தமிழகம்

பாலமேடு அருகே மோசமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

95views
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் இருந்து கச்சைகட்டி, மேட்டுப்பட்டி, சாத்தையாறு அனை வழியாக பாலமேடு செல்லும் பிரதான சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
ஆங்காங்கே ஆளை விழுங்கும் பள்ளங்களும் மழைக்காலங்களில் சேரும் சகதியுமாகவும் காணப்படுகின்றன.

குறிப்பாக சாத்தையார் அணைய ஒட்டிய மேற்பகுதிகள் மிகவும் மோசமான நிலையில் மேடு பள்ளங்கள் நிறைந்து காணப்படுவதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்;

இதனால் பாலமேடு வாடிப்பட்டி செல்லும் வாகனங்கள் அரசு பேருந்துகள் விபத்துக்குள்ளாகும் சூழ்நிலை உள்ளது. இதனை கருத்தில் கொண்டு உடனடியாக சீரமைக்க வேண்டும்.
மேலும் மலைப் பகுதியாக உள்ளதால் இரவு நேரங்களில் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுகிறது.  சாலையின் இரு புறங்களிலும் உள்ள மரங்களை வெட்ட வேண்டும். இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு சாலையில் நடுவில் உள்ள மேடு பள்ளங்களை சீரமைக்க இப்பகுதி வாகன ஓட்டிகள் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!