தமிழகம்

இலவச மருத்துவம் முகாம்

61views
மதுரை மாவட்டம் பேரையூரில் சந்தன நகர் அரிமா சங்கம் பத்திர எழுத்தர் ராஜா அறக்கட்டளை மதுரை ஹர்சினி காது மூக்கு தொண்டை மருத்துவமனை சார்வில் இலவச இ,என்,டி மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை பேரையூர் பேரூராட்சி தலைவர் கே கே குருசாமி தொடங்கி வைத்தார் வட்டாட்சியர் ரவிச்சந்திரன் டிஎஸ்பி செல்வி இலக்கியா தலைமை தாங்கினர். பேரூராட்சி துணை தலைவர் பாஸ்கர் செயல் அலுவலர் ஜெயதாரா அரசு பெண்கள் பள்ளி தலைமை ஆசிரியர் கிருஷ்ணன் காவல்துறை ஆய்வாளர் காந்தி சார்பு ஆய்வாளர் லட்சுமணன் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு மருத்துவர் ரஜினிகாந்த் நோயாளிகளுக்கு பரிசோதனை செய்தார் அரிமா சங்க நிர்வாகிகள் தலைவர் ஐயப்பன் சுந்தர மகாலிங்கம் மாணிக்கவாசகம் செல்ல பாண்டியன், கவிஞர் எஸ் முருகன் சுப்புராஜ் ஞானசுந்தரம் லுக்மான் சாரதி  நந்தினி ஐயப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர் முகாமில் 251 நோயாளிகள் கலந்து கொண்டனர் 67 நோயாளிகள் இலவச காது கேட்கும் கருவிக்கு. தேர்வு செய்யப்பட்டனர் 37 நோயாளிகள் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர் நிறைவில் முகாம் பொறுப்பாளர் கவிஞர் எஸ் முருகன் நன்றி கூறினார்.
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!