தமிழகம்

மதுரையில் நடைபெற்ற தட்டச்சு தேர்வில் தன்னம்பிக்கையுடன் ஒரு கையில் தட்டச்சு செய்து தேர்வு எழுதிய மாற்றுத்திறனாளி பெண்

85views
மதுரையை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண் முருகேஸ்வரி பட்டப்படிப்பு படித்துள்ளார். குடும்ப வறுமை காரணமாக வேலைக்கு செல்ல முயன்றும் மாற்றுத்திறனாளி என்பதால் நிராகரிக்கப்பட்டுள்ளார். எனவே ஒரு தனியார் தட்டச்சு நிறுவனத்தில் பயிற்சிக்காக சேர்ந்து கடுமையாக பயிற்சி பெற்றுள்ளார்.
இந்த நிலையில் இன்று மதுரை தனியார் கல்லூரியில் நடைபெற்ற தட்டச்சு தேர்வில் ஒரு கையில் தட்டச்சு செய்து அசத்தியுள்ளார்.
மேலும் இதற்கு தன் நண்பர்கள் உதவியதாகவும் மற்றவர்கள் ஒரு மணி நேரம் பயிற்சி செய்தால் தான் மூன்று மணி நேரம் பயிற்சி செய்ததாகவும் தன்னை போல் உள்ள மற்ற மாற்றுத்திறனாளிகளும் தங்கள் திறமையை வெளிக் கொண்டுவர முயற்சி செய்ய வேண்டும் என்று முருகேஸ்வரி தெரிவித்தார்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!