தமிழகம்

இந்தியா ஆஸ்திரேலியா இணைந்து டெல்லியில் நடத்திய வளரி போட்டியில் சாதனை படைத்த போடி வீரர்கள்:

84views
இந்தியா ஆஸ்திரேலியா இணைந்து தேசிய அளவில் டெல்லியில்-நடைபெற்ற வளரி போட்டியில் தேனி மாவட்டம் போடியைச் சேர்ந்த வீரர்கள் 6 பரிசுகளை பெற்று வந்தனர் இவர்களுக்கு சிலம்பாட்ட வீரர்கள் சார்பில் வரவேற்பு அளித்தனர்
டெல்லியில் நொய்டா மாநிலத்தில் தேசிய அளவில் வளரி போட்டி கடந்த 15ஆம் தேதி நடைபெற்றது இன்டோ பூ மரன்ங் அசோசியேஷன் சார்பில் நடைபெற்றபோட்டியில் ஆஸ்திரேலிய இந்தியா சேர்ந்த அணிகள் கலந்து கொண்டனர் இந்தியா தமிழ்நாட்டில் தேனி மாவட்டத்தில் இருந்துமூன்று அணிகள் கலந்து கொண்டன ஆறு ஈவண்டாக நடைபெற்ற இப் போட்டியில் 3 முதலிடத்தையும் ஒரு இரண்டாம் இடத்தையும் ஒரு மூன்றாம் இடத்தையும் பெற்று வெற்றி பெற்று பரிசுகளையும் பாராட்டு சான்றுகளையும் பெற்று வந்தனர் வெற்றி பெற்று வந்த வீரர்களை வர்மன் சிலம்பு விளையாட்டு கழகம் சார்பில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டு வழி நெடுகிலும் சிலம்பு ஆடியவாறு சிலம்பு வீரர்கள் பரிசுகளை அள்ளி வந்த வீரர்களை அழைத்துச் சென்றனர்
வெற்றி பெற்ற வீரர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் சார்பில் வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்

 

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!