தமிழகம்

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதிகளில் மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

38views
மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் இன்று காலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பாக சோழவந்தான் குருவித்துறை வாடிப்பட்டி மன்னாடிமங்கலம் திருவேடகம் மேலக்கால் தச்சம்பத்துபோன்ற பகுதிகள் விவசாயம் நிறைந்த பகுதியாக உள்ளது.
இந்த பகுதிகளில் இன்று காலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது இதனால் விவசாய வேலைகளுக்கு செல்பவர்களும் விவசாய பணிகளுக்காக செல்பவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது மேலும் பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் தங்களின் வீடுகளுக்கு செல்ல முடியாமல் சிரமப்பட்டனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!