கவிதை

கவிதை

திறக்காத கதவில்…

வாழ்வின் வட்டத்தை நேரம் நொடி நொடியாய் ஒடித்து சுழல்கிறது தூளியில் ஆடுகிறது குழந்தையின் உயிர் பசியின் விரலில் இறப்பின் கை தெருவில் இரண்டு பூக்கள் வாசம் வாடி சாய்கிறது உலகம் பாலருந்தும் குழந்தையின் வயதை வறுமை அருந்தி சுவைக்கிறது அண்ணன் தாயானான் தம்பி சேயானான் மனிதம் குருடானது யாசகம் வாசலில் குழந்தைகளின் சத்தம் திறக்காத கதவில் எழுதியிருந்தது இறைவன் இருக்கிறான் என்று... கவிஞர் பாக்கி...
கவிதை

உள்ளங்களே உழவனின் அகம்

புத்தரிசி பொங்கலில் வெண்மையாய் பொங்குது வாழ்வு பொங்கல் உள்ளங்களே உழவனின் அகம் சுவைக்க சொல்லுங்கள் பொங்கலோ பொங்கல் புலர்ந்த சூரிய கதிர்களில் பொங்கி ஒளிர்கிறது பொங்கல் திருநாள் வெளிச்சம் காலத்தின் தோரணையில் மஞ்சள் நிறம் படர்ந்து இயற்கையின் உதட்டில் பூசணிப்பூ பதித்து வாழ்வெங்கும் வருகிறது தைத்திருநாள் புன்னகை கரும்பின் இனிப்பில் பொங்கி வழிகிறது மங்காத நல்வாழ்வின் தைச்சுவை தை உழவர் திருநாள் தமிழர் பெருநாள் தை துன்பத்தை நறுக்கி மகிழ்வை...
கவிதை

நினைவு தின கவிதாஞ்சலி

குற்றால... அருவியை... போன்று வற்றாத...வள்ளன்மை கொண்டு பொற்கால...ஆட்சியை தந்தவர் முற்கால...முதல்வர் நம் - M G R முக்காலமும் போற்றி மகிழும் முழுமதி இராமச்சந்திரனின் முப்பத்தி ஐந்தாம் - ஆண்டு நினைவு நாள்...அஞ்சலி! மண்ணுக்குள்ளிருந்து பொன்னை...எடுத்து புதையல் ... என்று மகிழ்வாருண்டு! நாங்கள்மட்டும் மண்ணுக்குள் பொன்னை புதைத்து புண்பட்டு வாழ்கிறோம் பொன் மனச்செம்மலின் உண்மை... விசுவாசிகள்! வாழ்க! எம்.ஜி.ஆர்! புகழ்! கவிதாயினி தேவி...
கவிதை

குக்கூ

தனிக் கிளையிலமர்ந்துகொண்டு தனிப் பாடல் பாடுகின்றாய் உன் குரலால் காற்றுக்கு மறு ஜென்மம் அழகான இசை வாழ்வு வாங்கக் கிடைக்காத இசைக் கருவி உனது குரல் புலப்பாடாத இசையருவி நனைக்கின்றாய் துவட்ட முடியாத ஈரம் உனது இசை நீ கூவும் தமிழ் எழுத்து தேன் கூட்டின் வடிவம் பிழிந்து தருகின்றாய் இதயத்தில் இனிக்கிறது உன் பாடல் கேட்டதினால் அப்படியே நிற்கின்றேன் குயிலே நீ மரம் தாவிப்போவதென்றால் எனக்கும் உந்தன் சிறகு...
கவிதை

சொர்க்க வாசல்.

பத்தடி தவிர்த்து புழுதி படிந்த பெரிய வீடும் புழங்காத ஆடம்பரப் பொருட்களும் வறுமையறியா வயிறும் உறங்காத விழிகளும் உறக்கம் கலையாத அலைபேசியும் அலைக்கழிக்கிறது. உன்னை விடவும் ஓடி உழைப்பேன் என்று உயரே பார்த்த கடிகாரம் முக்காலமும் ஓடி எக்காளம் இசைக்கிறது. புயலின் ஆங்கார ஓசை மனதில் புயல் அடித்து ஓய்ந்த அலங்கோல ரீங்காரம் வீட்டில் எதிரே என் பெயர் எழுதிய சோறு எடுத்துக் கொண்டு புறப்பட்டால் எதிர்ப்பட்ட எவ்வளவு பேர்...
கவிதை

