தமிழகம்

தொல் தமிழர் பயிலரங்கம்

17views
வேல்டெக் ரங்கா சங்கு கலைக் கல்லூரியின் தமிழ்த் துறையினரால், வாகை 2026-உடன் இணைந்து தொல் தமிழர் பயிலரங்கம், 23 ஜூலை 2026 அன்று சிறப்பாக நடத்தப்பட்டது.
நிகழ்வில் வரவேற்பு உரையாற்றினார் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் M. அபிராமி .
இந்நிகழ்வில் மதிப்பிற்குரிய முதல்வர் முனைவர் A. V. K. சாந்தி அவர்கள் கலந்துகொண்டு, தொல் தமிழர் குறித்து எழுச்சிமிகு உரையாற்றினார். அவர் உரையாற்றும் பொழுது,;”தமிழகத்தின் பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரம், இவற்றை இன்றைய தலைமுறை அறிந்து கொண்டு, அதன் சிறப்பை உணர வேண்டும். அது தற்கால வாழ்க்கைக்குப் பெரிதும் பயன்படும்” என்றார்.

பேராசிரியர் ஜ.ஜெனார்தனன் தொல் தமிழர் குறித்த விரிவான விளக்கத்தைக் கூறி பயிலரங்கில் சிறப்புரை ஆற்றினார்.
இந்நிகழ்வை பேராசிரியர் முனைவர் செ சு நா சந்திரசேகரன், பேராசிரியர் க.சரவணன். ஜ. ஜெனார்தனன் ஆகிய பேராசிரியர்கள் ஒருங்கிணைப்பு செய்திருந்தனர்.
சுமார் 250 மாணவர்கள் இப்பயிலரங்கில் கலந்து கொண்டனர். பேராசிரியர் முனைவர் ரமேஷ் தொகுப்புரை ஆற்றினார். பேராசிரியர் ராஜதுரை நன்றியுரை கூறினார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!