கூறுகையில் தனியார் மருத்துவமனைக்கு இணையாக தற்போது அரசு மருத்துவமனை மேம்படுத்தப்பட்ட வசதி...
தமிழகம்

ஆதரவற்றோர் இல்லத்திற்கு மெத்தை, புத்தாடை வழங்குதல்

மதுரை, திருநகர் ஆதரவற்றோர் முதியோர் இல்லத்திற்கு உண்ணுங்கள், பருகுங்கள், வீணாக்காதீர்கள் குழுவின் சார்பாக செல்வாபிரபு கெமிக்கல்ஸ் உரிமையாளர் செந்தில் குமார் அவர்கள் 10 மெத்தைகள் மற்றும் புத்தாடைகள் வழங்கினார். இந்நிகழ்வில் இல்ல மேலாளர் கோவிந்தராஜ் மற்றும் சமூக சேவகர்கள் ஷேக்மஸ்தான், நூருல்லாஹ் கலந்து கொண்டனர்....
தமிழகம்

பாதுகாப்பாற்ற முறையில் திரிந்த மூதாட்டியை மாவட்ட நீதிமன்ற உத்தரவுபடி மீட்ட தன்னார்வ தொண்டு நிறுவனம்

மதுரை மாவட்ட குடும்பநல நீதிமன்ற நீதிபதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கிணங்க சாலை ஓரத்தில் பாதுகாப்பற்ற நிலையில் சுற்றி திரிந்து வந்த முதியவர் ராமலட்சுமி (வயது 62) என்பவருக்கு வழங்கப்பட்ட உத்தரவின் படி அவரது கணவர் மற்றும் பிள்ளைகள் மூலம் பராமரிப்பு தொகையுடன் முதியோர் இல்லத்தில் பாதுகாப்புடன் தங்குவதற்கு இன்று மாவட்ட சமூக நல அலுவலர் திருமகள் மற்றும் பாதுகாப்பு அலுவலர் வாசுகி ஆகியோர் முன்னிலையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு மூத்த குடிமக்கள் உதவி எண் 14567 வாயிலாக திருநகரில் உள்ள சுரபி அறக்கட்டளை நடத்தும் தாய்மடி முதியோர் இல்லத்தில் முதியவரை சேர்த்து பாதுகாப்புடன் தங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.  தாய்மடி இல்ல நிர்வாகி சேதுமுத்துராஜிடம் முதியவர் ஒப்படைக்கப்பட்டுள்ளார். செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்...
1 364 365 366 367 368 563
Page 366 of 563

Right Click & View Source is disabled.

error: Content is protected !!