ஆதன்

வேகமாகச் சென்று கொண்டிருந்தான் ஆதன்! "உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும்!" என்றேன். "சொல்" என்றான். "உன்னைப் பற்றி இப்படிச் சொன்னார்கள்; எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது" என்றேன். "உன்னிடம் சொல்லப்பட்டது உனக்கான இரகசியம். அதை ஏன் எல்லோரிடமும் சொல்கிறாய்?" என்றான். மேலும் சொன்னான்: "மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என்பது பற்றி எப்போதுமே நான் சிந்திப்பதில்லை. நான் சொல்வதும் செய்வதும் அறமா? என்பது பற்றி மட்டுமே சிந்திக்கிறேன்" என்று. முனைவர் ஜா.சலேத்...
கவிதை

மாற்று!

அன்பை படிக்கா புத்தகம் எதற்கு? அறிந்தார் சொல்லா மொழிகளும் எதற்கு? புரிந்தார் நடக்கா வழிகளும் எதற்கு? போதனை சொல்லா வாழ்த்துக்கள் எதற்கு? நிழல்கள் வீழா மரங்களும் எதற்கு? நெருங்கிச் சுடாத நெருக்கங்கள் எதற்கு? வருத்திச் சொல்லா வார்த்தைகள் எதற்கு? வட்டமிடாத வானமும் எதற்கு? நோக்கமில்லாத செயல்களும் எதற்கு? நோயைத் தொழுகின்ற பழக்கங்கள் எதற்கு? பாசம் மறந்த பார்வைகள் எதற்கு? பற்று வைக்காத கணக்குகள் எதற்கு? சுற்றித் திரியும் கவலைகள் எதற்கு?...
கவிதை

ஒவ்வொரு விடியலும்

சேவல் கொக்கரிக்க பறவைகள் சிறகடிக்க கரும் போர்வை விளக்கி கதிர்விசி எழுந்தது பரிதி மேகங்கள் விலக செவ்வந்தி பூ போல செம்மஞ்சள் பந்தாக தெரிந்தான் ஆதவன் கதிரவனின் கதிர் பட்டு கரும்பச்சை வயல்கள் வெளிர் பச்சை நிறமாக கண் கொள்ளாக் காட்சி ஒவ்வொரு விடியலும் தினம் நமக்கு சொல்லும் இரவானால் பகல் ஒன்று நிச்சயம் உண்டு இருள் மட்டும் வாழ்வல்ல விடியலும் தினமுண்டு நம்பாத மனிதருக்கும் இவ்வுண்மை தினமுண்டு க.அகமத்...
கவிதை

அன்புத்தோழி ஜெயஸ்ரீ : கவிதைகள்

ஆ சொல்லு சோறு ஊட்டினாய் நசுக்கிப் பிசைந்து குழைந்து கலந்து கால இடைவெளிகளோடு நாவில் பூசியதன் நாமங்கள் பல ஈரம் வடித்து வெந்த அச்சோற்றில் இத்தனைப் பூசணிக்காய்களையா மறைப்பாய் பொறுமை அமைதி தத்துவம் தீர்வு என்ற பெயரில் விலகல் புறக்கணிப்பு ஏமாற்று துரோகம் உனதான தப்பித்த வழங்கலை மென்று முழுங்குவேன் சோறல்ல முகத்தில் பூசிய சேறென்று தெரிந்த பின்னும் புழுவாகிய நான் ஆதிவாசியின் சிறுசுடர் நீயாகவே விலகினாய் அனல் பொழியும்...
கவிதை

தீப திருநாள்

தித்திக்கும் தீபாவளி எத்திக்கும் வானவெடி.... காணும் எங்கிலும் கரும்புகைமண்டலம் கார்குழல் உலர்வதாய் கண்டேன் இக்கணம் ஒளியும் ஒலியும் இடியும் மின்னலும் வானுக்கும் மண்ணுக்கும் இடையில் வழக்கமான விழாவின் நடையில் தலை சுற்றும் சங்கு சக்கரம்.. தன்னிலை தீர்ந்ததும் நிற்கும் அக்கணம் பற்ற வைத்த பூத்தொட்டி பூச்சொரிதல்... சூட மறுத்து கூடி நின்று ரசிக்கும் மங்கைய கூட்டம்... சரவெடி சிதறும் நொடி பதறும்படி உதறும் அடி கதறும்படி... தம்பி மத்தாப்பு பிடிக்கும்...
1 2 3 4 8
Page 2 of 8

Right Click & View Source is disabled.

error: Content is protected !!